Monday, February 8, 2016

இந்­திய வம்­சா­வளி மக்கள் "தனித்­து­வ­மான இன­மாக" ஏற்றுக் கொள்­ளப்­பட வேண்டும்

புதிய அர­சி­ய­ல­மைப்பில் இந்­திய வம்­சா­வளி மக்கள் "தனித்­து­வ­மான இன­மாக" ஏற்றுக் கொள்­ளப்­பட வேண்டும் இதற்கு இந்­திய அர­சாங்கம் முழு­மை­யான ஆத­ரவை வழங்க வேண்டும் என இந்­திய வெளியு­றவுத் துறை அமைச்சர் சுஷ்­மா ­சு­வ­ரா­ஜிடம் வலி­யு­றுத்­தி­ய­தாக இலங்கை தொழி­லாளர் காங்­கி­ரஸின் தலைவர் முத்து சிவ­லிங்கம் தெரி­வித்தார். "தோட்டம்" என்ற சொல் கிரா­ம­மாக மாற்­றப்­பட வேண்டும் என்­ப­தையும் வலி­யு­றுத்­தி­ய­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.
இலங்­கைக்கு இரண்டு நாள் உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை மேற்­கொண்டு வருகை தந்­தி­ருந்த வெளியு­றவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவ­ரா­ஜை கடந்த சனிக்­கி­ழமை இ.தொ.கா. தூதுக் குழு­வி­னர் சந்­தித்து பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தினர். இது தொடர்­பாக மேலும் கூறு­கையில் ,
இந்­திய வெளியு­றவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை கடந்த சனிக்­கி­ழமை கொழும்பில் மரி­யா­தையின் நிமித்தம் சந்­தித்தோம். இச் சந்­திப்பில் இ.தொ.கா. செய­லாளர் ஆறு­முகம் தொண்­டமான் உட்­பட முக்­கி­யஸ்­தர்கள் கலந்து கொண்­டனர்.

இதன்­போது புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பாக எமது தரப்பு யோச­னை­களை முன்­வைத்தோம். அதா­வது இலங்­கையில் பல தசாப்­தங்­க­ளாக வாழும் இலங்­கையின் பொரு­ளா­தா­ரத்­திற்கு உயிர் கொடுத்த இந்­திய வம்­சா­வளி மக்­கள் தனித்­து­வ­மான இன­மாக ஏற்றுக் கொள்­ளப்­பட வேண்டும். அதனை புதிய சட்­ட­மாக உள்­ளீர்க்­கப்­பட வேண்டும். இதற்­காக இந்­திய அர­சாங்கம் தமது ஆத­ரவை வழங்க வேண்டும் என்ற எமது பக்க வேண்­டு­கோளை முன்­வைத்தோம்.
அத்­தோடு "தோட்டம்" என்ற சொல் மாற்­றப்­பட்டு மலை­யக பெருந்­தோட்ட தொழி­லா­ளர்கள் வாழும் இடங்கள் "கிராமம்" என அழைக்­கப்­பட வேண்டும். அதற்­காக அர­சாங்கம் விசேட வர்த்­த­மானி அறி­விப்பு வெளியிட வேண்டும். இதற்கு இந்­தியா ஆத­ரவை வழங்க வேண்டும் என்ற விட­யத்­தையும் முன்­வைத்தோம்.

தற்­போது தேயிலை தொழில்­துறை, இறப்பர் தொழில்­துறை என்பன அழிந்து கொண்­டி­ருக்­கின்­றன. ஆனால் மலை­யக மக்கள் தமது குடி­யி­ருப்­புக்­களை விட தயா­ராக இல்லை. இந்­திய அரசின் உத­வியும் எமது காலத்தில் உறு­தி­ய­ளிக்­கப்­பட்ட 4000 வீட்டுத் திட்டம் தொடர்­பிலும் இப் பேச்­சுக்­களின் போது கலந்­து­ரையாடப்­பட்­டது.

அத்­தோடு இந்­தி­யாவின் புல­மைப்­ப­ரி­சில்கள் திட்­டத்தில் அதி­க­ளவு இந்­திய வம்­சா­வளி மக்­களின் பிள்­ளை­க­ளுக்கே அவை வழங்­கப்­பட வேண்டும் என்ற விட­யத்­தையும் எடுத்­து­ரைத்தோம். இந்­திய வம்­சா­வளி மக்கள் தனித்­து­வ­மான இன­மாக ஏற்றுக் கொள்­ளப்­பட வேண்­டி­ய­தோடு, கல்வி, சுகா­தாரம், அடிப்­படை வச­திகள் உட்­பட முக்­கிய விட­யங்­களில் எமது மக்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­பட வேண்டும்.

இவ்வாறான விடயங்களை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம் முன்­வைத்து இதற்கு இந்­தியா ஆதரவை வழங்க வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்தோம் என்ர்.

No comments: