Tuesday, August 11, 2009

ஊவா மாகாணசபைத் தேர்தலில 30 வீதமானோர் வாக்களிக்கவில்லை.

இம் முறை இடம்பெற்ற ஊவா மாகாணசபைத் தேர்தலில் இரண்டு இலட்சத்துக்கும் அதிகமானோர்(30 வீதம்) வாக்களிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் 8,75,456 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த போதும் 6,13,133 பேரே வாக்களித்துள்ளனர். கூடுதலாக பதுளை மாவட்டத்திலேயே 1,68,199 பேர் வாக்களிக்கவில்லை. இதில் பெரும்பாலானோருக்கு அடையாள அட்டை இல்லாத தோட்டத் தொழிலாளர்களே அடங்குகின்றனர்.
இலங்கையை அடையாளப்படுத்திய மலையக மாணவன்.

கடந்த ஜூலை 10ம் திகதி தொடக்கம் 22ம் திகதி வரை ஜேர்மனியின் பேர்மன் நகரில் இடம்பெற்ற 50வது சர்வதேச ஒலிம்பியாட் கணிதப் போட்டியில் மத்திய மாகாணத்தின் மத்திய கல்லூரி ஹைலன்ட்ஸ் மாணவரான லோகேஸ்வரன் லஜனுகன் உலக நாடுகளின் தர வரிசையில் 50 வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஆரம்பத்தில் இலங்கை 88வது ஸ்தானத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
1959ம் ஆண்டு தொடக்கம் இடம்பெற்று வரும் ஒலிம்பியாட் சர்வதெச கணிதப் போட்டிகளில் இலங்கை முதன் முதலாக பங்கேற்ற ஆண்டு 1955ம் ஆண்டு ஆகும். 20 வயதுக்குட்பட்டவர்கள் பங்குகொள்ளும் இப் போட்டியில் ஒவ்வொரு நாட்டிலிருந்தும் தலா 06 பேர் மட்டுமே பங்கு கொள்ள முடியும். இம் முறை 104 நாடுகளிலிருந்து 565 பேர் பங்குபற்றினர். இலங்கை சார்பாக பங்கு கொண்ட 06 பேரில் கொழும்பு லோகேஸ்வரன் லஜனுகன் மற்றும் கொழும்பு றோயல் கல்லூரி மாணவன் புத்திமா கம்லத் ஆகியோர் வெங்கலப் பதங்கங்களை பெற்றனர் ஏனைய மூவர் கௌரவ சான்றிதழை பெற்றனர்.
1996ம் ஆண்டு ஹட்டன் ஹைலன்ட்ஸ் கல்லூரி மாணவர்கள் இப் போட்களில் முதன் முறையாக பங்கு கொண்டனர்.
இம் முறை வெண்கலப்பதக்கம் வென்ற மாணவன் லஜனுகன் மொரட்டுவ பல்கலைகழகத்தில் பொறியிய் பீட மாணவராவார். கடந்த வாரம் இவருக்கு ஹட்டனில் மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.