Thursday, June 25, 2009

களுத்துறை மாவட்டத்தில சுமார் 5000 தோட்ட மக்கள் வாக்களிக்க முடியாத நிலை

களுத்துறை மாவட்ட தோட்டப் பகுதிகளில் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் பிறப்பு அத்தாட்சிப்பத்திரம், தேசிய அடையாள அட்டை இல்லாததால் கடந்த ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலில் சுமார் 5000 தொழிலாளர்கள் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டது. பிறப்பு அத்தாட்சிப்பத்திரம், தேசிய அடையாள அட்டை யை பெற்றுக் கொள்வதற்கு நுவரெலியா மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் சேவையைப் போல் களுத்துறை மாவட்டத்திலும் மேற்கொண்டு அம் மாவட்ட தொழிலாளர்களுக்குப் இவற்றை பெற்றுக் கொடுக்க முன்வருமாறு அம் மக்கள் பதில் நீதியமைச்சர் வி.புத்திரசிகாமணியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.இருந்த போதிலும் மாவட்டத்திலிருந்து பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் பெற்றுக்கொள்ளும் முகமாக 1,800 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றதாக பெருந்தோட்ட நம்பிக்கை நிதியத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்

No comments: