Wednesday, March 18, 2009

2015 இல் மலையக மக்களுக்கு சகலதும் கிடைக்கும் வகையிலான வாழ்க்கைத்தரம் - மத்திய மாகாண ஆளுநர்

2015ம் ஆண்டளவில் மத்திய மலைநாட்டு மக்களுக்கு சகல சௌபாக்கியங்களும் பொருந்திய வாழ்க்கைத் தரமொன்றை பெற்றுக் கொடுக்கும் மாகாண சபையாக மத்திய மாகாணசபையாக அமையும் என மத்திய மகாணசபையின் ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ மத்திய மாகாணசபையின் 5வது அமர்வின் கொள்கை விளக்க உரையில் தெரிவித்தார்.
மேல் மாகாணத்தில் வேட்பாளர்களுக்கு விசேட அடையாள அட்டை

மேல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் சகல வேட்பாளர்களுக்கும் விசேட அடையாள அட்டை வழங்க நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது. சகல வேட் பாளர்களுக்கும் புகைப்படத்துடன் கூடிய தாக அடையாள அட்டை வழங்கப்படும் என மேலதிக தேர்தல் ஆணையாளர் டபிள்யூ.பி. சுமணசிறி தெரிவித்தார். தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது ஏற்படும் பிரச்சினைகளை தவிர்ப் பதற்காகவும் வேட்பாளர்களின் பாதுகாப்பு க்காகவும் அவர்களுக்கு அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. அரசியல் கட்சிகளின் கோரிக்கைப் படி தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டதாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.