Thursday, May 21, 2009

வறுமை காரணமாக வெளிநாடு செல்லும் பெருந்தோட்ட பெண்கள்

தோட்டப்பகுதிகளில் தொடர்ச்சியான வேலை நாட்கள் குறைப்பு, மற்றும் வேலைக்கேற்ற ஊதியமின்மை, சம்பள உயர்வு அதிகரிக்கப்படாமை, வறுமை என்பவற்றினால் மத்தியகிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணிப் பெண்களாக செல்லும் பெருந்தோட்டப் பெண்களின் தொகை அதிகரித்துள்ளது. இலங்கையின் வறுமை விகிதம் மலையகப் பகுதிகளை மிக மோசமாக பாதித்துள்ளதாகவும், அதுவும் நுவரெலியா மாவட்டத்தில் 32 வீதமாக வறுமை உள்ளதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஊவா மாகாணத்தில் வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்வோர் தொகை அதிகரிப்பதன் மூலம் அங்கு தோட்டப் பகுதிகளில் வறுமை நிலை அதிகம் என்பதே காரணமெனத்; தெரிவிக்கப்படுகிறது. இதனால் தேயிலை உற்பத்தி தொழில்துறையும் பாதிப்புக்குள்ளாகலாம் என சுட்டிக்காட்டப்படுகிறது.

No comments: