Thursday, March 19, 2009

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் - மலையக மக்கள் முன்னணியின் தீர்மானம்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக மலையக மக்கள் முன்னணியின் அரசியல் உயர் பீடம் அமைச்சர் பெ. சந்திரசேகரன் தலைமையில் கூடியபோது பின்வரும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தொழிலாளர்களின் சம்பள உயர்வில் அக்கறையோடும் உறுதியோடும் நியாயமான கருத்துக்களை வெளிப்படுத்தும் மக்கள் அங்கீகாரத்தைக் கொண்ட சகல தொழிற்சங்கங்களின் நிலைப்பாட்டை மதித்து அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்வது.

தொழிலாளர்களின் சம்பள உயர்வு மட்டுமல்லாது தொழிலாளர்களுக்குரிய வாய்ப்புகள் தொடர்பாகவும் புதிய சாசனம் உருவாக்கப்படல் வேண்டும்.
மேற்படி முடிவுகளுக்கு அனுசரணையாக கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்ற தொழிற்சங்கங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்பதோடு முதலாளிமார் சம்மேளனத்திற்கும் அரசுக்கும் அழுத்தம் ஏற்படுத்துவதற்குரிய திட்டங்களை வகுத்தல்.

இதற்கான ஆதரவினை பெற அரசியல் கட்சிகளையும் தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்ட பொது ஸ்தாபனங்களையும் சந்தித்து தெளிவுபடுத்துவதோடு தொழிலாளர்களின் சம்பளத்தை தீர்மானிக்கின்ற வரலாறுகள் திருத்தப்படல்.

இறுதி முடிவு எடுக்கப்படும் போது அதில் அரசாங்கம் பங்குதாரதாக இருக்கக்கூடியதான திட்டங்களை வகுத்தல்

குறைந்தபட்ச சம்பளம் 400 ரூபாவாக இருப்பதற்கு சகல மட்டங்களிலும் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுதல்

No comments: