Thursday, June 25, 2009

சம்பள அதிகரிப்பு பேச்சுவார்த்தை பிற்போடப்படுவதை அனுமதிக்க முடியாது

ஊவா மாகாணத் தேர்தலை முன்னிட்டு தோட்டத் தொழிலாளர்களின் சம்பள மீளாய்வு பேச்சுவார்த்தைகள் பிற்போடப்படுவதை எவ்விதத்திலும் அனுமதிக்க முடியாதென இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தலைவர் டி.வி. சென்னன் தெரிவித்தார். மேலும் கூட்டொப்பந்தத் தொழிற்சங்கங்கள் சம்பள மீளாய்வு தொடர்பான பேச்சுவார்த் தைகளைப் பிற்போட்டு வருகின்றன. இதனால், தோட்டத் தொழிலாளர்களே பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். தொழிற்சங்கங்கள் வெற்றுக்காரணங்களைக் கூறிக்கொண்டிருக்காமல், கூட்டு ஒப்பந்த பேச்சு வார்த்தைகளை முடிவுக்குக் கொண்டுவந்து தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தினைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

No comments: