Monday, May 25, 2009

பெறுமதியான மரங்களை வெட்டுவதை உடன் நிறுத்துமாறு கோரிக்கை

அக்கரபத்தனை பெருந்தோட்ட முகாமைத்துவ கம்பனியின் அப்புத்தளை கிளனனோர் தோட்டத்தில் பெறுமதிமிக்க தேப்பந்தைன் மற்றும் சவுக்கு மரங்கள் வெட்டப்படுவதை உடன் நிறுத்துமாறு தோட்டத் தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இத் தோட்டங்களில் சுமார் மூன்று கோடி ரூபா பெறுமதியான தேப்பந்தைன் மரங்கள் இந்த வருட ஆரம்பத்திலிருந்து வெட்டப்பட்ட விபரத்தை நிருவாகமே கூறியதாக தோட்ட கமிட்டித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இப்பணம் தோட்ட தேயிலை தொழிற்சாலையின் அபிவிருத்திக்கும் தோட்ட மக்களின் நலம் சார்ந்த பொது வேலைத் திட்டங்களுக்கும் பயன்படுத்தப்படுமெனவும் தெரிவிக்கப்பட்ட போதும் அவ்வாறு எதுவும் நடக்கவில்லையென முறையிடும் தொழிற் சங்கங்கள் சவுக்கு மரங்கள் வெட்டப்படுவதனால் அதனைச் சூழவுள்ள பெறுமதியான தேயிலைச் செடிகள் பாதிப்படைவதாகவும் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக தொழிற்சங்கங்கள் தோட்ட கம்பனிக்கும் பொலிஸ் அதிகாரி,மாவட்ட செயலகத்துக்கும் முறைப்பாடு செய்துள்ளனர். அதில் மரம் வெட்டுவதை உடன் நிறுத்துமாறு கோரப்பட்டுள்ளதுடன் கூட்டு ஒப்பந்தப்படி மரம் வெட்டுவதன் மூலம் கிடைக்கும் பணத்தில் தொழிலாளர்களுக்கு ஒரு பகுதி வழங்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: