Thursday, February 11, 2016

தொழிலாளர்கள் வீதியில் இறங்கி போராடும் காலம் வெகு தொலைவில் இல்லை

தோட்­டத்­தொ­ழி­லா­ளர்­களின் வாக்­கு­களைப் பெற்றுக் கொண்டு பாரா­ளு­மன்றம் வந்து ஒரு வருடம் கழிந்தும் அம் மக்­க­ளுக்­கான சம்­பள உயர்வை பெற்றுக் கொடுக்­க­வில்லை. வீடுகள் அமைத்துக் கொடுக்­கப்­ப­டவும் இல்லை. எனவே தோட்டத் தொழி­லா­ளர்கள் வீதியில் இறங்கிப் போராடும் காலம் வெகு தொலைவில் இல்­லை­யென ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி எம்.பி. மஹிந்­தா­னந்த அளுத்­க­மகே பாரா­ளு­மன்­றத்தில் வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற சம்­பள சபைகள் கட்­டளைச் சட்­டத்தின் கீழ் ஒழுங்­கு­விதி அங்­கீக­ரிக்­கப்­ப­டு­வ­தற்­காக தொழி­லாளர் அமைச்சு முன்­வைத்த பிரே­ரணை விவா­தத்தில் உரை­யாற்றும் தெரி­வித்தார்.

வாழ்­வ­தற்கு வழி­யில்­லாது மல­ச­ல­கூட வச­தியும் இல்­லாது தோட்டத் தொழி­லா­ளர்கள் கஷ்­டத்தில் வாழ்­கின்­றனர். மலை­யக தோட்டத் தொழி­லா­ளர்கள் இன்று தொழில் இல்­லாமல், வாழ்­வ­தற்கு வழி­யில்­லாமல் பெரும் கஷ்­டத்தில் வாழ்­கின்­றனர்.

ஜன­வ­சம உட்­பட பல கம்­ப­னிகள் தொழி­லா­ளர்­க­ளுக்கு சம்­பளத்தை நேரத்­திற்கு வழங்­கு­வ­தில்லை. ஊழியர் சேம­லாப நிதி, ஊழியர் நம்­பிக்கை நிதி செலுத்­தப்­ப­டு­வ­தில்லை. தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு ஒரு நாள் சம்­ப­ள­மாக ரூபா 620 தான் வழங்­கப்­ப­டு­கி­றது. 3 நாட்கள் தான் வேலை கிடைக்­கின்­றது. இந்தச் சம்­ப­ளத்தை பெற்றுக் கொண்டு எவ்­வாறு தோட்டத் தொழி­லா­ளர்கள் வாழ முடியும். தோட்டத் தொழி­லா­ள­ருக்கு வீடுகள் அமைத்துக் கொடுப்போம். சம்­பள உயர்வை வழங்­குவோம் என உறு­தி­மொ­ழி­களை வழங்கி பாரா­ளு­மன்றம் வந்­த­வர்கள் இன்று உறு­தி­மொ­ழி­களை காற்றில் பறக்­க­விட்டு அம் மக்­களை ஏமாற்றி கஷ்­டத்தில் தள்­ளி­விட்­டுள்­ளனர்.

2500 ரூபா சம்­பள உயர்வும் இல்லை. வீடும் இல்­லாமல் தோட்டத் தொழி­லா­ளர்கள் லயன் அறைகளிலேயே வாழ்­கின்­றனர். தோட்டத் தொழி­லா­ளர்­களை ஏமாற்­றா­தீர்கள். அவர்­க­ளுக்கு வாழ்­வ­தற்கு வழி ஏற்­ப­டுத்திக் கொடுங்கள். தொழி­லா­ளர்­க­ள் இன்று மல­சல கூட வச­தியும் இல்­லா­ம­லேயே வாழ்­கின்­றனர். எனவே மலை­யக மக்­களின் பிரச்­சி­னை­களை வட­ப­குதி அர­சி­யல்­வா­திகள் இங்கு சபையில் பேச வேண்டும். மலை­ய­கத்தை சேர்ந்­த­வர்கள் கிளி­நொச்­சியிலும் வாழ்­கின்­றனர்.

அத்­தோடு தொழி­லா­ளர்­களின் சம்­ப­ளத்­தி­லி­ருந்து மரண சகாய நிதி­யாக ரூபா 100 அறவிடப்படுகிறது. ஆனால் தொழி­லாளி இறக்கும் போது மரண நிதி­யு­தவி வழங்­கப்படுவ­தில்லை. சவப்­பெட்டி கொள்வனவு செய்யவும் கொடுப்பனவு வழங்கப்படுவதில்லை.

தொழிலாளி இறந்து 3 வருடங்களுக்குப் பிறகுதான் மரண உதவி, நிதியுதவி வழங்கப்படுகிறது. இது தான் இன்றைய தோட்டத் தொழிலாளர்களின் நிலையாகும் என்றார்.

Wednesday, February 10, 2016

ஒன்றிணைந்த வடக்கு கிழக்கில் அதியுச்ச அதிகார பகிர்வு

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது ஒன்றிணைந்த வடக்கு கிழக்கில் காணி பொலீஸ் அதிகாரம் உள்ளிட்ட அதியுச்ச அதிகார பகிர்வு அவசியம் என கிளிநொச்சியில் சமூக மேம்பாட்டு அமையம் வலிறுத்தியுள்ளது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு. முருகேசு சந்திரகுமார் அவர்களின் தலைமையில் சமூக மேம்பாட்டு அமையத்தின் உறுப்பினர்களால் அரசியலமைப்புச் சீர்திருத்தத்திற்கான ஆலோசனைகள் இன்று செவ்வாய்கிழமை கிளிநொச்சியில்  புதிய அரசியலமைப்பு யோசணைகள்  பெறும் குழுவிடம் தெரிவிக்கப்பட்டது.  
புதிய அரசியலமைப்பானது இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமக்களுடையதும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் பொறுப்புடன் எல்லாவகையான பாகுபாடுகளுக்கும் எதிரான உச்சப் பாதுகாப்பை வழங்கும் பொறிமுறைகளைக் கொண்டதாக அமைய வேண்டும்.
இன, மொழி, மத, சாதியக் கட்டமைப்பு, பால்நிலை பாகுபாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டு சுதந்திரம், சமத்துவம், சமூகநீதி, சமூகப்பாதுகாப்பு என்பன ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசியலமைப்பின் மூலம் உறுதிசெய்யப்பட வேண்டும். சர்வதேச மனித உரிமைச்சட்டங்களின் அனைத்து சரத்துக்களும் அரசியலமைப்பில் உள்வாங்கப்படுவதன் ஊடாக ஒவ்வொரு தனிமனிதனுடையதும் சமூக, பொருளாதார, அரசியல், கலாசார உரிமைகள் உத்தரவாதப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும்.
உள்வாங்கப்படும் அடிப்படை மனித உரிமைகள் பல்லினத்தன்மை கொண்ட நாடு எனும் அடிப்படையில் நடைமுறையைக் கொண்டிருப்பதற்கான பொறிமுறைகளும், புதிய அரசியலமைப்புச் சீர்திருத்தத்தில் உள்ளடங்கியிருத்தல் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
தேசிய இனங்கள்
மொழி, சமயம், பண்பாட்டு மானிடவியல் அடையாளங்களுடனான சமூகங்களின் தனித்துவம் அங்கீகரிக்கப்பட்டு அவ் அடையாளங்களுடனான தேசிய சமூகங்களாக அரசியலமைப்பில் உறுதிசெய்யப்பட வேண்டும்.
01.சிங்களவர்
02.தமிழர்
03.முஸ்லீம்கள்
04.மலையகத்தமிழர்
05.மலே இனத்தவர்
06.பறங்கியர்
ஒவ்வொரு தேசிய சமூகங்களும் அவற்றின் விசேட தன்மைகளையும், அடையாளங்களையும் அரசியலமைப்பு அங்கீகரித்து உத்தரவாதப்படுத்த வேண்டும். இதன்மூலமே வேற்றுமையில் ஒற்றுமை எனும் கோட்பாட்டின் அடிப்படையில் பல்லினத்தன்மை அங்கீகரிக்கப்பட்டு நீடித்த சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் எட்ட முடியும்.
எண்ணிக்கையிலான சிறுபான்மைத்  தேசிய இனங்களின் சமத்துவத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கு தேசிய இனங்களின் சபை (ர்ழரளந ழக யேவழையெடவைநைள) இனப்பிரிவுகளின் சம எண்ணிக்கையிலான சபை ஒன்று உருவாக்கப்பட வேண்டும். இது பாராளுமன்றுக்கு வெளியாகவும் ஆனால் சமமான அந்தஸ்தை கொண்டதாகவும் அமைதல் வேண்டும்.
தேசிய இனங்களின் சபையானது தேசிய இனம் ஒன்றின் மொழி உரிமை, பொருளாதாரம், பண்பாட்டு விழுமியங்களின் பாதுகாப்பு என்பவற்றின் மீது நிகழ்த்தப்படும் சட்டவாக்கம், அழுத்தம் என்பவற்றை தடுத்து நிறுத்துவதற்கான அதிகாரத்தைக் கொண்டிருப்பதோடு பொருத்தமான சட்டவாக்கங்களையும் முன்வைக்க வேண்டும்.
நீதித்துறைக் கட்டமைப்பில் உச்சநீதிமன்றத்தில் இனத்துவ விவகாரங்களுக்கான பிரிவு ஒன்றும் மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகள் தொடர்பான பிரிவு ஒன்றும் தனித்துவமாகச் செயற்படக்கூடிய ஏற்பாடுகள் அரசியல் உரிமை மூலம் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும்.
அரச கரும மொழிகள்
அரச கரும மொழிகளாக சிங்களம், தமிழ் என்பனவும் இணைப்பு மொழியாக ஆங்கிலமும் அரசியலமைப்பில் உள்வாங்கப்பட்டுள்ள போதும் நடைமுறையில் அது இதுவரை அமுலாக்கம் பெறவில்லை என்பது பகிரங்கமான உண்மையாகும். எனவே, இலங்கையின் ஆள்புலத்தில் வாழும் அனைத்து தேசிய இனங்களும் தமது தாய் மொழியில் நிர்வாகக்கருமங்களை ஆற்றக்கூடிய பொறிமுறை வலுப்படுத்தப்பட வேண்டும்.
இதன் அடிப்படையில் அரச கருமமொழிகள் ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டு மத்திய, மாகாண, மாவட்ட, பிரதேச மட்டங்களில் நிர்வாக நீதிமன்ற மொழியாக தாய்மொழி பயன்படுத்தப்படுதல் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
கல்விச் செயற்பாட்டில் காணப்படும் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் அமுலாக்கப்பட்டுள்ள மும்மொழித்திறன் தேர்வை முன்னுதாரணமாகக் கொண்டு க.பொ.த சாதாரண தரம் வரை  கலைத்திட்டத்தில் மும்மொழிக் கற்கை அரசியலமைப்பு மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
தேர்தல் முறை
இலங்கையின் சமாதான சகவாழ்வு உறுதிசெய்யும் முறையிலான சீர்திருத்தங்களை ஏற்பாடு செய்யவேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொகுதிவாரியான பிரதிநிதித்துவத்திற்கு மேலதிகமாக எண்ணிக்கையிலான சிறுபான்மை தேசிய இனங்களின் பிரதிநிதித்துவம், சிறிய கட்சிகளின் பிரதிநிதித்துவம் போன்ற கலப்பு முறைப் பிரதிநிதித்துவம் மூலமே ஜனநாயகம் உறுதிப்படுத்தப்படும். எனவே, அரசியலமைப்பின் ஊடாக இவை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
மகளீர் பிரதிநிதித்துவத்துக்கான பால்நிலைச் சமத்துவத்தின் முன் நிபந்தனையாக உள்ளூராட்சிச் சபைகளில் மகளீருக்கான ஒதுக்கீடு மூன்றில் ஒன்றாகவும், மாகாணசபைகளில் ஐந்தில் ஒன்றாகவும், பாராளுமன்றில் ஆறில் ஒன்றாகவும் மகளீர் பிரதிநிதித்துவ ஒதுக்கீடு அரசியலமைப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
குறிப்பாக மூன்றில் ஒரு பங்கு உள்ளூராட்சி சபைகளின் தலைமைப்பொறுப்பை பெண்கள் வகிக்கக்கூடிய அடிப்படையில் அரசியலமைப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
எண்ணிக்கையிலான சிறுபான்மை தேசிய இனங்களின் பிரதிநிதித்துவ எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டுமே அன்றி குறைக்கப்படலாகாது.

அதிகாரப்பகிர்வு
வடக்குக் கிழக்கு இணைந்ததான பிராந்திய சபை அரசியலமைப்பு மூலம் உறுதிசெய்யப்படல் வேண்டும். இச்சபைக்குள் காணப்படும் எண்ணிக்கையிலான சிறுபான்மைத் தேசிய இனங்களின் சிறப்புரிமைகள் மற்றும் பாதுகாப்பு உறுதிசெய்யப்படல் வேண்டும்.
அதிகாரப்பகிர்வு தொடர்பான விடயங்கள் அரசியலமைப்பில் தெளிவான வியாக்கியானம் உடையவையாக அமைதல் வேண்டும். மயக்கமான கருத்துக்கள், தப்பான மொழிமாற்றத்திற்கான சந்தர்ப்பங்கள் கொண்டவையாக இவ்விடயங்கள் அமையக்கூடாது.
மாகாணசபையின் நிறைவேற்று அதிகாரம் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மாகாணசபையின் காலங்களில் மாகாணசபையின் முதலமைச்சருக்கு உரியதாகவே வரையறை செய்யப்பட வேண்டும்.
மாகாணசபைகள் முதலமைச்சர் நிதியம், அவசரகால நிதியம், இடர் முகாமைத்துவ நிதியம், மாகாண அபிவிருத்தி நிதியம் என்பவற்றை மாகாணசபைகள் ஸ்தாபிப்பதற்கும், செயற்படுத்துவதற்குமான அதிகாரம் அரசியலமைப்பின் மூலம் உறுதிசெய்யப்பட வேண்டும்.
மாகாணசபைக்குப் பகிர்ந்தளிக்கப்பட்ட விடயங்களில் மத்திய அரசின் ஆலோசனை தவிர்ந்த நேரடித்தலையீடுகள் இடம்பெறாது இருப்பதை அரசியலமைப்புத் திருத்தம் உறுதிசெய்தல் வேண்டும்.
மாகாணசபையின் ஆட்புலத்திற்கு உட்பட்ட மத்திய அரசின் விடயங்களை நடைமுறைப்படுத்துதலில் குறித்த மாகாண முதலமைச்சரின் ஆலோசனைகள் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்பதையும் அரசியலமைப்புச் சீர்திருத்தம் உள்வாங்க வேண்டும்.
இதேபோன்று உள்ளூராட்சிச் சபைகளின் கையாள்கைக்கு ஒதுக்கப்பட்ட விடயங்களில் மத்திய அரசு மற்றும் மாகாண அரசுகளின் நேரடித்தலையீடு தவிர்க்கப்படுதல் அரசியலமைப்புச்; சீர்திருத்தத்தில் உறுதிசெய்யப்பட வேண்டும்.
மத்திய அரசுக்கும் மாகாண அரசுகளுக்கு இடையேயும், மாகாண அரசுகளுக்கும் உள்ளூராட்சி அமைப்புகளுக்கு இடையேயும் ஏற்படும் பிணக்குகளைத் தீர்ப்பதற்கான அதிகாரப்பகிர்வு ஆணைக்குழு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும்.
இது சுயாதீனமானதும், சட்ட வலுவுடைய நிறுவனமாகவும் செயற்படுவதை அரசியலமைப்புச் சீர்திருத்தம் உறுதிசெய்ய வேண்டும்.
மலையக மக்களின் சிறப்புரிமை (கிளிநொச்சி மாவட்டம் சார்பானது)
கிளிநொச்சி மேற்கில் 16 கிராமசேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கிய பிரதேசம், ஆனைவிழுந்தான், ஜெயபுரம் கிராம அலுவலர் பிரிவுகள் மற்றும் கிளிநொச்சி கிழக்கில் உழவனூர், புதிய புன்னைநீராவி, தருமபுரம், கல்மடுநகர், மாயவனூர், இயக்கச்சியில் கொற்றாண்டார்குளம், லுஆஊயு குடியிருப்பு ஆகிய மேற்படி பிரதேசங்களில் மலையகத்திலிருந்து இடம்பெயர்ந்து வந்து மாவட்டத்தின் சனத்தொகையில் ஏறக்குறைய 45 வீதமான மக்கள் வாழ்கின்றனர். இவர்கள் தனித்துவமான சமூக, பொருளாதார, கலாசார கட்டமைப்பைக் கொண்டு இருக்கின்றனர். எனினும் இவர்கள் பரந்துபட்ட ஏனைய தமிழ் மக்களின் இனத்துவ அடையாளங்களுடன் வாழ்கின்ற போதும் இவர்களுக்கான தனித்துவம் மிக்க அடிப்படை பிரச்சினைகளும், தேவைகளும் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார நிலைமைகள், குடியிருக்கும் பிரதேசங்களின் அபிவிருத்தி என்பவற்றில் முன்னுரிமை பெறவேண்டிய அளவு நலிவுற்றவர்களாக காணப்படுகின்றனர்.
எனவே இவர்கள் இலங்கையில் வாழும் மலையகத் தமிழர் என்கின்ற தேசிய இனத்துவ அடையாளங்களுக்குள் உள்வாங்கப்படுவதுடன் இவர்களுடைய நலன்களுக்கும் முன்னுரிமை பெறப்படும் வாய்ப்பு உள்ளதால் இந்த தனித்துவமான தேசிய அடையாளத்தை மலையக மக்களுடன் இணைந்து பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை அமையப்போகும் புதிய அரசியலமைப்பு அங்கீகரிக்க வேண்டும் என கோருகின்றோம்.
அத்துடன் இவர்களுக்கான அரசியல், சமூக, பொருளாதார அந்தஸ்தையும் பிரதிநிதித்துவத்திற்கான இடத்தையும் வழங்குவதற்கு இடமளிக்கப்பட வேண்டும்.
வளப்பகிர்வு
எமது நாட்டின் வளங்களான கனிமவளங்கள், ஆளனிவளங்கள், நீர்நிலைகள், நீர்வளங்கள், நிலவளங்கள், வனவளங்கள் போன்றவை தேவைக்கேற்ப வளப்பகிர்வுகளைப் பங்கிடுவதற்கு தேவையின் அடிப்படையில் ஒரு பொதுக்கொள்கை வகுக்கவேண்டிய தேவை உணரப்பட்டுள்ளது. இதனைப்பெறுவது அல்லது பயன்படுத்துவது ஒவ்வொருவருடைய அடிப்படை உரிமையாகும். அடிப்படை உரிமையை மீறாத வகையில் ஒவ்வொரு சமூகத்திற்கும் நியாயம் கிடைக்கத்தக்க வகையில் பங்கீடு செய்வதை புதிய அரசியலமைப்பு உறுதி செய்யவேண்டும்.
விவசாயப் பொருளாதார நாடான எமது நாட்டின் விவசாயிகளினுடைய அடிப்படை உரிமைகள் அரசியல் சாதனத்தின் ஊடாக பாதுகாக்கப்பட வேண்டும். தேவை கூடிய பிரதேசங்கள் அல்லது அபிவிருத்தியில் பின்தங்கிய பிரதேசங்கள், அபிவிருத்தி செய்வதற்கு விசேட ஏற்பாடுகள் ஊடாக அபிவிருத்தி செய்து சமச்சீராக எல்லாப் பிரதேசங்களும் எல்லா வளங்களும் உடைய பிரதேசங்களாக மாற்றி எல்லா மக்களுடைய அடிப்படை உரிமைகளையும் புதிய அரசியலமைப்பு பாதுகாக்க வேண்டும்.
அரசியலமைப்பில் சொல்லப்பட்ட விடயங்கள் அனைத்தும் முழுமையாக நடைமுறைப்படுத்துவதை உறுதிசெய்வதற்கு அல்லது நடைமுறைப்படுத்துவதற்கு ஓர் விசேட ஆணைக்குழு அமைக்க வேண்டும் என்பதையும் அரசியலமைப்பு உறுதிசெய்ய வேண்டும்.

