Friday, June 26, 2009

தபால் சேவகர்களுக்கு சீருடை, சைக்கிள் இல்லை

பெருந்தோட்டப் பகுதிகளில் தபால் சேவையை விரிவுபடுத்தும் நோக்குடன் தபால் திணைக்களத்தினால் கடந்த டிசம்பர் மாதம் நியமிக்கப்பட்ட 350 தபால் சேவகர்களுக்கு கடந்த ஐந்து மாதங்கள் ஆகிவிட்ட போதிலும் சீருடை, சைக்கிள் என்பன இன்னும் வழங்கப்படவில்லை என தபால் சேவகர்கள் தெரிவிக்கின்றனர்.தற்போது தமது சொந்த சைக்கிள்களையே பயன்படுத்துகின்றனர்.மாத்தறை மாவட்டத்தில் ஆறு பேரும் காலி மாவட்டத்தில் 04 பேரும் இரத்தினபுரி மாவட்டத்தில் 16 பேரும் கொழும்பு மாவட்டத்தில் 07 பேரும் கண்டி மாவட்டத்தில் 29 பேரும் கேகாலை மாவட்டத்தில் 11 பேரும் நுவரெலியா மாவட்டத்தில் 138 பேரும் மாத்தளை மாவட்டத்தில் 13 பேரும் களுத்துறை மாவட்டத்தில் 13 பேரும் தபால் சேவகர்களாக நியமிக்கப்பட்டனர்.

No comments: