Monday, July 19, 2010

இந்திய வம்சாவளி தமிழர்களுக்காக தனி மாகாணம் : ஜனநாயக மக்கள் முன்னணி

இந்திய வம்சாவளி தமிழர்கள் செறிந்து வாழ்கின்ற மலையகத்தின் பதுளை மாவட்டத்தையும், நுவரெலியா மாவட்டத்தையும் ஒன்றிணைத்து ஒரே மாகாணமாக அறிவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மலையக தமிழ் கட்சிகளுக்கிடையிலான சந்திப்பின் போது முன் வைக்கவுள்ளதாகவும், அதன் பின்னர் அதனை அரசிடம் முன் வைக்கவுள்ளதாகவும் ஜனநாயக மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. மேலும்


இவ்வாறு உருவாக்கப்படும் நிலையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை போல இது மலையக தமிழ் மக்களுக்கான தனி மாகாணமாக அமையும் எனத் தெரிவிக்கப்படுகிறது. மலையகத்தில் தனியான மாகாண சபை, பிரதேச செயலகங்கள் என்பன உருவாக்கப்படுவதன் ஊடாக மலைய தமிழ் மக்களுக்கான சேவைகளை இலகுவாக பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும் என முன்னணின் பா.உ பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களை ஒன்றிணைத்து ஒரே மாகாணமாக்கும் திட்டத்தை முதன் முதலில் மலையக மக்கள் முன்னணி கடந்த 1994ம் ஆண்டு முன்வைத்தது.

கட்சியின் உபத்தலைவர் அ. லோரன்ஸின் தகவல்படி, இது தொடர்பில் நாடாளுமன்ற தெரிவுக்குழுவிடம் முன்வைத்த அரசியல் திருத்த யோசனைகளின் போதும் தமது கட்சியினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கான அனுமதி கிடைக்கப்படும் பட்சத்தில் மலையக மக்களுக்கு கிடைக்கின்ற சிறந்த வரப்பிரசாதமாக அது அமையும் என அ.லோரன்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments: