Monday, June 29, 2009

தமிழ் மக்கள் சிந்தித்து செயற்படாவிட்டால் தமிழ் பிரதிநிதித்துவம் பறிபோகும்

பதுளை மாவட்டத்தில் தமிழ் மக்கள் சிந்தித்து வாக்களிக்க தவறினால் தமிழர் பிரதிநிதிதித்துவம் பறிபோகக்கூடிய அபாயம் உள்ளதாக இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தலைவர் டி..வி. சென்னன் தெரிவித்துள்ளார். ஊவா மாகாண சபையில் ஏற்கெனவே ஐந்து தமிழ் உறுப்பினர்கள் இருந்தனர். நடைபெறவுள்ள தேர்தலில் அதிகமாக தமிழ் உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட வேண்டும். இருக்கும் தமிழ் பிரதிநிதித்துவத்தை இழக்க செய்துவிடக்கூடாது. பதுளை மாவட்டத்தில் வசிக்கும் தமிழ் மக்கள் தமிழ் பிரதிநிதித்துவத்தை இழப்பதற்கு ஒருபோதும் துணைபோய்விடக்கூடாது. இதனை கருத்தில்கொண்டு அனைவரும் சிந்தித்து செயல்பட்டால் மாத்திரமே தமிழ் பிரதிநிதித்துவத்தை தக்கவைக்க முடியும்

No comments: