Thursday, May 21, 2009

மண் சரிவினால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அறுவர் மரணம்

மஸ்கெலியா நோட்டன் பிரிட்ஜ் பகுதியில் நேற்று புதன்கிழமை காலை ஏற்பட்ட மண் சரிவால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்றரை வயதுக் குழந்தை உட்பட ஆறு பேர் மண்ணினுள் புதையுண்டு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். நேற்றைய தினம் தொடர்ந்து கடும் மழை பெய்ததையடுத்து வீட்டுக்கு மேல் பகுதியில் உள்ள மண்திட்டி திடீரென வீட்டின் மீது சரிந்து விழுந்ததால் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. மண் சரிவினால் அந்த வீடு முற்றாகவே மண்ணினுள் புதையுண்டதால் வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் அதில் சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடும் மழை பெய்து கொண்டிருக்கையில் பலத்த சிரமத்தின் மத்தியில் பொதுமக்களும் பொலிஸாரும் மண்சரிவில் சிக்கியுள்ளவர்களின் சடலங்களை மீட்டெடுத்தனர்.

No comments: