Thursday, January 2, 2014

எப்போது எங்களுக்காக கதைக்கப் போகின்றீர்கள் ?



தேர்தல் காலங்­களில் மட்டும் சிரித்த முகத்­தோடு எம்மை தேடி வரும் பிர­தி­நி­தி­க­ளுக்கு 

கல்வி, சுகா­தரம், விளை­யாட்டு, போக்­கு­ரத்துதொழில் குடி­யி­ருப்பு என சகல அம்­சங்­க­ளிலும் பின்­தங்­கி­யி­ருக்கும் எங்கள் பிரச்­சி­னைகள் பற்றி கதைக்க வேண்­டிய இடத்தில் நீங்கள் எவ­ருமே கதைக்­க­வில்லை என்­பதை அறிந்து மிகவும் மன­வே­தனை அடை­கிறோம். பாரா­ளு­மன்­றத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் 7 பேரில் ஐந்து பேர் அர­சாங்­கத்­துடன் இணைந்­தி­ருக்­கின்­றீர்கள். இதில் ஒருவர் அமைச்சர் மற்­று­மொ­ருவர் பிரதி அமைச்சர். வடக்கு மற்றும் கிழக்கு பிர­தேச மக்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­துவோர் ஏதோ ஒரு வழியில் தமது மக்­களின் பிரச்­சி­னை­களை பாரா­ளு­மன்­றத்தில் முன்­வைக்­கின்ற போது நீங்கள் ஏன் அந்த அமர்­வு­க­ளுக்கே செல்­வ­தில்லை என்­பது எமக்கு புரி­ய­வில்லை. இது நீங்கள் பிர­தி­நி­தித்­துவம் செய்வது மலை­யக சமூ­கத்­திற்கு செய்யும் பெருந்­து­ரோகம் என்­பதை அறி­வீர்­களா?

 2014 ஆம் ஆண்­டுக்­கான வரவு செலவு திட்ட குழு நிலை விவா­தத்தில் மலை­யக மக்­களின் மேற்­கூ­றிய பிரச்­சி­னைகள் பற்றி எவ­ருமே மறந்து கூட வாய்­தி­றக்­க­வில்­லையே? இந்த விவா­தங்கள் டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி ஆரம்­பிக்­கப்­பட்­டது. இதில் மலை­யக மக்­க­ளோடு சம்­பந்­தப்­பட்ட அமைச்சு விவா­தங்­களில் முக்­கி­ய­மா­ன­தாக விளங்கும் கல்வி அமைச்சு குறித்த விவா­தங்­களில் நீங்கள் எவ­ருமே கலந்து கொள்­ள­வே­யில்லை எனும் போது மலை­யக கல்வி தொடர்பில் நீங்கள் வைத்­தி­ருக்கும் அக்­கறை எமக்கு நன்­றாக விளங்­கு­கி­றது. உங்­க­ளுக்கு தெரி­யா­விட்­டாலும் இந்த மாதத்தில் திகதி வாரி­யாக இடம்­பெற்ற குழு­நிலை விவா­தங்­க­ளையும் அதில் நீங்கள் ஒன்றில் கூட நீங்கள் பேச­வில்லை என்­ப­தையும் இங்கு தர கட­மைப்­பட்­டுள்ளேன்.

1) 2 ஆம் திகதி கல்வி மற்றும் உயர்­கல்வி அமைச்சு பற்­றிய விவாதம் இடம்­பெற்­றது. மலை­யக பகு­தி­களில் நிலவும் ஆசி­ரியர் பற்­றாக்­குறை பாட­சாலை வளப்­பற்­றாக்­குறை இடை­வி­ல­கல்கள் தகுதி வாய்ந்த மாண­வர்­க­ளுக்கு உயர்­கல்­வியை தொடர்­வதில் உள்ள இடர்கள் என கல்­வித்­து­றையில் காணப்­படும் பல பிரச்­சி­னைகள் பற்றி கதைக்க தவறி விட்­டீர்கள். 

2) 7 ஆம் திகதி சிறுவர் அபி­வி­ருத்தி மற்றும் மகளிர் விவ­கார அமைச்சு மீதான விவாதம் இடம்­பெற்­றது. மலை­ய­கத்­தி­லி­ருந்தே அதிக சிறு­வர்கள் இன்று தலை­ந­கரில் வேலைக்கு அமர்த்­தப்­ப­டு­கின்­றனர் என்றும் அவர்கள் நீண்ட கால­மாக உயி­ரா­பத்­தையும் துஷ்­பி­ர­யோ­கத்­தையும்  சந்­தித்து வரு­கின்­றனர் என்­பதும் உங்­க­ளுக்கு தெரி­யா­த­தல்ல.  பெருந்­தோட்­டப்­பெண்­களின் கட்­டாய கருத்­தடை பிரச்­சி­னைகள் வேலைத்­த­ளத்தில் அவர்கள் முகங்­கொ­டுக்கும் பிரச்­சி­னைகள் என எவ்­வ­ளவோ உள்­ளதே அதைப்­பற்­றியும் நீங்கள் எவரும் கதைக்­க­வில்லை.

3) 9ஆம் திகதி வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு மற்றும் ஊக்­கு­விப்பு நல­னோம்­புகை குறித்த அமைச்சு விவாதம் இடம்­பெற்­றது. பெருந்­தோட்­டப்­ப­கு­தி­க­ளி­லி­ருந்து வெளி­நாட்டு வேலை­வாய்ப்­புக்கு சென்று பிணங்­க­ளாக திரும்­பிய பெண்­களை மறந்து விட்­டீர்­களா? மலை­யக இளை­ஞர்­க­ளுக்கு தகு­தியின் அடிப்­ப­டையில்  வெளிநாட்டு தொழில் பெற்­றுத்­தர வேண்டும் என்ற எண்ணம் உங்­க­ளுக்­குக்­கி­டை­யாதா? போலி முக­வர்­களால் மலை­யக இளைஞர் யுவ­திகள் ஏமாற்­றப்­பட்டு வரு­வது குறித்தும் வெளிநாட்டில் தாய் பணி­யாற்றும் போது தந்தை அல்­லது  உற­வி­னர்­க­ளுடன் இருக்கும் பிள்­ளை­களின் பாது­காப்பு குறித்தும் நினைத்­துப்­பார்த்­தீர்­களா? இதற்கும்    மௌனம் தான் உங்கள் பதி­லாக இருந்­தது. 

4)  11 ஆம் திகதி இளைஞர் அலு­வல்கள் மற்றும் திறன் அபி­வி­ருத்தி அமைச்சு மீதான விவாதம்  இடம்­பெற்­றது. இன்று மலை­யக இளை­ஞர்­க­ளைப்­பொ­றுத்­த­வரை தோட்­டப்­பு­றங்­களில் அல்­லது தலை­ந­க­ரங்­க­ளி­லேயே அதி­க­மோனோர்  பணி­யாற்றி வரு­கின்­றனர். ஆசி­ரி­யப்­ப­ணி­களில் உள்­ளீர்த்­துக்­கொண்­ட­வர்­களின் தொகை போதாது. வேலை­யின்றி இருக்கும் இளை­ஞர்கள் பற்­றிய உங்கள் தொலை­நோக்­குப்­பார்வை என்ன? இதை சபையின் கவ­னத்­திற்கு கொண்டு வந்­தி­ருக்­க­லாமே?

5) 13 ஆம் திகதி போக்­கு­வ­ரத்து அமைச்­சுக்­கான விவாதம் இடம்­பெற்­றது. மலை­ய­கத்தில் எத்­த­னைப்­ப­கு­தி­களில் முறை­யான போக்­கு­வ­ரத்து சேவைகள் இல்லை என்­பதை நீங்கள் நன்­றா­கவே அறி­வீர்கள் இகாரணம் அத்­தனை இடங்­க­ளுக்கும் தேர்தல் காலத்தில் உங்கள் பிராடோ மோன்­டரோ ரக வாக­னங்கள் பய­ணித்­தி­ருக்­கின்­றன. பாட­சாலை மாண­வர்­க­ளுக்­காக அர­சாங்­கத்­தினால் கொண்டு வரப்­பட்ட சிசு­ச­ரிய பஸ் சேவைகள் மலை­ய­கத்தின் எந்த பகு­திக்கும் அமுல்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என்­பது சரி உங்­க­ளுக்­குத்­தெ­ரி­யுமா? அது குறித்தும் எவரும் கதைக்­க­வில்லை. 

6) அதே 13 ஆம் திகதி சுகா­தார அமைச்சு மீதான விவா­தமும் இடம்­பெற்­றது. மலை­ய­கத்தில் நிலவும் மந்த போசனை மற்றும் வைத்­தி­ய­சா­லை­களில் நிலவும் வளப்­பற்­றாக்­குறை உங்­க­ளுக்கு நன்­றா­கவே தெரியும். இந்த வரு­டத்தில் மட்டும் நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் 19 கர்ப்­பி­ணித்­ தாய்­மார்கள் மர­ம­டைந்­துள்­ளமை உங்­க­ளுக்­குத்­தெ­ரி­யுமா? டிக்­கோயா கிளங்கன் வைத்­தி­ய­சா­லையில் நிலவி வரும் உள்­ளக பிரச்­சி­னைகள் நாள்­தோறும் பத்­தி­ரி­கை­களில் வெளிவ­ரு­கின்­றன. அதை பார்த்தும் பாரா­தது போல் காலத்தை கடத்­து­கின்­றீர்­களே? சிசு மரண வீதம்இ சுகா­தார சீர்­கே­டுகள் குறித்து சபையின் கவ­னத்­திற்­குக்­கொண்டு வந்­தி­ருக்­க­லாமே? 

7) 14 ஆம் திகதி விளை­யாட்­டுத்­துறை அமைச்சு மீதான விவாதம் இடம்­பெற்­றது. தேசிய ரீதி­யான போட்­டி­களில் பங்­கு­பற்ற தகு­தி­யி­ருந்தும் மலை­யக இளைஞர் யுவ­தி­க­ளுக்கு உரிய ஊக்­கு­விப்பு இன்­மையால் பிர­கா­சிக்க முடி­யா­தது குறித்து பேசி­யி­ருக்­கலாம் ஏனெனில் விளை­யாட்­டுத்­துறை அமைச்­சரும் மலை­யக நக­ரான நாவ­லப்­பிட்­டியை சேர்ந்­தவர் தானே ? தோட்­டப்­ப­கு­தி­களில் உரிய மைதானம் இல்­லாமை இருக்கும் மைதா­னங்கள் பரா­ம­ரிக்­கப்­ப­டாமல் இருக்­கின்­றமை குறித்தும் சபையின் கவ­னத்­திற்கு கொண்டு வந்­தி­ருக்­கலாம். ஆனால் உங்­களில் பலர் இந்த விவா­தத்­திற்கு சமூகம் அளித்­தி­ருக்­கவே இல்லை.

8) 14 ஆம் திக­தி­யன்றே உள்­ளூ­ராட்சி மற்றும் மாகாண சபைகள் தொடர்­பான அமைச்சு மீதான விவாதம் இடம்­பெற்­றது. இது மிகவும் முக்­கி­ய­மா­ன­தாகும். உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்கு பிர­தி­நி­திகள் தெரிவு செய்­யப்­பட்­டி­ருக்­கின்ற போதிலும் தோட்­டப்­பு­றங்­க­ளுக்கு சேவை­களை வழங்க முடி­யாத நிலை இருப்­பதை சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கலாம். இந்த சந்­தர்ப்­பத்தை மலை­யக பிர­தி­நி­தி­க­ளான நீங்கள் தவ­ற­விட்டு விட்­டீர்கள். 

மேற்­கு­றிப்­பிட்ட அமைச்­சு­களின் விவாதம் தொடர்பில் நீங்கள் எவ­ருமே வாய்­தி­றக்­காத விட­யத்தை சில ஊட­கங்கள் வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தன. அதை வாசித்து விட்டு உங்­களால் எந்த அறிக்­கை­யையும் விட முடி­ய­வில்லை. ஆனால் 18 ஆம் திகதி இடம்­பெற்ற விவா­தத்தின் போது ஊட­கங்­களில் வெளிவந்த செய்­தியை முன்­னி­லைப்­ப­டுத்தி உங்­களில் சிலர் கதைத்­தீர்கள். அது கண் குரு­டான பின்பு சூரிய வணக்­கத்­திற்கு தயா­ரா­ன­தற்கு சமன். 
இப்­போது எம்­மத்­தியில் எழுந்­தி­ருக்கும் கேள்வி இது தான். மேற்­கு­றிப்­பிட்ட அனைத்து பிரச்­சி­னை­களும் இருந்தும் குறிப்­பிட்ட அமைச்சு மீதான விவா­தத்தில் நீங்கள் கதைக்­கா­ம­லி­ருந்­த­தற்குக் காரணம் இந்த பிரச்­சி­னைகள் வெளிப்­பட்டால் உங்­க­ளுக்கு பிரச்­சினை வந்து விடும் என்றா அல்­லது இவ்­வ­ளவு பிரச்­சி­னை­களை வைத்­துக்­கொண்டு இத்­தனை வரு­டங்­க­ளாக இந்த மக்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­திக்­கொண்­டி­ருக்­கி­றீர்­களே என யாராவது கேள்வி எழுப்பி விடுவார்களே என்ற அச்சமா? 

நீங்கள் இவ்வாறு வாய்மூடி மௌனிகளாக இருப்பதால் மலையக மக்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை என ஏனையோரும் ஏன் அரசாங்கமும் கூட நினைக்க வாய்ப்புள்ளதே ? சபை விவாதத்தில் கதைக்காமல் ஜனாதிபதியுடன் தனியே சென்று கதைப்பதில் என்ன பிரயோசனம் உண்டு? நீங்கள்  என்ன கதைத்தீர்கள் என்பது யாருக்குத்தெரியும்? பாராளுமன்றத்தில் கதைத்தால் தானே அனைவருக்கும் தெரியும்? அடுத்த வருடம் இடம்பெறும் முக்கிய விவாதங்களில் சரி கதைப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள் இந்த மக்கள். இந்த வருடம் நீங்கள் கதைக்காமலிருந்ததற்கு  ஏதாவது காரணங்கள் இருந்தால் ஊடகங்களுக்கு தெரிவிக்கலாமே.

இப்­ப­டிக்கு உங்­க­ளுக்கு 
வாக்­க­ளித்­த­வர்­களில் ஒருவன்
(நன்றி சூரியகாந்தி)