பொதுச்சேவைகள்.
எமது நாட்டின் புதிதாக அரச சேவைகளுக்குள் உள்வாங்கப்படுபவர்கள் அனைவரும் தேசிய மொழிகளான சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் க.பொ.த சாதாரண சித்தியை வலியுறுத்துவதன் மூலம் தேசிய பொதுச்சேவைகள் வினைத்திறனுள்ளதாக அமைவதையும், நல்லிணக்கத்தையும் உறுதிசெய்வதாக புதிய அரசியலமைப்பு அமையவேண்டும்.

பொதுமக்களின் பாதுகாப்பு
பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நாட்டின் இன விகிதாசாரத்திற்கு அமைய வேலைவாய்ப்புக்கள் வழங்கப்படல் வேண்டும்.
பொலிஸ் நியமனங்களின் போதும் இன விகிதாசாரங்கள் பேணப்படல் வேண்டும். அவ்வாறே இராணுவம் கடற்படை விமானப்படை போன்றவற்றின் ஆட்சேர்ப்பு அல்லது நியமனங்களின் போது நாட்டின் இன விகிதாசாரத்திற்கு அமைய நியமனங்கள் செய்வதன் மூலம் நல்லிணக்கத்தையும், பொதுமக்கள் பாதுகாப்பையும் உறுதிசெய்யக்கூடிய அரசியலமைப்புத் திருத்தத்தை வேண்டுகிறோம்.
உழைப்பாளர்களையும், உற்பத்தியாளர்களையும் பாதிக்காதவாறும் பாதுகாப்பானதாகவும் அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறாத வகையிலும் நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளை மாற்றம் செய்வதை அரசியல் சாதனத்தின் ஊடாக உறுதி செய்தல் வேண்டும்.
பாரிய அபிவிருத்திகளின் போதும் பொருளாதார கொள்கைகளைச் சீரமைக்கும் போதும் அதுதொடர்பான சமூகங்களின் பிராந்திய ரீதியாக கருத்துக்கணிப்பு பெற்று மேற்கொள்வதை உறுதிசெய்யும் பொறிமுறையை ஏற்படுத்தி அடிப்படை உரிமைகளைப் பேணுவதனூடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்.

திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தருக்கான விண்ணப்ப முடிவுத்திகதி 19 வரை

திவி­நெ­கும அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்­த­ருக்­கான விண்­ணப்ப முடிவு திகதி இம்­மாதம் 19 ஆம் திகதி வரை நீடிக்­கப்­பட்­டுள்­ளது. அதே­வேளை வய­தெல்­லையும் 30 இல் இருந்து 35 வரை உயர்த்­தப்­பட்­டுள்­ளது. எனவே விண்­ணப்­பிக்க தவ­றி­ய­வர்­களும் வய­தெல்லை பிரச்­சி­னைக்­கு­ரி­ய­வர்­களும் இவ்­வாய்ப்பை தவ­றாது பயன்­ப­டுத்­திக்­கொள்­ளு­மாறு ஐக்­கிய தேசிய முன்னணியின் பதுளை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும், தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் உப­த­லை­வ­ரு­மா­கிய அ. அர­விந்­த­குமார் தெரி­வித்­துள்ளார்.
அவர் மேலும் குறிப்­பிட்­டுள்­ள­தா­வது, சுமார் 7000 திவி­நெ­கும அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்தர் நிய­ம­னங்கள் வழங்­கப்­ப­ட­வி­ருக்கும் இவ்­வே­ளையில் மலை­ய­கத்தில் படித்த இளைஞர், யுவ­தி­களை அதி­க­ளவில் உள்­வாங்­கப்­பட வேண்­டு­மென்ற இலக்­கோடு தமிழ் முற்­போக்கு கூட்­டணி செயற்­பட்டு வரு­கின்­றது. எமது கூட்­ட­ணியின் தலை­வரும், அமைச்­ச­ரு­மா­கிய மனோ­க­ணேசன் இவ்­வி­டயம் தொடர்­பாக அமைச்­ச­ர­வை­யிலும் அதிக அழுத்­தத்தை பிர­யோ­கிக்­க­வுள்ளார். தற்­போது இந்­நாட்டில் சுமார் 19 இலட்சம் பேர் சமுர்த்தி நிவா­ர­ணத்தின் பய­னா­ளி­க­ளாக உள்­ளனர்.
ஆனால் துர­திஷ்­ட­வ­ச­மாக மிக­வ­றுமை கோட்­டிற்கு கீழுள்ள மலை­யக மக்­களோ இதில் மூவா­யி­ரத்­திற்கும் குறை­வா­ன­வர்­க­ளா­கவே பய­னா­ளி­க­ளா­க­வுள்­ளனர். எனவே திவி­நெ­கும அபி­வி­ருத்தி உத்­தி­யே­ா­கத்­தர்கள் எம்­ச­மூ­கத்­தி­லி­ருந்து அதி­க­ளவில் நிய­மனம் பெரும் பட்­சத்தில் சமுர்த்தி நிவா­ர­ணத்தை பெறு­ப­வர்­களின் எண்­ணிக்­கை­யையும் உணர்த்­து­வ­தற்கு இந்­நி­ய­மனம் ஏது­வாக அமையும். கீழ் கண்ட தக­மை­களை உடை­ய­வர்கள் தவ­றாது விண்­ணப்­பிக்க வேண்டும்.
க.பொ.த சாதா­ர­ண­தர பரீட்­சையில் தமிழ், கணிதம் அடங்­க­லாக நான்கு பாடங்­களில் திறமைச் சித்­தி­யுடன் ஒரே தட­வையில் ஆறு பாடங்­களில் சித்­தி­ய­டைந்­தி­ருத்தல் வேண்டும். க.பொ.த உயர்­தர பரீட்­சையில் 1 பாடத்­தி­லா­வது சித்­தி­ய­டைந்­தி­ருத்தல் வேண்டும். வய­தெல்லை:- விண்­ணப்­பங்கள் ஏற்­றுக்­கொள்­ளப்­படும் இறுதித் திக­திக்கு 18 வய­துக்கு குறை­யா­மலும் 30 வய­துக்கு மேற்­ப­டா­மலும் இருத்தல் வேண்டும். பரீட்சைக் கட்­டணம் :- ரூபா 500/– (திவி­நெ­கும சமுர்த்தி வங்­கியில் செலுத்­தலாம்)
மேற்­படி பத­விக்கு விண்­ணப்­பிக்கும் விண்­ணப்­ப­தா­ரர்கள் பூர­ணப்­ப­டுத்­தப்­பட்ட விண்­ணப்­ப­ப்ப­டி­வங்­களை பதி­வாளர் ஸ்ரீ ஜெய­வர்­தன விஷ்வ வித்­தி­யா­ல­யம், கங்­கொ­ட­வி­ல, நுகே­கொட என்ற விலா­சத்­திற்கு அனுப்­புதல் வேண்டும்.
விண்­ணப்பம் அனுப்­பப்­படும் கடி­த­வு­றையின் இட­து­பக்க மேல் மூலையில் திவி­நெ­கும அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்தர் சேவைக்கு ஆட்சேர்ப்­ப­தற்­கான திறந்த போட்டிப் பரீட்சை 2016 என தெளிவாக குறிப்­பிட்டு 19.02.2016ஆம் திக­தி­யன்றோ அல்­லது அதற்கு முன்­ப­தா­கவோ கிடைக்­கக்­கூ­டி­ய­வாறு பதி­வுத்­த­பாலில் அனுப்பி வைக்­கப்­படல் வேண்டும்.
விண்­ணப்­பப்­ப­டி­வங்­களை மலை­யக மக்கள் முன்­னணி மற்றும் மலை­யக தொழி­லாளர் முன்­ன­ணியின் அட்டன் தலைமைக் காரி­யா­லயம் உள்­ளிட்ட அனைத்து பிராந்­திய மாவட்ட காரி­யா­ல­யங்­க­ளிலும் மலை­யக மக்கள் முன்­ன­ணியின் அனைத்து உள்­ளூராட்சி சபை­களின் முன்னாள் உறுப்­பி­னர்­கள், அமைப்­பா­ளர்கள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் ஆகியோர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை இது தொடர்பான மேலதிக தகவல்கள் எமது அனைத்து காரியாலயங்கள் மற்றும் பிரதேச அமைப்பாளர்களிடமிருந்தும், 051-4920300, 051-4020302, 051-2222793, 052-2223052, 055-2229838, 055-4928206, 055-2231526 ஆகிய தொலைபேசி இலக்கங்களோடு தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளவும் முடியும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, February 9, 2016

புதிய அரசியலமைப்பில் மலையக மக்களுக்கும் இடம்..... ?

புதிதாக அமைக்கப்படவுள்ள அரசியலமைப்பில் மலையகத்தில் இருந்து இடம்பெயர்ந்து வடக்கு மாகாணத்தில் வாழும் மலையக மக்களுக்கான அபிவிருத்தி முதல் அரசியல் வரையான விசேட ஏற்பாடுகள் கொண்டு வரப்படவேண்டுமென அம்மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்று கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற புதிய அரசியலமைப்பு சீா்திருத்தம் மீதான மக்கள் கருத்தறியும் அமா்விலேயே மேற்படி கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
45 வீதமான மலையக மக்கள் வாழ்கின்ற போதும் வடக்கு மாகாண சபையில் தங்கள் சார்பாக ஒரு உறுப்பினர் கூட இல்லை. இதுவே இந்த மக்களின் நிலைமைகளுக்கான சிறந்த உதாரணம். எனவே உள்ளுராட்சி சபைகளிலும் கூட வடக்கு வாழ் மலையக மக்களின் விகிதாசாரத்திற்கு ஏற்ற அளவு பிரதிநிதித்துவம் வழங்கப்படுவதில்லை.
கிளிநொச்சி மேற்கில் 16 கிராம சேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கிய பிரதேசம், ஆணைவிழுந்தான், ஜெயபுரம் கிராம அலுவலர் பிரிவுகள் மற்றும் கிளிநொச்சி கிழக்கில் உழவனூர், புதிய புன்னை நீராவி, தருமபுரம், கல்மடுநகர், மாயவனூர், இயக்கச்சியில் கொற்றாண்டார்குளம், மேற்படி பிரதேசங்களில் மலையகத்திலிருந்து இடம்பெயர்ந்து வந்து மாவட்டத்தின் சனத்தொகையில் ஏறக்குறைய 45 வீதமான மக்கள் வாழ்கின்றனர்.
இவர்கள் தனித்துவமான சமூக, பொருளாதார, கலாசார கட்டமைப்பைக் கொண்டு இருக்கின்றனர். எனினும் இவர்கள் பரந்துபட்ட ஏனைய தமிழ் மக்களின் இனத்துவ அடையாளங்களுடன் வாழ்கின்ற போதும் இவர்களுக்கான தனித்துவம் மிக்க அடிப்படை பிரச்சினைகளும், தேவைகளும் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார நிலைமைகள், குடியிருக்கும் பிரதேசங்களின் அபிவிருத்தி என்பவற்றில் முன்னுரிமை பெறவேண்டிய அளவு நலிவுற்றவர்களாக காணப்படுகின்றனர்.
எனவே இவர்கள் இலங்கையில் வாழும் மலையகத் தமிழர் என்கின்ற தேசிய இனத்துவ அடையாளங்களுக்குள் உள்வாங்கப்படுவதுடன் இவர்களுடைய நலன்களுக்கும் முன்னுரிமை பெறப்படும் வாய்ப்பு உள்ளதால் இந்த தனித்துவமான தேசிய அடையாளத்தை மலையக மக்களுடன் இணைந்து பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை அமையப்போகும் புதிய அரசியலமைப்பு அங்கீகரிக்க வேண்டும் என கோருகின்றோம்.
அத்துடன் இவர்களுக்கான அரசியல், சமூக, பொருளாதார அந்தஸ்தையும் பிரதிநிதித்துவத்திற்கான இடத்தையும் வழங்குவதற்கு இடமளிக்கப்பட வேண்டும். எனவும் தங்களின யோசனைகளை அவர்கள் இக்குழுவினரிடம் முன்வைத்தனர்.

Monday, February 8, 2016

இந்­திய வம்­சா­வளி மக்கள் "தனித்­து­வ­மான இன­மாக" ஏற்றுக் கொள்­ளப்­பட வேண்டும்

புதிய அர­சி­ய­ல­மைப்பில் இந்­திய வம்­சா­வளி மக்கள் "தனித்­து­வ­மான இன­மாக" ஏற்றுக் கொள்­ளப்­பட வேண்டும் இதற்கு இந்­திய அர­சாங்கம் முழு­மை­யான ஆத­ரவை வழங்க வேண்டும் என இந்­திய வெளியு­றவுத் துறை அமைச்சர் சுஷ்­மா ­சு­வ­ரா­ஜிடம் வலி­யு­றுத்­தி­ய­தாக இலங்கை தொழி­லாளர் காங்­கி­ரஸின் தலைவர் முத்து சிவ­லிங்கம் தெரி­வித்தார். "தோட்டம்" என்ற சொல் கிரா­ம­மாக மாற்­றப்­பட வேண்டும் என்­ப­தையும் வலி­யு­றுத்­தி­ய­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.
இலங்­கைக்கு இரண்டு நாள் உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை மேற்­கொண்டு வருகை தந்­தி­ருந்த வெளியு­றவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவ­ரா­ஜை கடந்த சனிக்­கி­ழமை இ.தொ.கா. தூதுக் குழு­வி­னர் சந்­தித்து பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தினர். இது தொடர்­பாக மேலும் கூறு­கையில் ,
இந்­திய வெளியு­றவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை கடந்த சனிக்­கி­ழமை கொழும்பில் மரி­யா­தையின் நிமித்தம் சந்­தித்தோம். இச் சந்­திப்பில் இ.தொ.கா. செய­லாளர் ஆறு­முகம் தொண்­டமான் உட்­பட முக்­கி­யஸ்­தர்கள் கலந்து கொண்­டனர்.

இதன்­போது புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பாக எமது தரப்பு யோச­னை­களை முன்­வைத்தோம். அதா­வது இலங்­கையில் பல தசாப்­தங்­க­ளாக வாழும் இலங்­கையின் பொரு­ளா­தா­ரத்­திற்கு உயிர் கொடுத்த இந்­திய வம்­சா­வளி மக்­கள் தனித்­து­வ­மான இன­மாக ஏற்றுக் கொள்­ளப்­பட வேண்டும். அதனை புதிய சட்­ட­மாக உள்­ளீர்க்­கப்­பட வேண்டும். இதற்­காக இந்­திய அர­சாங்கம் தமது ஆத­ரவை வழங்க வேண்டும் என்ற எமது பக்க வேண்­டு­கோளை முன்­வைத்தோம்.
அத்­தோடு "தோட்டம்" என்ற சொல் மாற்­றப்­பட்டு மலை­யக பெருந்­தோட்ட தொழி­லா­ளர்கள் வாழும் இடங்கள் "கிராமம்" என அழைக்­கப்­பட வேண்டும். அதற்­காக அர­சாங்கம் விசேட வர்த்­த­மானி அறி­விப்பு வெளியிட வேண்டும். இதற்கு இந்­தியா ஆத­ரவை வழங்க வேண்டும் என்ற விட­யத்­தையும் முன்­வைத்தோம்.

தற்­போது தேயிலை தொழில்­துறை, இறப்பர் தொழில்­துறை என்பன அழிந்து கொண்­டி­ருக்­கின்­றன. ஆனால் மலை­யக மக்கள் தமது குடி­யி­ருப்­புக்­களை விட தயா­ராக இல்லை. இந்­திய அரசின் உத­வியும் எமது காலத்தில் உறு­தி­ய­ளிக்­கப்­பட்ட 4000 வீட்டுத் திட்டம் தொடர்­பிலும் இப் பேச்­சுக்­களின் போது கலந்­து­ரையாடப்­பட்­டது.

அத்­தோடு இந்­தி­யாவின் புல­மைப்­ப­ரி­சில்கள் திட்­டத்தில் அதி­க­ளவு இந்­திய வம்­சா­வளி மக்­களின் பிள்­ளை­க­ளுக்கே அவை வழங்­கப்­பட வேண்டும் என்ற விட­யத்­தையும் எடுத்­து­ரைத்தோம். இந்­திய வம்­சா­வளி மக்கள் தனித்­து­வ­மான இன­மாக ஏற்றுக் கொள்­ளப்­பட வேண்­டி­ய­தோடு, கல்வி, சுகா­தாரம், அடிப்­படை வச­திகள் உட்­பட முக்­கிய விட­யங்­களில் எமது மக்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­பட வேண்டும்.

இவ்வாறான விடயங்களை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம் முன்­வைத்து இதற்கு இந்­தியா ஆதரவை வழங்க வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்தோம் என்ர்.

மலை­ய­கத்­த­வர்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கும் விரைவில் நிரந்­தர தீர்வு

இன­வா­தத்தை வேர­றுத்து அமைதிச் சூழலை மேம்­ப­டுத்த நல்­லாட்சி அர­சாங்கம் முனைப்­புடன் செயற்­பட்டு வரு­கின்­றது. தூர­நோக்­குடன் செயற்­படும் நல்­லாட்சி அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­களால் நாட்டு மக்கள் பெரிதும் நன்­மை­ய­டைவர். மேலும் மலை­ய­கத்­த­வர்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கும் விரைவில் நிரந்­தர தீர்வு கிடைக்கும் என்ற நம்­பிக்கை எமக்­குள்­ளது என்று ம.ம.மு  செய­லாளர் நாயகம் ஏ.லோறன்ஸ் தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில், நல்­லாட்­சி அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்து ஒரு வருட காலமே நடந்து முடிந்­துள்­ளது. இந்­நி­லையில் இந்த அர­சாங்கம் தொடர்பில் பலரும் பல்­வேறு விமர்­ச­னங்­க­ளையும் முன்­வைத்து வரு­கின்­றனர். இத்­த­கைய விமர்­ச­னங்­களின் நம்­ப­கத்­தன்மை தொடர்பில் நாம் சிந்­திக்க வேண்­டி­யுள்­ளது. கடந்­த­கால அரசாங்கம் இனவாதத்திற்கு துணைபோன ஒரு அர­சாங்­க­மாக இருந்­தது. நாட்டு மக்கள் இன­வாத சிந்­த­னைக்குள் மூழ்­க­டிக்­கப்­பட்­டி­ருந்­தனர். தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்­ப­டு­வதை கூட அனு­ம­திக்­காத நிலையில் சில இனவாதிகள் உள்­ளனர். எனினும் புதிய அர­சாங்கம் தமிழ்மொழிக்கு உரிய அந்­தஸ்­தினை வழங்­கு­வ­தற்கு உறுதி பூண்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்க விட­ய­மாகும்.

19 ஆவது திருத்­தத்தின் ஊடாக இலங்­கையில் தற்­போது பல்­வேறு ஆணைக்­கு­ழுக்கள் நிறு­வப்­பட்­டுள்­ளன. இத்­த­கைய நட­வ­டிக்­கைகள் நீண்­ட­கால இலக்­கி­னைக் கொண்­ட­ன­வாக விளங்­கு­கின்­றன. தூர­நோக்­குடன் நல்­லாட்சி அர­சாங்கம் செயற்­ப­டு­கின்­றது. இதனால் நாட்டு மக்கள் பெரிதும் நன்­மை­ய­டைவர். நல்­லாட்சி அர­சாங்­கத்தின் ஊடாக நாட்டில் வாழும் அனைத்து இன மக்­களும் ஒரு தாயின் மக்­க­ளாக கை­கோர்க்கும் நிலை உரு­வாகும். மேலும் மலை­யக மக்கள் உள்­ளிட்ட சகல இன மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கும் நிரந்­தரத் தீர்வு கிடைக்கும் என்ற நம்­பிக்­கையும் எமக்கு நிறை­யவே உள்­ளது. விலை­வாசி குறைப்பு போன்ற நட­வ­டிக்­கைகள் உட­ன­டி­யாக பலனைத் தரும். எனினும் தூர­நோக்­குடன் செயற்­படும் போது அதன் பலன்கள் உட­ன­டி­யாக வெளித்­தெ­ரி­வ­தில்லை என்­ப­தையும் விளங்கிக் கொள்­ளுதல் வேண்டும். நீண்ட காலப்­போக்கில் நன்­மைகள் வெளித்­தெ­ரியும். நல்­லாட்சி அர­சாங்­கத்தை விமர்­சிப்­ப­வர்கள் அரசின் செயற்­பா­டுகள் தொடர்­பாக மிகவும் கூர்ந்து கவனம் செலுத்­துதல் வேண்டும். எழுந்­த­மா­ன­மாக கருத்­து­களை தெரி­விப்­பது பிழை­யா­ன­தாகும். நாட்டில் இப்­போது இன­வாத சூழல் மெது­மெ­து­வாக குறைந்து கொண்டு வரு­கின்­றது.

இன­வாதம் பேசும் ஒரு குழு­வினர் இன்னும் அர­சி­யலில் இருந்து வரு­கின்­றனர். இவர்கள் மக்­களின் நலன்­களை கிஞ்­சித்தும் சிந்­திக்­காத சுய­ந­ல­வா­தி­க­ளாவர். ஆட்சி மாற்­றத்தை ஏற்­ப­டுத்தி அர­சி­யலில் ஆதிக்கம் செலுத்­து­வதன் ஊடாக தன் குடும்­பத்­தையும் தன்னைச் சார்ந்­தோ­ரையும் வாழ­வைப்­பதே இவர்­களின் நோக்­க­மாக உள்­ளது. இத்­த­கை­யோரின் வழியில் செல்­வ­தற்கு நாட்டு மக்கள் இனியும் தயா­ராக இல்லை. வர­லாறு கற்­றுத்­தந்த பாடங்­களை அடிப்­ப­டை­யாக கொண்டு இன­வா­திகள் தம்மை திருத்திக் கொள்­வது மிக மிக அவ­சி­ய­மாகும். நாட்டின் ஒரு­மைப்­பாட்­டிற்கு இன­வா­திகள் குந்­த­க­மாக செயற்­ப­டு­வ­தனை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

Tuesday, February 2, 2016

பெருந்தோட்டங்களையும் அரசாங்கம் கவனிக்க வேண்டும்

அரசாங்கம், பெருந்தோட்டங்கள் தொடர்பில் அதிகூடிய கவனம் செலுத்த வேண்டும் என்பதுடன் தோட்டத் தொழிலாளர்களையும் தோட்டங்களையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்' என தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. 

இது தொடர்பில் கூறியுள்ளதாவது, தோட்டத் தொழிலாளர்கள், சம்பள உயர்வு கோரிக்கையை முன்வைத்ததை அடுத்து, தேயிலைத் தோட்டங்களை தொழில்சார்  கடமைகளுக்கு மட்டும் தொழிலாளர்களுக்கு பிரித்துக்கொடுப்பதற்கு சில தோட்டக் கம்பனிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. பலாங்கொடை பிளான்டேசன் கம்பனியின் பொறுப்பிலுள்ள பதுளை மாவட்டத்தின் பல தோட்டங்களில், தேயிலை உற்பத்தி குறைந்த தேயிலை மலைகளை, தொழிலாளர்;களுக்கு பிரித்துக் கொடுப்பதற்கான முன்னெடுப்புகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.   தேயிலைத் தோட்டங்களில் தேயிலை தளிர்களை கொய்யவும் இறப்பர் தோட்டங்களில் இறப்பர் பால் எடுத்தல் மட்டுமே தொழிலாக இருந்து வருகின்றன. 

இதனால், தோட்ட உத்தியோகத்தர்கள் ஒரு சிலரை மட்டும் வைத்துக்கொண்டு, பெரும்பாலான உத்தியோகத்தர்களை கடமைகளிலிருந்து நீக்க முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. தொழிலாளர்களுக்கு சேமநலன் திட்டங்கள் எதுவும் தோட்ட நிர்வாகத்தினால் முன்னெடுக்கப்படுவதில்லை. பெரும்பாலான தேயிலைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. தோட்டங்களில் உற்பத்தி குறைந்த தேயிலை மலைகளை தொழிலாளர்களுக்கு பிரித்துக் கொடுக்கும் நிலை அமுல்படுத்தப்படுமேயானால், தோட்டத் தொழிலாளர்களுக்கு தொழில் உத்தரவாதமோ அல்லது தொழில் பாதுகாப்போ இல்லாததோடு, ஆரோக்கியமற்ற சூழல் உருவாகும். 

அத்துடன், தொழிலாளர்களுக்கு செலுத்த வேண்டிய ஊழியர் சேமலாபநிதி, ஊழியர் நம்பிக்கை நிதியம், பிரசவ சகாயநிதி, சேவைகாலப் பணம் போன்ற சட்டப்பூர்வ கொடுப்பனவுகள் எதுவும் வழங்கப்பட மாட்டாது. இப்படிப்பட்ட உற்பத்தி குறைந்த தேயிலை மலைகளில் தொழில் செய்யும் வேளையில் விபத்துகள் ஏற்பட்டால், விபத்துக்குள்ளானவரை வைத்தியசாலைக்கு  எடுத்துச்செல்ல வாகன வசதிகளும் வழங்கப்படமாட்டாது. அத்துடன், நட்ட ஈடுகளும் கிடைக்காது. இந்நிலை நடைமுறைப்படுத்தப்படின், தோட்டத் தொழிலாளர்கள் பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டி வருவதுடன் வாழ்வாதாரங்களில் பெரும் பாதிப்புகளை அடைய வேண்டி ஏற்படும். 

பெரும்பாலான தோட்டங்களில், ஆண் தொழிலாளர்கள்  தோட்டங்களை விட்டு வெளியேறி வெளியிடங்களில் தொழில்புரிந்து வருகின்றனர். தொழிலின் நிமித்தம் வெளியிடங்களுக்கு செல்ல முடியாத பெண்கள், தோட்டங்களை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். எனவே, அரசாங்கம் இவ்விடயங்களை கருத்திற்கொள்ள வேண்டும்' என தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன