Monday, June 29, 2009

இறப்பர் உற்பத்தியை ஊக்குவிக்க ரூபா 200 மில்லியன்

சகல வாகனங்களுக்குரிய ரயர்களையும் உள்ளுரிலேயே உற்பத்தி செய்யும் வகையில் இறப்பர் உற்பத்தியை ஊக்குவிக்கவும் நவீன தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும் ஏதுவாக 200 மில்லியன் ரூபாவை குறைநிரப்பு பிரேரணையாக முன்வைப்பதாக தெரிவிதத்த கைத்தொழில் அமைச்சர் குமார்வெலகம
வருடாந்தம் ரயர் இறக்குமதிக்கென 3 பில்லியன் ரூபாவை செலவிட வேண்டியுள்ளது. தேசிய மட்டத்தில் 44 வீதம் இறப்பர் உற்பத்தி செய்யப்படுகின்றது. 7 வீதம் அல்லது 9 வீதம் செயற்கை இறப்பர் உற்பத்தி செய்யப்படுகின்றது. தேசிய மட்டத்தில் ரயர் உற்பத்தியை அதிகரிக்கும் போது வெளிநாட்டுக்குச் செல்லும் எமது பணத்தை மீதப்படுத்த முடியுமென்ற நோக்கத்திலேயே உள்ளுரிலேயே ரயர் உற்பத்தி மேற்கொள்ளவும் இதற்கு நவீன தொழில்நுட்பமும் தேவைப்படுகிறது என்றார்

No comments: