Tuesday, January 5, 2016

தோட்ட உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை குறைப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

கொத்­மலை எல்­பொடை தோட்டத் தொழி­லா­ளர்கள் நேற்று திங்­கட்­கி­ழமை ஒரு மணி நேர பணிப் பகிஷ்­க­ரிப்பில் ஈடு­பட்­டனர். தோட்ட உத்­தி­யோ­கத்­தர்­களின் எண்­ணிக்­கையை குறைக்கும் நட­வ­டிக்­கையை கண்­டித்தே இப் பணிப் பகிஷ்­க­ரிப்பு இடம்­பெற்­றது. எல்­பொடை தோட்டம் நான்கு பிரி­வு­களைக் கொண்ட ஒரு தோட்­ட­மாகும். இத்­தோட்­டத்தின் பரப்பும் அதி­க­மா­னது. இங்கு ஒரு தோட்டப் பிரிவில் 5 தொடக்கம் 6 உத்­தி­யோ­கத்­தர்கள் ஏற்­க­னவே கட­மை­யாற்­றி­யுள்­ளனர். எனினும் அண்மைக் கால­மாக உத்­தி­யோ­கத்தர் குறைப்பு கணி­ச­மாக இடம்­பெற்­றது. இதன் கார­ண­மாக தோட்­டங்களை பரா­ம­ரிப்­பது முதல் நிர்­வாக ரீதி­யான செயற்­பா­டுகள் வரை அனைத்து மட்­டங்­க­ளிலும் திருப்­தியற்ற நிலைமை மேலெ­ழுந்­துள்­ளது.
 
மேலும் தேயிலைச் செடிகள் முறை­யாக பரா­ம­ரிக்­கப்­ப­டாமை கார­ண­மாக உற்­பத்தி வீழ்ச்சி நிலை ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் சில தேயிலை மலைகள் காடாக இருப்­ப­தா­கவும் இலங்கை தொழி­லாளர் காங்­கி­ரஸின் உப தலைவர் எம்.எஸ்.எஸ். செல்­ல­முத்து சுட்­டிக்­காட்­டு­கின்றார். அத்­தோடு கம்­ப­னி­யி­னரின் சில முறை­யற்ற போக்­குகள் எல்­பொடை தோட்­டத்தின் எதிர்­கா­லத்தை கேள்விக் குறி­யாக்கி இருப்­ப­தா­கவும் அவர் மேலும் தெரிவிக்­கின்றார்.
 
தோட்ட உத்­தி­யோ­கத்­தர்­களின் எண்­ணிக்கை குறைக்­கப்­ப­டு­வதன் கார­ண­மாக தாம் பல்­வேறு அசௌ­க­ரி­யங்­க­ளுக்கும் முகம்­கொ­டுத்து வரு­வ­தாக தொழி­லா­ளர்கள் கருத்து தெரி­விக்­கின்­றனர். இதனால் பாரிய பின்விளை­வுகள் ஏற்­படும் என்­பதும் அவர்­களின் கருத்­தாக உள்­ளது. இந்­நி­லையில் தோட்ட உத்­தி­யோ­கத்­தர்­களின் எண்­ணிக்கை குறைக்­கப்­ப­டு­வதை கண்­டித்து தொழி­லா­ளர்கள் காலை ஒரு மணி நேர பணிப் பகிஷ்­க­ரிப்பில் ஈடு­பட்­டனர். இந்­நி­லையில் இ.தொ.கா. வின் உப தலைவர் எம்.எஸ்.எஸ். செல்­ல­முத்து தோட்ட நிர்­வா­கத்­துடன் பேச்­சு­வார்த்­தையில் ஈடு­பட்டார். இப் பேச்­சு­வார்த்­தையின் போது விரைவில் கம்­ப­னி­யி­ன­ருடன் பேச்­சு­வார்த்தை நடத்தி தோட்ட உத்­தி­யோ­கத்­தர்­களின் வெற்­றி­டத்தை நிரப்­பு­வ­தாக தோட்ட நிர்­வாகம் செல்­ல­முத்­து­விடம் உறு­தி­ய­ளித்­தது. இதனை தொடர்ந்து பணிப் பகிஷ்­க­ரிப்பு கைவி­டப்­பட்­டது. தோட்ட நிர்வாகம் தோட்ட உத்தியோகத்தர்களின் வெற்றிடத்தை விரைவில் உறுதியளித்தவாறு நிரப்பவில்லையாயின் எதிர்காலத்தில் தாம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தொழிலாளர் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்க முடியும்

தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு 1000 ரூபா சம்­பள அதி­க­ரிப்பை தாரா­ள­மாக வழங்க முடியும். அதனை மறுக்­கின்ற அல்­லது 1000 ரூபா சம்­பள அதி­க­ரிப்பை வழங்க முடி­யா­தென்றும் தோட்­டங்கள் நட்டத்தில் இயங்குவதாகவும் என்றும் பெருந்­தோட்டக் கம்­ப­னிக்­கா­ரர்கள் கூறு­வார்­க­ளே­யானால் தோட்­டங்­களை ஒப்­ப­டைத்­து­விட்டு தாரா­ள­மாக அவர்கள் வெளியேறிச் செல்­லலாம் என்று உயர் கல்வி, நெடுஞ்­சா­லைகள் போக்­கு­வ­ரத்து அமைச்சர் லக்ஷ்மன் கிரி­யெல்ல புஸல்­லாவை நக­ரத்தை அண்­மித்த பிர­தே­சங்­களில் நடை­மு­றை­ப்ப­டுத்­தப்­ப­ட­வி­ருக்கும் அபி­வி­ருத்­திப்­ப­ணிகள் தொடர்­பா­கவும் புதிய பாதை­க­ளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வும்  இடம்­பெற்­ற கூட்­டத்தில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே  தெரி­வித்தார். இங்கு மத்­திய மாகாண சபை உறுப்­பினர் எஸ். இரா­ஜ­ரட்ணம், நகர வர்த்­த­கர்கள், பெருந்­தோட்ட தொழி­லா­ளர்கள் உட்­பட பலரும் கலந்­து­கொண்­டனர். அமைச்சர் லக் ஷ்மன் கிரி­யெல்ல தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு 1000 ரூபா சம்­பள அதி­க­ரிப்பை வழங்­கு­வ­தற்கு தோட்டக் கம்­ப­னி­க­ளுக்கு வச­தி­களும் போதிய பணமும் இருக்­கின்­றது. ஆகவே 1000 ரூபா சம்­பள அதி­க­ரிப்பை தாரா­ள­மாக வழங்க முடியும்.
 
அதனால் தொழி­லா­ளர்­களின் காலத்­தையும் நாட்டின் காலத்­தையும் வீணாக்­காமல் கட்­டாயம் 1000 ரூபா சம்­ப­ளத்தை தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு வழங்க வேண்டும் என்று கம்­ப­னி­க­ளுக்கு கூறு­கிறேன். தற்போது தோட்­டங்­களை குத்­கைக்கு பெற்று முறை­யாக நிர்­வ­கித்து தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு 1000 ரூபா சம்­பளம் வழங்க தயா­ரான நிலையில் பல நிறு­வ­னங்கள் போட்டி போட்­டுக்­கொண்டு இருக்­கின்­றன. அவர்­களைக் கொண்டு தோட்­டங்­களை நிர்­வ­கித்து தோட்ட மக்­களின் வாழ்­வா­த­ாரத்தை உயர்த்த முடியும். தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு 1000 ரூபா சம்­பள அதி­க­ரிப்பை தாரா­ள­மாக வழங்க முடியும். அதனை மறுக்­கின்ற அல்­லது 1000 ரூபா சம்­பள அதி­க­ரிப்பை வழங்க முடி­யா­தென பெருந்­தோட்டக் கம்­ப­னிக்­கா­ரர்கள் கூறு­வார்­க­ளே­யானால் தோட்­டங்­களை கொடுத்­து­விட்டு தாரா­ள­மாக வீடு செல்­லலாம். 
 
நாட்டில் நல்­லாட்சி நடை­பெ­று­வதால் ஊட­கங்­க­ளுக்கு தற்­போது செய்­திகள் இல்லை. முன்னர் அப்­படி அல்ல. தினந்­தோறும் கடத்­தல்கள், கொலைகள். வெள்ளை வேன் கலா­சாரம் என அனைத்தும் இருந்­தன. அப்­போது செய்தி இருந்­தது. தற்­போது அவை இல்லை. 1977 ஆம் ஆண்டு கிளி­நொச்­சியில் விஞ்­ஞான பிரி­விற்­கான பல்­க­லை­க்க­ழக பிரிவு அமைப்­ப­தற்கு அடிக்கல் நாட்டப்­பட்டு 30 வரு­டங்­க­ளுக்கு பின் 2015 ஆம் ஆண்டே திறக்­கப்­பட்­டது. 
 
பல்­க­லை­க்க­ழகம் அமைத்து திறக்க 30 வரு­டங்­க­ளுக்கு மேல் காலம் செல்ல காரணம் யுத்தம் இடம்பெற்று வந்தமையாகும். இதனால் இளைஞர், யுவதிகள் பலர் இறந்துள்ளனர். இவ்வாறான நிலைமைகளை முடிவுக்கு கொண்டு வரும் முகமாகவே ஜனாதிபதியும் பிரதமரும் சகல இன மக்களும் ஒற்றுமையாக வாழும் புதிய நாட்டை உருவாக்கும் செயலில் ஈடுபட்டுள்ளனர் என்று கூறினார்.

நன்றி- வீரகேசரி