Monday, July 19, 2010

மாணவி தற்கொலையைத் தொடர்ந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

புசல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப் பிரதேச மக்கள் கல்லூரிக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடத்துவதாக தெரிவித்துள்ளனர்.

இப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் பொலிசார் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். போராட்டத்தைத் தொடர்ந்து கற்பித்தல் நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படும் அதேவேளை மாணவியின் தற்கொலைக்கான காரணத்தை பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

No comments: