Monday, May 25, 2009

டிஸ் ரி.வி. அன்ரனாக்களை அகற்ற உத்தரவு

அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலுள்ள தோட்டப் பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள டிஸ் ரி.வி.அன்ரனாக்களை உடனடியாக அகற்றுமாறு பாதுகாப்புப் பிரிவினர் அறிவித்துள்ளதைத் தொடர்ந்து இவற்றை அகற்றி வருவதாக தோட்டப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். சாமிமலை, கவரவில, நோர்வூட், பொகவந்தலாவை, டிக்கோயா, புளியாவத்தை போன்ற பகுதியிலுள்ள தோட்டங்களுக்கு வருகின்ற பாதுகாப்புத் தரப்பினர் உடனடியாக இவற்றை அகற்றுமாறு அறிவித்துள்ளனர். தமது பொழுது போக்குக்காகப் பெறப்பட்ட இந்த அன்ரனா மூலமாக தமிழகத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்து வந்ததாகவும் தற்போது இந்த உரிமை மறுக்கப்பட்டுள்ளதாகவும் இது குறித்து மலையக அரசியல் தலைமைகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் பாதிக்கப்பட்ட தோட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments: