Monday, May 25, 2009

அரசினால் பொறுப்பேற்கப்பட்ட தோட்ட வைத்தியசாலைகளில் கடமை நேரங்கள் மாற்றம்

பதுளை மாவட்டத்தில் அரசு பொறுப்பேற்றுள்ள 12 பெருந்தோட்ட வைத்தியசாலைகளில் கடமை நேரங்களும் தொழிலாளர் நன்மை கருதி அவர்களுக்கேற்ப மாற்றப்படுவதற்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருப்பதாக பிரதி சுகாதார அமைச்சர் வடிவேல் சுரேஷ், பதுளை மாகாண சுகாதாரப் பணிப்பாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் வைத்தியசாலைகளுக்கு மருந்து வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது குறிப்பிட்டார். அரசு பொறுப்பேற்ற வைத்தியசாலைகள் நவீன மயப்படுத்துப்படுவதுடன் மேலும் ஐந்து பெருந் தோட்ட வைத்தியசாலைகளையும் பொறுப்பேற்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்

No comments: