Wednesday, October 28, 2015

தோட்­டத்­ தொ­ழி­லா­ளரின் சம்­பள உயர்வு கேள்விக் குறி­யா­கி­யுள்­ளது

இ.தொ.கா. விடம் அதி­காரம் இருந்­தி­ருந்தால் தீர்வு கிடைத்­தி­ருக்கும் 

ஆயிரம் ரூபா சம்­பள அதி­க­ரிப்­பினை இலங்கைத் தொழி­லாளர் காங்­கிரஸ் அன்­றைய வாழ்க்கைச் செலவின் நிலை­மையை கருத்­திற்­கொண்டே முன்­வைத்­தது. இன்­றைய நிலையில் 1500 ரூபா பெற்­றுக்­கொ­டுத்­தாலும் போது­மா­ன­தாக இருக்­காது. இ.தொ.கா. விடம் போதிய அர­சியல் அதி­கா­ர­பலம் இருந்­தி­ருக்­கு­மே­யானால் தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­பள உயர்வுப் பிரச்­சி­னைக்கு தீர்வு பெற்­றுக்­கொ­டுக்­கப்­பட்­டி­ருக்கும். சம்­பள உயர்­வு­களும் சாத்­தி­ய­மா­கி­யி­ருக்கும். கூட்டு ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­ப­டு­வதும் தாம­த­மா­கி­யி­ருக்­காது என்று ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்­டமான் தெரி­வித்­துள்ளார்.
 
ஊவா மாகாண அமைச்சர் பொறுப்­புக்­களை ஏற்­ற­பின்னர் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போது, தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­பள உயர்வு தாமதம் குறித்து விளக்­கு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.
 
தொடர்ந்து அவர் பேசு­கையில்,  தற்­போது மலை­ய­கத்தின் அமைச்­சர்­க­ளாக இருப்­ப­வர்கள் இலங்கைத் தொழி­லா ளர் காங்­கி­ரஸை விமர்­சிப்­ப­தி­லேயே கால த்தை கடத்­திக்­கொண்­டி­ருக்­கின்­றனர். அவ் அமைச்­சர்­க­ளினால் ஏன் தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு சம்­பள உயர்வைப் பெற்­றுக் ­கொ­டுக்க முடி­ய­வில்லை என்று நாம் மட்­டு­மல்ல இன்று மக்­களும் கேள்வி கேட்கத் தொடங்­கி­விட்­டனர். அப்­ப­டி­யானால் விமர்­ச­னங்­களை மட்­டுமே முன்­வைத்­து­வரும் அவர்­களின் செயற்­பா­டுகள் கையா­லாகாத் தன்­மை­யையே காட்­டு­கின்­றன.
 
இ.தொ.கா. முன்­வைக்கும் சம்­பள அதி­க­ரிப்புத் தொகை­யை­விட அதி­க­ரித்த தொகை­ யையே ஏனைய தொழிற்­சங்­கங்கள் முன்­வைப்­பது வழக்­க­மாக இருந்து வந்­தது. எனினும் நாம் முன்­வைத்த 1000 ரூபா கோரிக்­கை­யை­விட அதி­க­ரித்த தொகையை கோராது அதிலும் குறை­வான தொகையே கோரப்­பட்­டது.
 
அன்­றைய வாழ்க்­கைச்­செ­லவின் நிலை­மையை கருத்­திற்­கொண்டே ஆயிரம் ரூபா உயர்­வினை கோரி­யி­ருந்தோம். இது தொழி­லா­ளர்கள் மட்டில் நியா­ய­மான கோரிக்­கை­யாகும். இதனை அவர்­களும் ஏற்­றுள்­ளனர். இ.தொ.கா. முன்­வைக்கும் சம்­பள உயர்­வுக்கு மேலா­கவே ஏனைய தொழிற்­சங்­கங்கள் கேட்­பது வழ­மை­யாகும். ஆனால், இ.தொ.கா.வின் ஆயிரம் ரூபா சம்­பள உயர்வு கோரிக்­கைக்கு அனைத்து தொழிற்­சங்­கங்­களும் இணங்­கி­யது புது­மை­யே­யாகும். சில தொழிற்­சங்­கங்கள் 1000 த்திலும் குறை­வான தொகையையும் முன்­வைத்து வந்­தன.
 
இன்­றைய வாழ்­க­்கைச்­செ­லவு உயர்­வுக் ­கேற்ப இந்தத் தொகையும் போது­மா­ன­தன்று. அனைத்து அத்­தி­யா­வ­சியப் பொருட்­களின் விலை­களும் அதி­க­ரித்­துள்­ளன. நாம் அதி­கா­ரத்தில் இருந்­தி­ருந்தால் இவற்றை முறை­யாக நிர்­வ­கித்­தி­ருப்போம். இன்றைய நிலையில் 1500 ரூபா பெற் றுக்கொடுத்தாலும் போதுமானதாக இருக்காது. இதுவிடயத்தில் ஏனைய தொழிற்சங்கங்கள் இ.தொ.கா.வை விமர்சிப்பதை விடுத்து தோட்டத் தொழிலாளர்கள் வாழ்க்கைச்செலவை ஈடு செய்யும் வகையில் சம்பள உயர்வினைப் பெற்றுக் கொடுக்க முன்வரவேண்டும் என்று கூறி னார்.

கூட்டு ஒப்­பந்­தத்தின் ஊடாக நியா­ய­மான சம்­பள அதி­க­ரிப்பு என்­பது கேள்­விக்­குறியே 
 
கூட்டு ஒப்­பந்­தத்தின் மூல­மாக நியா­ய­மான சம்­பள உயர்­வினை பெற்­றுக்­கொள்ள முடி­யுமா என்­பது தற்­போது கேள்­விக்­கு­றி­யாகி உள்­ளது. எனவே இது குறித்து ஆழ­மாக சிந்­தித்து உரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தோடு மாற்றுத் தொழில்­துறை தொடர்­பிலும் மலை­யக மக்கள் ஆர் வம் செலுத்த வேண்டும் என்று திறந்த பல்­க­லைக்­க­ழக சிரேஷ்ட விரி­வு­ரை­யாளர் கலா­நிதி எ.எஸ்.சந்­தி­ரபோஸ் தெரி­வித்தார்.
 
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில், 1992 ஆம் ஆண்டு முதல் கூட்டு ஒப்­பந்தம் நடை­மு­றையில் உள்­ளது. கூட்டு ஒப்­பந்த நட­வ­டிக்­கை­களின் போது தொழிற்­சங்­கங்கள் தொழி­லாளர் நலன்­க­ருதி பல்­வேறு கோரிக்­கை­களை முன்­வைக்­கின்­றன. எனினும் இக்­கோ­ரிக்­கைகள் அனைத்தும் நிறை­வேற்­றப்­ப­டு­வ­தில்லை. தொழிற்­சங்­கங்கள் கோரு­கின்ற சம்­பள உயர்வும் உரி­ய­வாறு தொழி­லா­ளர்­க­ளுக்கு வழங்­கப்­ப­டு­வ­தில்லை. தொழி­லா­ளர்­களின் வரு­மான மட்­டத்தில் பாரி­ய­ளவு மாற்­றத்­தினை கூட்டு ஒப்­பந்­தத்­தினால் கொண்­டு­வர முடி­யாமல் போயுள்­ளது. கூட்டு ஒப்­பந்­தத்தில் ஏற்­க­னவே ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­ட­வாறு வரு­டத்தில் 300 நாள் வேலை அல்­லது மாதத்தில் 25 நாள் வேலை வழங்­கு­வ­தற்கு கம்­ப­னிகள் தயா­ராக இல்லை.
 
வேலை நாட்­க­ளுக்­கேற்ப தொழி­லா­ளர்­க­ளுக்கு சம்­பளம் வழங்­கு­கின்ற நடை­மு­றை­க­ளுக்கும் கம்­ப­னிகள் இன்று ஒத்­து­வ­ரு­வ­தாக இல்லை அர­சாங்­கத்தின் அழுத்­தத்­திற்­கேற்ப கம்­ப­னி­யினர் சிறிய தொகை சம்­பள உயர்­வினை தொழி­லா­ளர்­க­ளுக்கு இம்­மு­றையும் பெற்­றுக்­கொ­டுப்­பார்கள் என்ற போது கூட்டு ஒப்­பந்­தத்தின் ஊடாக நமக்கு நியா­ய­மான சம்­பள உயர்வு கிடைக்கும் என்று தொழி­லா­ளர்கள் இனியும் எதிர்­பார்த்­தி­ருக்க முடி­யாது. கூட்டு ஒப்­பந்தம் எதிர்­கா­லத்தில் தொழி­லா­ளர்­களின் வாழ்­வா­தா­ரத்தை மேம்­ப­டுத்த எந்­த­ள­விற்கு கைகொ­டுக்கப் போகின்­றது என்­பது இப்­போது கேள்விக் குறி­யா­கி­யுள்­ளது.
 
இந்த நிலையில் பெருந்­தோட்ட மக்­களின் வாழ்­வா­தா­ரத்­திற்கு மாற்று வழி­களை காண வேண்­டிய தேவை இப்­போது மேலெ­ழுந்­துள்­ளது. தோட்டத் தொழில்­து­றையைக் காட்­டிலும் வேறு எத்­த­கைய தொழில் முயற்­சிகள் தம்­மிடம் இருக்­கின்­றன என்­ப­தனை தொழி­லா­ளர்கள் அடை­யாளம் காணுதல் வேண்டும். இளை­ஞர்கள் பலர் தோட்­டத்­துறை வரு­மா­னத்தில் அதி­ருப்தி கொண்டு தோட்­டத்­தினை விட்டும் வெளி­யேறி நகர்ப்­பு­றங்­களில் பணி­பு­ரிய சென்­றுள்­ளனர். சில இளை­ஞர்கள் வெளி­நா­டு­க­ளுக்கும் தொழில் நிமித்தம் சென்­றுள்­ளனர். இவர்­க­ளு­டைய வரு­மா­னத்தை நம்­பியே இன்று இவ்­வி­ளை­ஞர்­களின் பெற்­றோர்கள் தோட்­டத்தில் இருக்­கின்­றனர். தோட்டத் தொழில் தவிர்ந்த ஏனைய வரு­மா­னங்கள் தான் இன்று தொழி­லா­ளர்­களின் வாழ்­வா­தா­ரத்­திற்கு கைகொ­டுக்­கின்­றன.
 
கூட்டு ஒப்­பந்தம் தொடர்பில் அதி­ருப்­திகள் மேலோங்கி வருகின்றன. இதன் மீதான நம்பிக்கைத்தன்மை வலுவிழந்து வருகின்றது. இந்நிலையில் மாற்றுத் தொழில்களை இனங்கண்டு அறிமுகம் செய்வதோடு அதற்குரிய திறன்களையும் எம்மக்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும். கூட்டு ஒப்பந்தத்தை இனியும் நம்பி இருப்பது சாத்தியமானதில்லை. விவேகமா னதும் இல்லை என்றார்.

பிர­தமர் தலை­மையில் நாளை சம்­பளப் பேச்­சு­
 
தோட்­டத்­தொ­ழி­லா­ளரின் சம்­பள அதி­க­ரிப்பை உறு­திப்­ப­டுத்தும் கூட்டு ஒப்­பந்தம் காலா­வ­தி­யாகி 7 மாதம் கடந்­து­விட்ட நிலையில் நாளை வியா­ழக்­கி­ழமை பிர­தமர் தலை­மையில் முத­லா­ளிமார் சம்­மே­ளனம் மற்றும் தொழிற்­சங்க பிர­தி­நி­திகள் ஆகி ­யோ­ருக்கு இடை­யி­லான பேச்­சு­வார்த்தை ஒன்று இடம்­பெ­ற­வுள்­ளது.
 
இந்தப் பேச்­சு­வார்த்­தையின் போது கூட்டு ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­திடும் தொழி ற்­சங்­கங்­க­ளுடன் கைச்­சாத்­தி­டாத தொழிற்­சங்கத் தலை­வர்­க­ளு­டனும் பிரதிநிதி­களும் கலந்­து­கொள்­ள­வுள்­ள­தாக தெரி­ய­வந்­துள்­ளது. இதன்போது அமைச்­சர்­க­ளான பழனி திகாம்­பரம், மனோ ­க­ணேசன் மற்றும் வி.இரா­தா­கி­ருஷ்ணன் ஆகி­யோரும் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர். இவர்­க­ளுடன் தொழி­லு ­றவு அமைச்சர் ஜோன் சென­வி­ரட்னவும் இணைந்­தி­ருப்பார்.
 
மார்ச் மாதம் 31ஆம் திக­தி­யுடன் நிறை­வு க்கு வந்­துள்ள கூட்டு ஒப்­பந்­தத்தை புதுப்­பித்­துக்­கொள்ளும் பொருட்டு இடம்­பெற்­று­வந்த 6 சுற்றுப் பேச்­சு­வார்த்­தை­களும் தோல்வி கண்­டுள்­ளன. தோட்­டத்­தொ­ழி­லா­ளர்­களின் நாளொன்­றுக்­கான சம்­ப­ளத்தை ஆயிரம் ரூபா­வாக நிர்­ண­யிக்க வேண்­டு­மென்­பதே இலங்கை தொழி­லாளர் காங்­கி­ரஸின் கோரிக்­கை­யாகும்.
 
இதனை முன்­வைத்த பேச்­சுக்­களே தோல்வி கண்­டுள்­ளன. 1000 ரூபா சம்­பள அதி­க­ரிப்­பினை பெற்­றுக்­கொள்­வ­தற்­கென பொதுத்­தேர்தல் பிர­சாரக் காலப்­ப­கு­தியில் போராட்­டங்­களும் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. முத­லா­ளிமார் சம்­மே­ள­னமும் கம்­ப ­னி­களும் 1000 ரூபா சம்­பளம் வழங்­கு­வ­தற்கு முடி­யா­தென திட்­ட­வட்­ட­மாக அறி­வித்து வந்­த­துடன் அதே நிலைப்­பாட்­டி­லேயே இருந்து வரு­கின்­றன.
 
மேலும் 770 ரூபாவை அதி­க­ரித்த சம்­ப­ள­மாக வழங்­க­மு­டியும் என்­பதே கம்­ப­னி­களின் இறுதி முடி­வாக உள்­ளது. தேயி லை விலை வீழ்ச்சி, சந்தை வாய்ப்பு வீழ்ச்சி ஆகி­ய­வற்றைக் காரணம் காட்­டியே இவ்­வாறு சம்­பள அதி­க­ரிப்­புக்கு முட்­டுக்­கட்டை இடப்­பட்டு வரு­வ­தாகக் கூறப்­ப­டு­கி­றது. 

இந்­நி­லை­யி­லேயே தேர்தல் காலங்­களில் வாக்­கு­று­தி­ய­ளித்­ததன் பிர­கா ரம் தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு அதி­க­ரித்த சம்­ப­ளத்தைப் பெற்றுத் தரு­வ­தற்­கான பேச்­சு­வார்த்தை ஒன்று பிர­தமர் தலை­மையில் இடம்­பெ­ற­வுள்­ளது. இதன்­போது கூட்டு ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­திடும் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள், கம்பனிகளின் பிரதானிகள், முதலாளி மார் சம்மேளத்தின் பிரதானிகள் மற்றும் மலையக அமைச்சர்கள் என பல தரப்பினரும் இணைந்து கொள்ளவுள்ளனர். இதன்போது இடம்பெறும் பேச்சுவார்தையில் இறுதி முடிவு எட்டப்படும் என்று நம் பப்படுகிறது.
 
 

No comments: