Tuesday, May 19, 2009

அரசியல் இலாபத்திற்காக தொழிலாளர்களை பயன்படுத்த முயற்சி-அருள்சாமி

மலையக தொழிற்சங்கவாதிகள் பெருந்தோட்டத் தொழிலாளர்களை தங்களின் அரசியல் இலாபத்திற்காக அவர்களை பகடைக்காய்களாகப் பயன்படுத்துவதாக முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரும், கல்வி அமைச்சருமான அருள்சாமி தலவாக்கலை லிந்துலையில் தொழிலாளர் விடுதலை முன்னணியின் தலைவர் அய்யாத்துரை தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றுகையில் குறிப்பிட்டார். மேலும் தெரிவிக்கையில் கடந்த மூன்று சகாப்தங்களுக்கு மேலாக மலையக தொழிற்சங்க அரசியல் தலைமைகள் பாராளுமன்றத்திலும் மாகாணசபைகளிலும் உள்ளூராட்சி சபைகளிலும் பிரதிநிதித்துவப்படுத்திய போதிலும் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் தொழிற்சங்க அரசியல் உரிமைகளை இன்றுவரை முழுமையாகப் பெற்றுக்கொடுக்க முடியவில்லை.

No comments: