Thursday, March 19, 2009

மலையக மாணவர்களின் புலமைபரிசில் கொடுப்பனவு பெறுவதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிரிட்டோ நிறுவனம்

புலமைப் பரிசில் பெற தகுதியுள்ள மாணவர்களின் பெற்றோர்களின் வருமான எல்லையை அதிகரிக்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது என வெளிவந்துள்ள செய்திகள் அடிப்படையில் பெருந்தோட்ட மாணவர் நிலை குறித்து ஆராந்துள்ளதாக அறிக்கையொன்று தெரிவித்துள்ளது பற்றி பிரிடோ நிறுவனம் விடுத்த வேண்டுகோளில் எமது நாட்டில் கல்வித் துறையில் அதிகமாக பின்தங்கிய மக்கள் பெருந்தோட்டத்துறையை சார்ந்த மலையக மக்கள் என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ள வேண்டிய விடயம்.

இவ்வாறு பின்தங்கிய நிலை காரணமாக மலையக பகுதிகளில் ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களின் எண்ணிக்கையும், பல்கலைகழகங்களுக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையும் ஏனைய பிரதேச மாணவர்களோடு ஒப்பிடும் போது மலையக மாணவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு

இதில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றால் மலையகத்தில் கல்வித்துறையில் மலையகம் முன்னேற்றமடைய அதிக காலம் எடுப்பதால் மலையக மாணவர்களுக்கு அதிக ஊக்குவிப்பு வழங்க வேண்யது அவசியமாகும். (மலையக பெற்றோரின் வருமானம் வருடத்துக்கு 24,000 இலிருந்து 54,000 ரூபா வரையில்- மாத வருமானம் 2,000 ரூபாவிலிருந்து 4,500 ரூபா) இன்றைய நிலையில் அதிக வருமானம் பெருபவர்களின் பிள்ளைகள் கூட புலமை பரிசில் கொடுப்பனவை பெறுகின்றனர். ஆனால் பெருந்தோட்டப் பிள்ளைகளுக்கு கிடைப்பதில்லை.

பெற்றோரின் பொருளாதார நிலைமை காரணமாக தமது படிப்பினை முன்னெடுக்க முடியாத நிலை. இப் பிள்ளைகள் புலமை பரிசில் கொடுப்பனவை பெற வேண்டுமானால் விசேட ஏற்பாடுகள் தேவைப்படுகின்றன. இதை உறுதி செய்வதற்கு மாற்று வழிகளை மேற்கொள்வதற்கு மலையக அரசியல்வாதிகள், மத்திய அரசு, மாகாண அரசு ஆகியவற்றில் கல்வி அமைச்சுக்களுக்கு பொறுப்பான அமைச்சர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

No comments: