Thursday, July 28, 2016

160000 தொழிலாளர்கள் இன்னமும் லயன் அறைகளில்

நவீன அடிமைத் தனத்­தி­லி­ருந்து தோட்டத் தொழி­லா­ளர்­க­ளை மீட்டு அவர்­களை இந்­திய வம்­சா­வ­ளி­யினர் என அடை­யா­ளப்­ப­டுத்­து­வதை ஒழித்து இலங்­கை­யர்கள் என அடை­யா­ளப்­ப­டுத்தி கௌர­வப்­ப­டுத்த வேண்டும் என நேற்று சபையில் எதிர்க்­கட்­சியின் பிர­தம கொற­டாவும் ஜே.வி.பி. எம்.பி. யுமான அனுரகுமார திசா­நா­யக்க தெரிவித்தார்.

தோட்டத் தொழி­லா­ளர்களின் பிரச்­சி­னை­களை தீர்ப்­ப­தற்கு விசேட அதி­கார சபை­யொன்றை அமைத்து அதற்கு அதிக நிதியை அரசு ஒதுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை மலை­யக மக்­களின் பொரு­ளா­தார உயர்வு மற்றும் வாழ்க்­கைத்­தர மேம்­பாடு தொடர்­பாக ஜே.வி.பி. எம்.பி. அனுர குமார திஸா­நா­யக்க சபை ஒத்­தி­வைப்பு பிரே­ர­ணையை முன்­வைத்து உரை­யாற்­றுகையிலேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.சபையில் அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்;
இலங்கை சுதந்­தி­ர­ம­டைந்து 67 வரு­டங்­க­ளா­கி­விட்­டன. ஆனால் இன்னும் மலை­யகத் தோட்டத் தொழி­லா­ளர்கள் அடிமைத் தன­மான லயன் அறைகளில் கூனிக் குறு­கியே வாழ்­கின்­றனர்.
1,60,000 தோட்டத் தொழி­லா­ளர்கள் இன்னும் லயன் அறைக­ளி­லேயே அடிப்­படை வச­தி­க­ளின்றி வாழ்ந்து வரு­கின்­றனர்.
தோட்­டங்­க­ளி­லி­ருந்து இளை­ஞர்கள், யுவ­திகள் வெளி­யே­று­கின்­றனர். ஆனால் அவர்கள் கல்­வித்­துறை சார்ந்த தொழில்­களை செய்­ய­வில்லை. மாறாக வீட்டு வேலை­க­ளுக்கும் ஹோட்­டல்­களில் மூட்டை தூக்கும் வேலை­க­ளுக்­குமே வரு­கின்­றனர்.
இங்கு ஒரு புதிய சம்­பி­ர­தாயம் உள்­ளது. கொழும்­பி­லுள்­ள­வர்­களின் வீட்டு வேலைக்கு ஆள் தேவை­யென்றால் தோட்­டத்­தி­லி­ருந்து ஒரு பிள்­ளையை கொண்டு வாருங்­களேன் என்றே கேட்­கின்­றனர்.
இந்­நிலை மாற வேண்டும். மாற்ற வேண்டும். கல்வித் துறையில் பின் தங்­கி­யி­ருக்கும் மலை­ய­கத்தில் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும்.
தோட்டத் தொழி­லா­ளர்­களின் வாக்­கு­களை பெற்றுக் கொள்­கின்­றனர். ஆனால் அவர்­க­ளது அடிப்­படை வச­தி­களை செய்து கொடுக்­கப்­ப­டும்­போது பல விட­யங்­களை முன்­வைத்து அடிப்­படை வச­திகள் ஏற்­ப­டுத்­தப்­ப­டு­வ­தில்லை.
நாங்கள் லயன் அறை­களை வழங்­கு­கின்றோம். அதற்கு பதி­லாக குறைந்த கூலிக்கு வேலை செய்ய வேண்டும் என்ற நிபந்­த­னை­க­ளு­ட­னேயே கம்­ப­னிகள் தொழில்­களை வழங்­கு­கின்­றன.
நவீன அடிமைத் தனத்தின் அடை­யாளச் சின்­னங்­க­ளாவே தோட்ட மக்கள் இன்றும் வாழ்­கின்­றனர்.
இந்­தி­யா­வி­லி­ருந்து மலை­ய­கத்­திற்கு தொழி­லா­ளர்கள் கொண்டு வரப்­பட்டு லயன் அறைகளில் அடைத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர். அந்த நிலை­மை­யி­லேயே இன்றும் 160,000 தொழி­லா­ளர்கள் வாழ்­கின்­றனர்.
போஷாக்குக் குறைந்த பிள்­ளை­களின் எண்­ணிக்கை 25 வீதம் அதி­க­ரித்­துள்­ளது. குறைந்த குறைந்த எடையுடன் பிள்­ளைகள் பிறக்­கின்­றனர்.
சௌமியமூர்த்தி தொண்­டமான் மன்றத்திற்கு அரசாங்கம் நிதியை வழங்­கி­யுள்­ளது. 1800 மில்­லியன் வழங்­கப்­பட்­டுள்­ளது. இது தொடர்­பாக கோப் குழு­வுக்கு முன்­வைத்து விசா­ரிக்­கப்­பட வேண்டும்.
கடந்த கால மலை­யகத் தலை­வர்கள் தோட்டத் தொழி­லா­ளர்­களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த நட­வ­டிக்­கைகள் எடுக்­கவில்லை. உயர் பிர­புத்­துவத் தலை­வர்களாக செயற்­பட்­ட­வர்­கள் மலை­யக மக்­களின் வாழ்க்­கையை உயர்த்­த­வில்லை.
தற்­போது புதிய தலை­வர்கள் உரு­வா­கி­யுள்­ளனர். இவர்கள் மலை­யகத் தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு என்ன செய்­கின்­றனர் என்­பதை பொறுத்­தி­ருந்து தான் பார்க்க வேண்டும். அவர்­க­ளது நட­வ­டிக்கை எப்­ப­டி­யுள்­ளது என்­பதை பார்ப்போம்.
அவர்­க­ளுக்கு கிடைக்கும் சம்­பளம் போதாது. அத்­தோடு இவர்கள் இலங்­கையின் பொரு­ளா­தார மேம்­பாட்­டுக்­காக தம்மை அர்ப்­ப­ணித்­த­வர்கள். அதற்­கா­கவே உயிரை அர்ப்­ப­ணித்­த­வர்கள். அவர்­க­ளது சந்­த­தி­யினர் இலங்­கையில் பிறந்­த­வர்கள்.
எனவே ஏன் நாம் அவர்­களை இந்­திய வம்­சா­வ­ளி­யினர் என அடை­யா­ளப்­ப­டுத்த வேண்டும்.? அவ்­வாறு அடை­யா­ளப்­ப­டுத்­து­வதை ஒழித்து அவர்­களை இலங்­கை­யர்­க­ளாக அடை­யா­ளப்­ப­டுத்த வேண்டும்.
அத்­தோடு மலை­யக பெருந்­தோட்ட மக்­களின் பொரு­ளா­தா­ரத்தை வாழ்க்கை தரத்தை மேம்­ப­டுத்த அமைச்­சுக்­களை ஏற்­ப­டுத்­து­வதால் முடி­யாது என்­பதை அடை­யாளம் கண்­டுள்ளோம்.
எனவே விசேட அதி­கார சபை­யொன்றை ஏற்­ப­டுத்தி திறை­சேரி ஊடாக அர­சாங்கம் அதிக நிதியை ஒதுக்க வேண்டும். இதன் மூலம் அம் மக்­களின் பிரச்­சி­னை­களை தீர்க்க முடியும்.
தோட்டங்களில் மக்களுக்கு பாமஸிஸ்ட்கள் மருந்துகள் வழங்கப்படுகின்றனர். இது நியாயமா? அவர்களும் மனிதர்கள். அவர்களுக்கும் கௌரவம் உள்ளது. எனவே அவர்களது கலை, கலாசாரம் பண்பாட்டு விழுமியங்களை பாதுகாத்து மேம்படுத்த வேண்டும்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை கம்பனிகளுக்கு வழங்க முடியாவிட்டால் தோட்டங்களை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்றார்.

2500 ரூபா இடைக்­கால கொடுப்­ப­னவு தீர்­மா­னத்தை இ.தொ.கா.வர­வேற்­கி­றது

தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு இடைக்­கால கொடுப்­ப­ன­வாக 2500 ரூபாவை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அறி­வித்­தி­ருக்­கின்றார். இதனை இலங்­கை­தொ­ழி­லாளர் காங்­கிரஸ் வர­வேற்­கி­றது. இதே­நேரம் இவ் இடைக்­கால கொடுப்­ப­னவை இரண்டு மாதங்­க­ளுக்கு மாத்­திரம் மட்­டுப்­ப­டுத்தி விடாது கூட்டு ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­படும் வரை வழங்­கு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வேண்டும் என்று காங்­கி­ரஸின் பொதுச் செய­லா­ளரும் நுவ­ரெ­லியா மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ஆறு­முகன் தொண்­டமான் தெரி­வித்தார்.
அக்­க­ரப்­பத்­தனை கிளாஸ்கோ நெதர்ஸ்டன், டய­கம வெஸ்ட் முதலாம் பிரிவு ஆகிய பகு­தி­களில் நேற்று புதன்­கி­ழமை பாதை திறப்பு நிகழ்­வு­களில் பிர­தம அதி­தி­யாக கலந்து கொண்டு உரை­யாற்­றும்­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.
அவர் அங்கு மேலும் தெரி­வித்­த­தா­வது,தோட்­டத்­தொ­ழி­லா­ள­ருக்­கான நிவா­ர­ண­மாக 2500 ரூபாவை வழங்­கு­வ­தற்கு அர­சா­ங்கம் நட­வ­டிக்கை எடுத்­துள்­ளதை இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் வர­வேற்­கின்­றது. எனினும் இந்­தக்­கொ­டுப்­ப­ன­வா­னது கூட்டு ஒப்­பந்தம் கைச்­சாத்­திடப்படும் வரை வழங்­கப்­ப­ட­வேண்டும் என்­பதை இ.தொ.கா. விரும்­பு­கி­றது.
சம்­பள அதி­க­ரிப்­பு ­தொ­டர்­பான பேச்­சு­வார்த்­தைகள் இடம்­பெறும் சந்­தர்­ப்பங்­களில் அது வெற்­றி­ய­ளிக்­காது இருப்­ப­தற்கு குழப்­ப­க­ர­மான செயற்­பா­டு­களில் சில தரப்­புக்கள் ஈடு­ப­டு­கின்­றன. இதுவே சம்­பள அதி­க­ரிப்­பு தாம­த­மா­வ­தற்கு பிர­தான கார­ண­மாகும்.
எவ்­வாறிருப்­பினும் தொழி­லா­ளர்­க­ளு­டைய சம்­பள பிரச்­சி­னையை இலங்கை தொழி­லாளர் காங்­கி­ர­ஸினால் மாத்­தி­ரமே தீர்த்து வைக்க முடியும் என்­பதை யாரும் மறந்து விடக்­கூ­டாது. இ.தொ.கா.வே அனைத்து பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்­வை­பெற்­றுத்­தரும் என்­பதை மக்கள் நன்கு அறிந்து வைத்­தி­ருக்­கின்­றனர்.
இம்­முறை தேயிலை விலையில் மாற்றம் ஏற்­பட்­டுள்­ள­மையால் நாம் முன்­வைத்த சம்­பள தொகையை பெற்­றுக்­கொள்­வதில் தாமதம் ஏற்­ப­டு­கின்­றது. ஆனாலும் நாம் நிர்­ண­யித்த சம்­ப­ளத்தை அடைந்தே தீருவோம்.
இதற்­கான பேச்­சு­வார்த்­தைகள் நடத்­தப்­பட்டு வந்­தி­ருந்­தாலும் கூட அடுத்த மாதம் முதல் வாரம் அளவில் மீண்டும் ஒரு பேச்­சு­வார்த்தை நடத்­தப்­ப­ட­வி­ரு­க்கின்­றது.
அந்த பேச்­சு­வார்த்­தையில் இணக்­கப்­பாட்­டுக்கு வர­மு­டியும் என எதிர்­பார்க்­கின்றோம். இருந்தும் தொழி­லா­ளர்கள் எதிர்­பார்க்கும் சம்­ப­ளத்தை நாம் பெற்றே தீருவோம் என்­பதில் ஐயம் கொள்­ளத்­தே­வை­யில்லை.
சிலர் தொழி­லா­ளர்­க­ளுக்கு கிடைக்கும் உரி­மை­களில் தலை­யிட்டு தங்­களை வளர்த்து கொள்­வ­தற்­காக மக்­களை திசை திருப்பி வரு­கின்­றனர். ஆனால் காங்­கி­ரஸின் சேவை தொடர்பில் இவர்­க­ளு­க்கு நன்கு தெரியும். எந்த நேரத்தில் எதை பெறு­வார்கள் தொழி­லா­ளர்­களின் உரி­மையை வென்­றெ­டுக்க எவ்­வா­றான சந்­தர்ப்­பத்தில் எவ்­வாறு செயல்­ப­டு­வார்கள் என்­பதை அறிந்­த­வர்கள் தான் இன்று மக்கள் மத்­தியில் அவர்­களை திசை திருப்­பு­வ­தற்­காக கிளம்பி வந்­துள்­ளார்கள்.
தோட்ட நிர்­வா­கங்கள் தோட்ட காணி­களை காடு­க­ளாக்கிவிட்டு, தொழி­லா­ளர்­குறைப்­பையும் நிகழ்த்தி விட்டு தொழி­லுக்கு வரா­விட்டால் தேயிலை காணி­களை மூடு­வ­தாக அறி­விக்­கின்­றனர்.
அவ்வாறு நடந்தால் கவலைப்பட தேவையில்லை. மூடும் தேயிலை காணிகளை அந்தந்த தோட்டத்தில் வாழ்கின்ற தொழிலாளர்களுக்கு பிரித்து கொடுத்து விட்டு அவர்கள் செல்லலாம். காரணம் இந்த தேயிலை காணிகளை உருவாக்கியவர்கள் தொழிலாளர்கள் தான். தம் உழைப்பின் சக்தியை முழுமையாக தேயிலை காணிக்கே செலவழித்து விட்டு யாரோ சொன்னார்கள் என்பதற்காக பூர்வீகத்தை இழக்க எமது மக்கள் முட் டாள்கள் அல்ல என்றார்.