Tuesday, May 17, 2016

தொழிலாளர்களை போராட்டத்துக்கு அழைக்கும் நடவடிக்கை தற்கொலைக்கு ஒப்பானது

1000 ரூபா சம்பள உயர்வுக்காக தொழிலாளர்களை போராட அழைப்பது வேடிக்கையானது மட்டுமல்ல அது கம்பனிகளுக்கு துணை போகும் செயலாகும் என மக்கள் தொழிலாளர் காங்கிரஸ் செயலாளர் சட்டத்தரணி இ.தம்பையா விடுத்துள்ள அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளார்.  

அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது கூட்டு ஒப்பந்தம் சட்டப்படி இரத்துச் செய்யப்படாலம் இருக்கும் இந்நிலையில் நாளாந்த சம்பளமாக 1000 ரூபா வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானதாகும். 

இந்தப்பின்னணியில் கூட்டு ஒப்பந்தத்துக்கு வெளியில் நாளாந்த 100 ரூபா மாதாந்தம் 2500 ரூபா சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்கள் தொழிலாளர்களை போராட்டத்துக்கு அழைத்திருப்பது வேடிக்கையானது என்பதுடன் 1000 ரூபா சம்பள உயர்வு கோரிக்கையை காட்டிக்கொடுத்து பெருந்தோட்ட கம்பனிக்கு துணை போகும் நடவடிக்கையாகும். 

1000 ரூபா சம்பள உயர்வு கோரிக்கையை இ.தொ.கா முன்மொழிந்திருந்தாலும் அது அனைத்துப் பெருந்தோட்டக் தொழிலாளர்களின் கோரிக்கையாகியுள்ளது. நியாயமான அக்கோரிக்கையை நாளாந்தம் ரூபா 100 என்ற கோரிக்கைக்கு தாத்துவது நேர்மையான அணுகுமுறையாகாது. 

அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட்ட நிலையில் தனியார் ஊழியர்களுக்கு 2,500 ரூபா வழங்கும்படி தனி;யார் துறையை கட்டாயப்படுத்துவதற்காக 2016ம் ஆண்டு 4ம் இல நிவாரணப்படி சட்டம் அமுலில் உள்ளது. அதன் அடிப்படையில் தோட்டத் தொழிலாளர்களுக்கும் சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க வேண்டுமென தொழில் அமைச்சர் ஜோன் செனிவிரத்ன கூற காரணம் தோட்டத் தொழிலாளிகளுக்கு கூட்டு ஒப்பந்த அடிப்படையில் சம்பள உயர்வு தொடர்பில் இணக்கம் காணப்படாமைகும். 

நாளாந்தம் 1000 ரூபா சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்கப் போவதாக தொழிலாளர்களை போராட்டத்துக்கு அழைப்பது வேடிக்கையானது. இதுவொரு வகையில் தொழிலாளர்களின் 1000 ரூபா கோரிக்கையை காட்டிக்கொடுத்துவ்pட்டு பெருந்தோட்டக் கம்பனிக்கு துணைபோவதாகும். இது வாழ்க்கை செலவு படியாக ரூ 17.50 வேண்டும் என போராடிய போது வெறும் 10 சதம் போதும் இணங்கிய காட்டிக்கொடுப்பு வரலாற்றை நினைவுப்படுத்துகிறது. 

ரூபா 1000 நாளாந்த சம்பளமாக இ.தொ.கா உட்பட கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் உரிய நடவடிக்கைகளை எடுக்காது வாய் சவாடல்களை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. 

ஒரு கட்டத்தில் ரூபாய் 800 அதிகமாக வழங்க கம்பனிகளுக்கு உடன்பாடு இருந்த நிலையில் 2014ம் சட்டத்தின் படியான நாளாந்தம் ரூபா 100 சம்பள உயர்வுக்காக அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் போராடப் போவதுடன் அதற்கு தொழிலாளர்களை அழைப்பது வேடிக்கையானது என்பதுடன் அவர்களை தற்கொலைக்கு தள்ளுவதற்கு ஒப்பானதாகும் என்று கூறியுள்ளார். 

நன்றி- தமிழ் மிரர்

சீரற்ற காலநிலை தோட்டத்தொழிலாளர் குடியிருப்புக்கள் மண்ணில் புதையுண்டன

சீரற்ற காலநிலையால் மலையகத்தில் மண்சரிவும், போக்குவரத்து துண்டிப்பும் வெள்ளப்பெருக்கும் காணப்படுகின்றன.  17-05-2016 செவ்வாய்கிழமை மாலைவரை கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி மலையகத்தில் கடுகண்ணாவ பிரதேசத்தில் 06 பேர் மண்ணில் புதையுண்டுள்ளனர். இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 16-05-2016 அன்று காலையில் தெஹியோவிட்ட பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 03 பேர் புதையுண்டநிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.  

புளத்ஹோபிட்டிய களுபஹனவத்த தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவினால் 17 பேர் காணாமற் போயுள்ளதாகவும் இப்பெருந்தோட்ட மக்கள் குடியிருப்புக்கள் மண்ணுக்குள் புதையுண்டுள்ளதாக கேகாலை மாவட்ட இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளதாக செய்திகள் குறிப்பிடுகின்றன.

அதேபோல் இரத்தினபுரி பிரதேசத்தில் இம்புல்பே என்னும் இடத்தில் மண்சரிவினால் ஒருவர் உயரிழந்துள்ளார். மேலும் ஒருவர் எஹலியகொட  பிரதேசத்தில் மண்ணில் புதையுண்டு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

கம்பளை அட்டபாகை மொரகொல்ல தனியார் தோட்டத்தில் நான்கு வீடுகளைக் கொண்ட லயன் குடியிருப்பு மண்ணில் புதையுண்டுள்ளதாகவும் இக்குடியிருப்புக்களில் குடியிருந்த நான்கு குடும்பங்களைச்சேர்ந்த 25 பேர் கம்பளை கலத்த சனசமூக நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 


இதேபோன்று கண்டி தெல்தோட்ட பகுதியில்17-05-2016 அன்று பிற்பகல் 2.00 மணியளவில் லயன் அறைக்குள் வெடிப்பு ஏற்பட்டதால் ஊற்று நீர் அதிகமாக வரத் தொடங்கியுள்ளது 13 குடும்பங்களைச் சேர்ந்த 59 பேர் பாடசாலை கட்;டிடம் ஒன்றில் தங்கியுள்ளனர். தெல்தோட்ட கலஹா பிரதான வீதியில் தோட்ட பிரதேசமொன்றின் வீதியில் பெரும் மரமொன்று சரிந்து வீழ்ந்ததில் போக்குவரத்துக்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.

நுவரெலியா பிரதேச சபையின் லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லிப்பகலை தோட்டத்தில் ஏற்பட்டுள்ள மண்சரிவு அபாயத்தினால் லிப்பகலை தோட்ட 10 குடும்பங்களைச் சார்ந்த லயன் குடியிருப்பில் மக்கள் அச்சமடைந்த நிலையில் மாற்று இடங்களுக்கு செல்ல முடியாத நிலையில் இருப்பதாகத் தெரியவருகிறது. 

தொடர்ந்து பெய்துவரும் அடைமழை காரணமாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் தங்களது சிறு வருமானத்திற்காக மேற்கொண்டு வந்த காய்கறி செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்கள் விவசாய பயிர்கள் வெள்ளத்தால் அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். இதனால் அக்கரப்பத்தனை, டயகம, ஹோல்புரூக் போன்ற பகுதிகளில் ஆற்றோரங்களில் விவசாயம் செய்தவர்களுக்கு பெரும் இழப்புக்கள் ஏற்பட்டுள்ளனர். 

ஹட்டன் ரொத்தஸ் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக அப்பிரதேசத்தில் ஐந்து குடியிருப்பாளர்களை உடனடியாக அவ்விடத்திலிருந்து வெளியேறுமாறு கட்டிட அகழ்வாராய்ச்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
நாவலப்பிட்டி கினிகத்தேன பிரதான வீதியில் பாதை சரிந்து வீழ்ந்துள்ளது. அப்பகுதியில் ஒரு வழிபாதையாக ஏற்படுத்தப்பட்டு சாரதிகள் மிகக் கவனவாக வாகனத்தை செலுத்துமாறு கோரப்பட்டுள்ளது. 

கோலை மாவட்டத்தில் ரூவான்வெல, அங்குருவெல, கரவனெல்ல, தல்துவ ஆகிய பகுதிகளில் வெள்ளம் இன்னமும் தேங்கிய நிலையில் காணப்படுகின்றது. 

இதேவேளை அரநாயக்கா மாவனெல்ல எரங்கபிட்டிய, எனும் பகுதியில் கிராமமொன்றில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக சுமார் 200 இற்கு மேற்பட்ட வீடுகள் பாhதிக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. பாதுகாப்புக்கருதி அப்பிரதேசத்துக்கு உதவியாளர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அறியகிடைக்கிறது.