Monday, July 19, 2010

கொட்டாஞ்சேனை வீடொன்றில் மலையகயுவதி மர்மகொலை

கொழும்பு கொட்டாஞ்சேனை, புதுச்செட்டித்தெருவில் அமைந்துள்ள ‘கோல்டன் ரெசிடன்ற்ஸ்’ அடுக்கு மாடி வீடொன்றில் பணிப்பெண்ணாக கடமையாற்றிய பதுளை, நமுனுகல, கலுகல்ல தோட்டப்பிரிவைச் சேர்ந்த வெள்ளச்சாமி சீதா ஹெலன் ராணி(37) மர்மமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக வீட்டு உரிமையாளர்கள் தெரிவித்துள்ள போதும் அப் பெண் தாக்கப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தினால் வீட்டு உரிமையாளரும், அவரது மனைவியும் கைது செய்யபட்டுள்ளனர்.

கொழும்பில் இவ்வாறு பணிப்பெண்ணாக பணிபுரிந்த பல மலையக பெண்களுக்கு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்

No comments: