Sunday, July 24, 2016

ஓர­ணியில் திரள்­வதன் மூலம் உரி­மை­களை வென்­றெ­டுக்க முடியும்

மலை­யக பெருந்­தோட்­டங்­களின் வளர்ச்­சிக்கும் உயர்ச்­சிக்கும் மலர்ச்­சிக்கும் பெருந்­தோட்ட சேவை­யா­ளார்கள் பெரும் பங்­க­ளிப்புச் செய்­கின்­றனர். இவர்­க­ளது உரி­மைகள் வென்­றெ­டுக்­கப்பட வேண்டும் என்­ப­திலும் சலு­கைகள் பாது­காக்­கப்­பட வேண்டும் என்­ப­திலும் நாம் உறு­தி­யாக இருக்­கின்றோம். அதற்கு பெருந்­தோட்ட சேவை­யாளர் ஓர­ணியில் திரள்­வது அவ­சியம் என பெருந்­தோட்ட சேவை­யாளர் காங்­கி­ரஸின் பொதுச் செய­லா­ளரும் சட்­ட­த­ர­ணி­யு­மான கா.மாரி­முத்து மஸ்­கெ­லியா கிளண்டில் தோட்­டத்தில் நடை­பெற்ற தோட்ட சேவை­யா­ளர்­களின் கூட்­டத்தில் கலந்­து­கொண்டு பேசு­கை­யி­லேயே தெரிவித்­துள்ளார்.

அவர் மேலும் கூறு­கையில் பெருந்­தோட்­டங்­களின் வளர்ச்­சிக்கு, தோட்ட சேவை­யா­ளர்கள் மாத்­தி­ர­மின்றி தோட்டத் தொழி­லா­ளர்­களும் ஒன்­றி­ணைந்து செயற்­ப­டு­கின்ற போது தான் தோட்­டங்கள் செழிப்­பாக இருப்­ப­தற்கும் உரி­மைகள் பாது­காக்­கப்­ப­டு­வ­தற்கும் ஜீவா­தா­ரங்­க­ளிலும் வாழ்­வா­தா­ரங்­க­ளிலும் மலர்ச்­சியை காண்­ப­தற்கும் நல்ல அறி­கு­றி­அ­மையும் என்­பதை நாம் குறிப்­பிட்­டாக வேண்டும். பெருந்­தோட்ட சேவை­யா­ளர்கள் அரை­நூற்­றாண்டு வர­லாற்றை கடந்­து­விட்ட போதிலும் அவர்­க­ளது அடிப்­படை தேவைகள் அவ­சி­யப்­பா­டுகள் இன்னும் பூர்த்தி செய்­யப்­ப­ட­வில்லை என்­பது கவ­லைக்­கு­ரிய விடயம். எனினும் அவர்­க­ளு­டைய சேம­ந­லன்­களை கவ­னிக்க வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். தோட்­டங்­களில் உற்­பத்தி அதி­க­ரிக்க வேண்­டு­மானால் இரு­சா­ராரும் அதா­வது தொழி­லா­ளர்­களும் சேவை­யா­ளர்­களும் புரிந்­து­ணர்­வோடு ஒத்­து­ழைப்பை வழங்க வேண்டும். அப்­போ­துதான் உற்­பத்தி பெருக்கம் உயர்­வ­டையும். தோட்­டத்தில் வாழும் சக­லரும் சந்­தோ­ஷ­மா­கவும் சமா­தா­ன­மா­கவும் சுபிட்­சத்­துடன் வாழ­மு­டியும். ஆகவே இதனைக் கருத்தில் கொண்டு பெருந்தோட்ட சேவையாளர்கள் ஓரணியின் கீழ் ஒன்றிணைந்து கைகோர்த்து செயற்படுவோர்களானால் எதிர்காலத்தில் ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும் என சட்டத்தரணி கா.மாரிமுத்து தெரிவித்துள்ளார்.

No comments: