Thursday, February 11, 2016

சம்பள அதிகரிப்பு தொடர்பான சட்டமூல கூட்டு ஒப்­பந்தம் முர­ணாக காணப்­ப­டு­கின்­றது

அடிப்­படைச் சம்­பள அதி­க­ரிப்பு தொடர்­பான சட்­ட­மூ­லத்தை பெருந்­தோட்டத் துறையில் நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு கூட்டு ஒப்­பந்தம் முர­ணாக காணப்­ப­டு­கின்­றது. அது­தொ­டர்­பி­லான உரிய மீளாய்­வு­களைச் செய்­ய­வேண்­டு­மென பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.தில­கராஜ் சம்­பளச் சபைக் கட்­டளைச் சட்­டத்தின் கீழ் ஒழுங்கு விதி­களை அங்­கீ­க­ரிப்­பது குறித்த பிரே­ரணை குறித்த விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே  தெரி­வித்தார்.

அவர் மேலும் அங்கு உரையாற்றுகையில்வீட்டு வேலை­யாட்­களை உள்­வாங்கக் கூடி­ய­தான சட்ட நடை­மு­றை­யொன்று இந்­தி­யாவில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இந்­தி­யாவின் ராஜஸ்­தானில் வீட்டு வேலை­யாட்­க­ளாகப் பணி­யாற்­று­ப­வர்­க­ளுக்கு 540 ரூபா குறைந்த பட்ச வேத­னமா­க வழங்­கப்­பட வேண்­டு­மென அச்­சட்­டத்தில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளது.
இவ்­வா­றான நிலை­யி­லேயே எமது நாட்டில் உள்ள தொழி­லா­ளர்­க­ளுக்கு அடிப்­படைச் சம்­பளம் தொடர்­பான சட்­ட­மூலம் தொடர்பில் பேசு­கின்றோம். தோட்டத் தொழி­லாளர் விவ­காரம் குறைந்த பட்ச வேதன சட்­டத்தில் உள்­வாங்­கப்­பட வேண்டும் இச்­ச­பையில் பலர் வலி­யு­றுத்­திக்­கொண்­டி­ருக்­கின்­றனர்.

தனியார் துறைக்­கான 2500 ரூபா அதி­க­ரிப்பை பெருந்­தோட்டத் தொழி லா­ளர்­க­ளுக்கும் பெற்­றுக்­கொ­டுத்தி­ருப்­ப­தற்கு எடுத்­தி­ருக்கும் நடவடிக் ­கையை வெற்­றி­யாகக் கருதமுடியும். நாளொன்­றுக்கு குறைந்த பட்ச வேதனம் 400 ரூபா­வா­கவும், மாதாந்தம் 10ஆயிரம் ரூபா­வா­கவும் இருக்கும் என்று குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

எனினும் தோட்­டத்­தொ­ழி­லாளர் விவ­கா­ரத்தில் கூட்டு ஒப்­பந்தம் முறையின் கீழ் செல்­லும்­போதும் அர­சாங்­கத்தின் இந்த குறைந்த வேதன சட்டம் கிடைப்­பது சிக்­க­லுக்­குள்­ளாகும். கூட்டு ஒப்­பந்தம் இதற்கு தடை­யாக அமையும். இத­னால்தான் நாம் தொடர்ந்தும் கூட்டு ஒப்­பந்­தத்தை கேள்­விக்கு உட்­ப­டுத்தி வரு­கிறோம். குறிப்­பாக தொழி­லா­ளர்­களின் வர­வுடன் சம்­பந்­தப்­பட்­ட­தாக கூட்டு ஒப்­பந்தம் காணப்­ப­டு­கி­றது.

தோட்டத் தொழி­லா­ளர்­களின் நிலு­வை­யி­லுள்ள ஊழியர் சேம­லாப நிதி­யத்தை செலுத்­து­வ­தற்­காக தோட்­டங்­களில் உள்ள மரங்­களை வெட்டி அதன்­மூலம் கிடைக்கும் வரு­மா­னத்தை பயன்­ப­டுத்­து­மாறு கடந்த அர­சாங்­கத்­தினால் வழி­மொ­ழி­யப்­பட்­டி­ருந்­தது. இயற்­கையை அழித்­தொ­ழித்­து­விட்டு நிலைத்­தி­ருக்கக் கூடிய அபி­வி­ருத்தி பற்றி எவ்வாறு பேசமுடியும். எனவே இதுபோன்ற செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும். பெருந்தோட்டத்தொழிலாளர்கள் தமது தொழில் மீது பற்றுக்கொண்டவர்களாக இருக்கின்றனர். அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டு சிறந்த எதிர் காலம் உறுதிப்படுத்தப்படவேண்டுமென்றார்.

மலையகத்துக்கான பல்கலைக்கழகத்தை தடுப்பவர்கள் சமூகத்துரோகிகளாவர்

மலை­ய­கத்­திற்­கென்று தனி­யா­ன­தொரு பல்­க­லைக்­க­ழகம் அமைக்­கப்­ப­டு­வது காலத்தின் தேவை­யாகும். இதனை தடுக்க நினைப்­ப­வர்கள் சமூ­கத்தின் துரோ­கி­க­ளாவர் என்று பேரா­சி­ரியர் சோ.சந்­தி­ர­சே­கரன்  மலை­ய­கத்­திற்கு தனி­யான பல்­க­லைக்­க­ழ­க­மொன்று அவ­சி­யம்­தானா? என்பது தொடர்பாக கருத்துக்கேட்ட போது இவ்வாறு தெரிவித்தார்

அவர்  மேலும் தெரி­விக்­கையில், மலை­ய­கத்­திற்கு தனி­யா­ன­தொரு பல்­க­லைக்­க­ழகம் அமைக்­கப்­ப­டு­வதன் அவ­சி­யத்தை நான் கடந்த பத்து ஆண்­டு­க­ளுக்கும் மேலாக வலி­யு­றுத்தி வரு­கின்றேன். இது தொடர்­பாக அர­சி­யல்­வா­தி­க­ளையும் தெளி­வு­ப­டுத்தி இருக்­கின்றேன். மலை­ய­கத்தைச் சேர்ந்த பல புத்­தி­ஜீ­வி­களும் இதனை வர­வேற்றுப் பேசி­யுள்­ளனர். அமரர் பெ.சந்­தி­ர­சே­க­ர­னினால் கடந்த காலத்தில் ஏற்­ப­டுத்­தப்­பட்ட ஆலோ­ச­னைக்­கு­ழுவும் இது பற்றி தீவி­ர­மாக ஆராய்ந்­தது. இந்­நி­லையில் பல்­க­லைக்­க­ழக நிலை­மாறி பல்­க­லைக்­க­ழக கல்­லூரி தொடர்­பிலும் இப்­போது கருத்­துக்கள் தெரி­விக்­கப்­பட்டு வரு­கின்­ற­மையும் தெரிந்த விட­ய­மாகும்.

யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழகம் மற்றும் கிழ­ககு பல்­க­லைக்­க­ழகம் போன்று மலை­ய­கத்­திற்கு தனி­யான ஒரு பல­்க­லைக்­க­ழகம் தேவை என்­ப­தனை பெரும்­பான்மை சிங்­க­ளவர், சிங்­கள மக்கள் கூட எதிர்க்­க­வில்லை. எனினும் மலை­ய­கத்தைச் சேர்ந்த சில விஷ­மிகள் இதனை எதிர்த்து வரு­கின்­றனர். இன ரீதி­யாக பல்­க­லைக்­க­ழகம் அமைக்­கப்­ப­டு­வது பாதக விளை­வு­களை ஏற்­ப­டுத்தும் என்றும் இவர்கள் கருத்து தெரி­விக்­கின்­றனர். இத்­த­கை­யோரை மலை­யக சமூ­கத்தின் துரோ­கி­க­ளா­கவே கருதவேண்டி இருக்­கின்­றது. இவர்கள் தமது நிலை­யினை மாற்றிக் கொண்டு சமூக முன்­னேற்றம் கருதி செயற்­பட வேண்டும்.

மலை­ய­கத்­துக்­கென்று தனி­யாக ஒரு பல்­க­லைக்­க­ழகம் ஏற்­ப­டுத்­தப்­ப­டு­மானால் மலை­யக சமூ­கத்தின் இனத்­துவ அடை­யாளம் பாது­காக்­கப்­ப­டு­வ­தோடு மேலும் பல நன்­மை­களும் உரு­வாகும் நிலை ஏற்­படும். மலை­யக நாட்டார் பாடல்கள், மலை­யகக் கல்வி, மலை­யக கலா­சாரம், மலை­யக சிந்­தனை, மலை­யக பாரம்­ப­ரியம் என்ற ரீதியில் மலை­யகம் தொடர்­பான பல்­வேறு இனத்­துவ அடை­யா­ளங்­க­ளையும் தனி­யா­ன­தொரு பல்­க­லைக்­க­ழகம் ஏற்­ப­டுத்­தப்­படும் பட்­சத்தில் உறு­திப்­ப­டுத்திக் கொள்­ளக்­கூ­டிய வாய்ப்பு உரு­வாகும்.

காமன் கூத்து உள்­ளிட்ட மேலும் பல தனித்­து­வ­மான விட­யங்­களை வேறு பல்­க­லைக்­க­ழக செயற்­பா­டு­களின் ஊடாக நாம் எதிர்­பார்க்க முடி­யாது. அதே­வேளை மலை­யக பல்­க­லைக்­க­ழ­கத்தின் மூல­மாக இத்­த­கைய விட­யங்­களை நாம் உள்­வாங்கிக் கொள்­ளவும் உறு­திப்­ப­டுத்திக் கொள்­ளவும் முடியும் என்­ப­த­னையும் குறிப்­பிட்டுக் கூற வேண்­டி­யுள்­ளது. மேலும் மலை­யகம் தொடர்­பான கற்கை நெறி­க­ளை நாம் மலை­ய­கத்­திற்­கென்று தனி­யான பல்­க­லைக்­க­ழகம் அமைக்­கப்­படும் பட்­சத்தில் ஏற்­ப­டுத்திக் கொள்ள முடியும். சமூக அபி­வி­ருத்­திக்கு இத்­த­கைய நிலை­மைகள் பெரிதும் உந்து சக்­தி­யாக அமையும் என்­ப­த­னையும் மறுப்­ப­தற்­கில்லை.

தனி­யான பல்­க­லைக்­க­ழகம் அமைக்கும் நட­வ­டிக்­கைகள் தாம­த­மாகும் சந்­தர்ப்­பத்தில் தனி­யான பல்­க­லைக்­க­ழக கல்­லூரி ஒன்­றினை மலை­ய­கத்­துக்­கென்று அமைப்­பது தொடர்பில் கவனம் செலுத்­து­வதில் தப்­பில்லை. ஆனாலும் கல்­லூ­ரியைக் காட்­டிலும் தனி­யான பல்­க­லைக்­க­ழ­கமே காலத்தின் தேவை­யாகும் என்­ப­தனை யாரும் மறந்து விடக்­கூ­டாது.

தனி­யான பல்­க­லைக்­க­ழகம் மலை­ய­கத்­துக்­கென்று ஏற்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்­பது தொடர்பில் மலை­யக அர­சி­யல்­வா­திகள், புத்­தி­ஜீ­விகள் உள்­ளிட்ட சகல தரப்­பி­னரும் ஒன்­று­பட்டு குரல் கொடுக்க வேண்டும். கருத்து முரண்பாடுகள் இவ்விடயத்தில் களையப்படுதல் வேண்டும்.
ஏனைய சமூ­கங்­களைப் போன்று நாம் பல்­வேறு வெற்றி இலக்­கு­க­ளையும் அடைந்து கொள்ள வேண்டும். இதற்கு தனி­யான பல்­க­லைக்­க­ழகம் வாய்ப்­ப­ளிக்கும் என்­பது உறு­தி­யாகும். வீணான சாட்­டுக்­களைக் கூறி தனி­யான பல்­க­லைக்­க­ழகம் அமைக்கும் நிலைமை இழுத்­த­டிக்­கப்­ப­டு­மானால் எதிர்­கால சந்­த­தி­யினர் நிச்­சயம் பழி சொல்வர் என்­ப­த­னையும் நினை­வு­ப­டுத்த விரும்­பு­கின்றேன். சிந்தித்து செயல்படுவோம் என்றார்.

தொழிலாளர்கள் வீதியில் இறங்கி போராடும் காலம் வெகு தொலைவில் இல்லை

தோட்­டத்­தொ­ழி­லா­ளர்­களின் வாக்­கு­களைப் பெற்றுக் கொண்டு பாரா­ளு­மன்றம் வந்து ஒரு வருடம் கழிந்தும் அம் மக்­க­ளுக்­கான சம்­பள உயர்வை பெற்றுக் கொடுக்­க­வில்லை. வீடுகள் அமைத்துக் கொடுக்­கப்­ப­டவும் இல்லை. எனவே தோட்டத் தொழி­லா­ளர்கள் வீதியில் இறங்கிப் போராடும் காலம் வெகு தொலைவில் இல்­லை­யென ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி எம்.பி. மஹிந்­தா­னந்த அளுத்­க­மகே பாரா­ளு­மன்­றத்தில் வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற சம்­பள சபைகள் கட்­டளைச் சட்­டத்தின் கீழ் ஒழுங்­கு­விதி அங்­கீக­ரிக்­கப்­ப­டு­வ­தற்­காக தொழி­லாளர் அமைச்சு முன்­வைத்த பிரே­ரணை விவா­தத்தில் உரை­யாற்றும் தெரி­வித்தார்.

வாழ்­வ­தற்கு வழி­யில்­லாது மல­ச­ல­கூட வச­தியும் இல்­லாது தோட்டத் தொழி­லா­ளர்கள் கஷ்­டத்தில் வாழ்­கின்­றனர். மலை­யக தோட்டத் தொழி­லா­ளர்கள் இன்று தொழில் இல்­லாமல், வாழ்­வ­தற்கு வழி­யில்­லாமல் பெரும் கஷ்­டத்தில் வாழ்­கின்­றனர்.

ஜன­வ­சம உட்­பட பல கம்­ப­னிகள் தொழி­லா­ளர்­க­ளுக்கு சம்­பளத்தை நேரத்­திற்கு வழங்­கு­வ­தில்லை. ஊழியர் சேம­லாப நிதி, ஊழியர் நம்­பிக்கை நிதி செலுத்­தப்­ப­டு­வ­தில்லை. தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு ஒரு நாள் சம்­ப­ள­மாக ரூபா 620 தான் வழங்­கப்­ப­டு­கி­றது. 3 நாட்கள் தான் வேலை கிடைக்­கின்­றது. இந்தச் சம்­ப­ளத்தை பெற்றுக் கொண்டு எவ்­வாறு தோட்டத் தொழி­லா­ளர்கள் வாழ முடியும். தோட்டத் தொழி­லா­ள­ருக்கு வீடுகள் அமைத்துக் கொடுப்போம். சம்­பள உயர்வை வழங்­குவோம் என உறு­தி­மொ­ழி­களை வழங்கி பாரா­ளு­மன்றம் வந்­த­வர்கள் இன்று உறு­தி­மொ­ழி­களை காற்றில் பறக்­க­விட்டு அம் மக்­களை ஏமாற்றி கஷ்­டத்தில் தள்­ளி­விட்­டுள்­ளனர்.

2500 ரூபா சம்­பள உயர்வும் இல்லை. வீடும் இல்­லாமல் தோட்டத் தொழி­லா­ளர்கள் லயன் அறைகளிலேயே வாழ்­கின்­றனர். தோட்டத் தொழி­லா­ளர்­களை ஏமாற்­றா­தீர்கள். அவர்­க­ளுக்கு வாழ்­வ­தற்கு வழி ஏற்­ப­டுத்திக் கொடுங்கள். தொழி­லா­ளர்­க­ள் இன்று மல­சல கூட வச­தியும் இல்­லா­ம­லேயே வாழ்­கின்­றனர். எனவே மலை­யக மக்­களின் பிரச்­சி­னை­களை வட­ப­குதி அர­சி­யல்­வா­திகள் இங்கு சபையில் பேச வேண்டும். மலை­ய­கத்தை சேர்ந்­த­வர்கள் கிளி­நொச்­சியிலும் வாழ்­கின்­றனர்.

அத்­தோடு தொழி­லா­ளர்­களின் சம்­ப­ளத்­தி­லி­ருந்து மரண சகாய நிதி­யாக ரூபா 100 அறவிடப்படுகிறது. ஆனால் தொழி­லாளி இறக்கும் போது மரண நிதி­யு­தவி வழங்­கப்படுவ­தில்லை. சவப்­பெட்டி கொள்வனவு செய்யவும் கொடுப்பனவு வழங்கப்படுவதில்லை.

தொழிலாளி இறந்து 3 வருடங்களுக்குப் பிறகுதான் மரண உதவி, நிதியுதவி வழங்கப்படுகிறது. இது தான் இன்றைய தோட்டத் தொழிலாளர்களின் நிலையாகும் என்றார்.