Tuesday, May 19, 2009

இனவாதத்தை தூண்டுவதை அனுமதிக்க கூடாது

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையைச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு மலையகத்தில் சிலர் இனவாதத்தைத் தூண்டும் வகையில் செயற்பட முனையும் இவ்விடயம் தொடர்பாக அரசாங்கமும், பொலிசாரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென் மத்திய மாகாணசபை உறுப்பின் பிரகாஷ் கணேசன் கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த 17-05-2009 அன்று தலவாக்கலை-லிந்துலை பிரதேசத்தில் இனவாதத்தை தூண்டும் வகையில் சிலர் ஈடுபட்டதாக பிரதேச மக்கள் எனது கவனத்திற்குக் கொண்டுவந்ததைத் தொடர்ந்து இது பற்றி நுவரெலியா மாவட்ட பொலிஸ் உயர் அதிகாரியின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

No comments: