Monday, August 18, 2014

வருமானத்தில் 25 சதவீதம் தாங்களுக்கு வேண்டும்

மாணிக்கக்கற்களை அகழ்வதற்காக அனுமதிப் பத்திரங்களை வழங்கும் ஏலத்தின் ஊடாக பெறப்படும் வருமானத்தில் 25 சதவீதம் குறித்த தோட்ட தொழிலாளிகளுக்கு வழங்கப்பட வேண்டுமெனக்கோரி பொகவந்தலாவை சீனாகொல தோட்ட தொழிலாளிகள் இன்று திங்கட்கிழமை காலை 10.00 மணி முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

 
பொகவந்தலாவையில் மாணிக்கக்கற்களை மீண்டும் அகழ்வதற்கான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கு தேசிய மாணிக்கக்கல் அகழ்வு திணைக்களத்தினால் இம்மாதம் 28ஆம் திகதி ஏலத்தில் விடுவதற்கு தீர்மானித்துள்ளனர்.
 
இந்த மாணிக்கக்கல் அகழ்வை மேற்கொள்வதற்கு தாங்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை ஆனால் இதில் கிடைக்கும் வருமானத்தில் 25 சதவீதம் தாங்களுக்கு வேண்டும் என்றும் இதை கொடுத்தால்தான் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுப்பட தாங்கள் இடமளிப்பதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளிகள் தெரிவித்தனர்.
 
ஆனால் தேசிய மாணிக்ககல் அகழ்வு திணைக்களம் 10 சதவீதத்தையே தொழிலாளிகளுக்கு தருவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது