Thursday, March 19, 2009

மாணவி கொலை சந்தேகநபர் பிணையில் விடுதலை

பசறை மத்திய மகாவித்தியாலயத்தில் உயர்தர வகுப்பு மாணவி காஞ்சனா(20) கடந்த 2007ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ம் திகதி கற்பழிக்கப்பட்டு கோரமாக கொலைசெய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட பசறை ஹொப்டன் பெருந்தோட்ட கள உத்தியோகத்தர் இசுரு சம்பத் ஜயசுந்தர என்பவர் லுணுகலை பொலிசாரினால் கைது செய்யப்பட்டு பதுளை மேல் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இந்த சந்தேக நபருக்கு பதுளை நீதவான் சிரான் குணரட்ன ஐம்பதாயிரம் ரூபா ரொக்கப் பிணையில் செல்ல உத்தரவிட்டார்.

இக் கொலை தொடர்பாக பசறை பிரதேச பாடசாலைகள் மட்டத்திலும், கிராம நகர மட்டத்திலும் கண்டன பேரணிகள், எதிர்ப்பு ஊர்வலங்கள் மேற்கொள்ளப்பட்டதோடு பிரதான சந்தேக நபருக்கு சார்பாக நீதிமன்றத்தில் சட்டத்தரணிகள் ஆஜராககூடாதென்று அழுத்தங்களும், எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments: