Wednesday, February 10, 2016

திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தருக்கான விண்ணப்ப முடிவுத்திகதி 19 வரை

திவி­நெ­கும அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்­த­ருக்­கான விண்­ணப்ப முடிவு திகதி இம்­மாதம் 19 ஆம் திகதி வரை நீடிக்­கப்­பட்­டுள்­ளது. அதே­வேளை வய­தெல்­லையும் 30 இல் இருந்து 35 வரை உயர்த்­தப்­பட்­டுள்­ளது. எனவே விண்­ணப்­பிக்க தவ­றி­ய­வர்­களும் வய­தெல்லை பிரச்­சி­னைக்­கு­ரி­ய­வர்­களும் இவ்­வாய்ப்பை தவ­றாது பயன்­ப­டுத்­திக்­கொள்­ளு­மாறு ஐக்­கிய தேசிய முன்னணியின் பதுளை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும், தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் உப­த­லை­வ­ரு­மா­கிய அ. அர­விந்­த­குமார் தெரி­வித்­துள்ளார்.
அவர் மேலும் குறிப்­பிட்­டுள்­ள­தா­வது, சுமார் 7000 திவி­நெ­கும அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்தர் நிய­ம­னங்கள் வழங்­கப்­ப­ட­வி­ருக்கும் இவ்­வே­ளையில் மலை­ய­கத்தில் படித்த இளைஞர், யுவ­தி­களை அதி­க­ளவில் உள்­வாங்­கப்­பட வேண்­டு­மென்ற இலக்­கோடு தமிழ் முற்­போக்கு கூட்­டணி செயற்­பட்டு வரு­கின்­றது. எமது கூட்­ட­ணியின் தலை­வரும், அமைச்­ச­ரு­மா­கிய மனோ­க­ணேசன் இவ்­வி­டயம் தொடர்­பாக அமைச்­ச­ர­வை­யிலும் அதிக அழுத்­தத்தை பிர­யோ­கிக்­க­வுள்ளார். தற்­போது இந்­நாட்டில் சுமார் 19 இலட்சம் பேர் சமுர்த்தி நிவா­ர­ணத்தின் பய­னா­ளி­க­ளாக உள்­ளனர்.
ஆனால் துர­திஷ்­ட­வ­ச­மாக மிக­வ­றுமை கோட்­டிற்கு கீழுள்ள மலை­யக மக்­களோ இதில் மூவா­யி­ரத்­திற்கும் குறை­வா­ன­வர்­க­ளா­கவே பய­னா­ளி­க­ளா­க­வுள்­ளனர். எனவே திவி­நெ­கும அபி­வி­ருத்தி உத்­தி­யே­ா­கத்­தர்கள் எம்­ச­மூ­கத்­தி­லி­ருந்து அதி­க­ளவில் நிய­மனம் பெரும் பட்­சத்தில் சமுர்த்தி நிவா­ர­ணத்தை பெறு­ப­வர்­களின் எண்­ணிக்­கை­யையும் உணர்த்­து­வ­தற்கு இந்­நி­ய­மனம் ஏது­வாக அமையும். கீழ் கண்ட தக­மை­களை உடை­ய­வர்கள் தவ­றாது விண்­ணப்­பிக்க வேண்டும்.
க.பொ.த சாதா­ர­ண­தர பரீட்­சையில் தமிழ், கணிதம் அடங்­க­லாக நான்கு பாடங்­களில் திறமைச் சித்­தி­யுடன் ஒரே தட­வையில் ஆறு பாடங்­களில் சித்­தி­ய­டைந்­தி­ருத்தல் வேண்டும். க.பொ.த உயர்­தர பரீட்­சையில் 1 பாடத்­தி­லா­வது சித்­தி­ய­டைந்­தி­ருத்தல் வேண்டும். வய­தெல்லை:- விண்­ணப்­பங்கள் ஏற்­றுக்­கொள்­ளப்­படும் இறுதித் திக­திக்கு 18 வய­துக்கு குறை­யா­மலும் 30 வய­துக்கு மேற்­ப­டா­மலும் இருத்தல் வேண்டும். பரீட்சைக் கட்­டணம் :- ரூபா 500/– (திவி­நெ­கும சமுர்த்தி வங்­கியில் செலுத்­தலாம்)
மேற்­படி பத­விக்கு விண்­ணப்­பிக்கும் விண்­ணப்­ப­தா­ரர்கள் பூர­ணப்­ப­டுத்­தப்­பட்ட விண்­ணப்­ப­ப்ப­டி­வங்­களை பதி­வாளர் ஸ்ரீ ஜெய­வர்­தன விஷ்வ வித்­தி­யா­ல­யம், கங்­கொ­ட­வி­ல, நுகே­கொட என்ற விலா­சத்­திற்கு அனுப்­புதல் வேண்டும்.
விண்­ணப்பம் அனுப்­பப்­படும் கடி­த­வு­றையின் இட­து­பக்க மேல் மூலையில் திவி­நெ­கும அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்தர் சேவைக்கு ஆட்சேர்ப்­ப­தற்­கான திறந்த போட்டிப் பரீட்சை 2016 என தெளிவாக குறிப்­பிட்டு 19.02.2016ஆம் திக­தி­யன்றோ அல்­லது அதற்கு முன்­ப­தா­கவோ கிடைக்­கக்­கூ­டி­ய­வாறு பதி­வுத்­த­பாலில் அனுப்பி வைக்­கப்­படல் வேண்டும்.
விண்­ணப்­பப்­ப­டி­வங்­களை மலை­யக மக்கள் முன்­னணி மற்றும் மலை­யக தொழி­லாளர் முன்­ன­ணியின் அட்டன் தலைமைக் காரி­யா­லயம் உள்­ளிட்ட அனைத்து பிராந்­திய மாவட்ட காரி­யா­ல­யங்­க­ளிலும் மலை­யக மக்கள் முன்­ன­ணியின் அனைத்து உள்­ளூராட்சி சபை­களின் முன்னாள் உறுப்­பி­னர்­கள், அமைப்­பா­ளர்கள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் ஆகியோர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை இது தொடர்பான மேலதிக தகவல்கள் எமது அனைத்து காரியாலயங்கள் மற்றும் பிரதேச அமைப்பாளர்களிடமிருந்தும், 051-4920300, 051-4020302, 051-2222793, 052-2223052, 055-2229838, 055-4928206, 055-2231526 ஆகிய தொலைபேசி இலக்கங்களோடு தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளவும் முடியும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: