Monday, June 29, 2009

பசறை பிரதேச அபிவிருத்திக்கு 600 மில்லியன் ரூபா

பசறை பிரதேசத்தின் உட்கட்டமைப்பு, புதிய பஸ்தரிப்பு நிலையம், இரு வழிப்பாதை, குடிநீர் போன்ற அபிவிருத்தித் திட்டங்களுக்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமைய 600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக சுகாதார போஷாக்கு நலன்புரி பிரதியமைச்சருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார். கமநெகும, மகநெகுமபோன்ற திட்டங்கள் ஊடாக பசறை மடூல்சீமை லுணுகலை பிரதேசத்தில் பல பாதைகள் பல படிக்கட்டுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு மேலாக பசறையில் பஸ்தரிப்பு நிலையம், அமைக்கப்பட்டு பூர்த்திசெய்யப்படாமல் இருக்கிறது. இந்த பஸ்நிலையம் மிக விரைவில் திறக்கப்படும். அதற்கான அனைத்து வேலைகளும் போக்குவரத்துத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும ஊடாக மேற்கொள்ளப்பட்டுவருகிறது. பசறை நகரம் குறுகிய இடவசதிக்குள் அமைந்துள்ளதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதன் காரணமாக இருவழிப்பாதை மிக விரைவில் அமைக்கும் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. மற்றும் மில்லபெத்த பகுதியிலிருந்து பசறை நகரம் வரைக்கும் நீர்;திட்டம் ஒன்று ஆரம்பிப்பதற்கான திட்டமொன்றும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

No comments: