Sunday, July 24, 2016

தொழிலாளர்களுக்கு ரூ.2500 வழங்காவிடின் சட்ட நடவடிக்கை

தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு 2500 ரூபா சம்­பள உயர்வை வழங்­கா­விட்டால் கம்­ப­னி­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­மென எச்­ச­ரித்த தொழில் மற்றும் தொழிற்­சங்க உற­வுகள் அமைச்சர் ஜோன் சென­வி­ரத்ன நிலுவை கொடுப்­ப­னவை வழங்­கு­வ­தற்கு சட்டம் அமு­லுக்கு வந்த காலம் முதல் ஒரு­வ­ருட கால அவ­காசம் வழங்­கப்­பட்­டுள்­ள­தையும் பாரா­ளு­மன்­றத்தில்  சுட்டிக் காட்­டினார்.

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்சி எம்.பி.யான வாசு­தேவ நாண­யக்­கார,எழுப்­பிய கேள்­விக்குப் பதி­ல­ளிக்­கை­யில் தோட்­டத்­தொ­ழி­லா­ளர்­க­ளுக்கு 2500 ரூபா சம்­பள அதி­க­ரிப்பு வழங்­கப்­ப­ட­வேண்டும் என சட்­ட­ரீ­தி­யாக கூறப்­பட்­டுள்ள போதும் சில தோட்­டக்­கம்­ப­னிகள் தற்­போது விரைவில் சம்­பள உயர்வை வழங்கவில்லை. அதற்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுப்­பீர்­களா? எனக் கேள்­வி­யெ­ழுப்­பினார். இதற்கு பதி­ல­ளித்த அமைச்சர், பொரு­ளா­தார ரீதி­யாக தமக்கு சில இய­லா­மைகள் இருப்­பதை தோட்­டக்­கம்­ப­னிகள் எம்­மி­டத்தில் முன்­வைத்­துள்­ளன. விசே­ட­மாக தேயிலை, இறப்பர் துறையில் காணப்­பட்ட வீழ்ச்­சியை அவை கார­ண­மாகக் கூறு­கின்­றன. அந்த விட­யத்­தையும் நாம் கருத்தில் கொள்ள வேண்­டி­யுள்­ளது. அதற்­கி­ணங்க இலங்கை மற்றும் மக்கள் வங்­கி­யூ­டாக தோட்ட நிறு­வ­னங்­க­ளுக்கு ஆயிரம் மில்­லியன் ரூபா கடன் வழங்­கு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. தேவை­யான பணத்தை வங்­கி­க­ளூ­டாக பெற்­றுக்­கொள்­வ­தற்கு தோட்டக் கம்­ப­னிகள் நட­வ­டிக்கை எடுத்­துள்­ளன.
அத­னூ­டாக முத­லிரு மாதங்கள் நிலு­வையில் உள்ள கொடுப்­ப­ன­வுகள் வழங்­கப்­ப­ட­வுள்­ளன. தேயிலைத் துறையைப் பொறுத்­த­வ­ரையில் பாரிய வீழ்ச்­சியை எதிர்­நோக்­கி­யுள்­ளது. எனவே அந்­தத்­துறை குறித்து கூடிய அவ­தானம் செலுத்த வேண்­டி­யுள்­ளது. அதே­போன்று தான் இறப்பர் துறை­யிலும் வீழ்ச்சி காணப்­ப­டு­கின்­றது. எஹலி­ய­கொட பிர­தே­சத்தில் சில தோட்­டங்­களில் பால் வெட்­டப்­ப­டாத இறப்பர் தோட்­டங்கள் காணப்­ப­டு­கின்­றன. இதற்­காக 2500 ரூபா சம்­பள உயர்வை வழங்­கு­வ­தி­லி­ருந்து கம்­ப­னிகள் விலகி நிற்­க­மு­டி­யாது. தற்­போது கம்­ப­னி­க­ளுக்கு நிவா­ர­ணங்கள் வழங்­கப்­பட்­டுள்­ள­மையால் அவர்கள் மீள்­வ­தற்கு உரிய வழி­வ­கைகள், சந்­தர்ப்பம் ஏற்­பட்­டுள்­ளது. 2500 ரூபா சம்­பள உயர்வு வழங்­கப்­ப­ட­வேண்டும் என்ற சட்டம் அமுல்­ப­டுத்­தப்­பட்ட நாளி­லி­ருந்து அனைத்து கம்­ப­னி­க­ளுக்கும் நிலுவைக் கொடுப்­ப­னவை வழங்­கு­வ­தற்­காக ஒரு வரு­ட­கால அவ­காசம் வழங்­கப்­பட்­டுள்­ளது. அதா­வது 2016 மார்ச் 23 ஆம் திகதி முதல் 2017 ஆம் ஆண்டு மார்ச் 23 வரை­யி­லான ஒரு வரு­ட­காலப் பகு­தியே நிலுவைக் கொடுப்­ப­ன­வுகள் வழங்­கப்­பட்­டுள்ள கால அவ­கா­ச­மாகும்.
நாம் தோட்ட கம்­ப­னி­க­ளுடன் பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தி­யுள்ளோம். அதன் ஊடாக கூட்டு ஒப்­பந்­த­மொன்றை கைச்­சாத்­தி­டு­வ­தற்கு முயற்­சி­களை செய்து வரு­கின்றோம். ஒப்­பந்தம் கைச்­சாத்­திட்ட பின்னர் அதற்­கேற்ப சம்­பள அதி­க­ரிப்பை மேற்­கொள்­வ­தற்கு இணக்கம் காணப்­பட்­டுள்­ளது. எவ்­வா­றா­யினும் தற்­போ­தைய சம்­ப­ளத்தில் பிரச்­சி­னையை எழுப்ப முடி­யாது என்றார். இதன்­போது வாசு தேவ­நா­ண­யக்­கார எம்.பி. நிலுவைக் கொடுப்­ப­ன­வு­களை வழங்­காத நிறு­வ­னங்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுப்­பீர்­களா? அல்­லது தொழில் வழங்­கு­னர்­களின் அழுத்­தங்­க­ளுக்கு அடி பணிந்து விடு­வீர்­களா? என கேள்­வி­யெ­ழுப்­பினர்.
இதற்கு பதி­ல­ளித்த அமைச்சர், 2500 ரூபா அதி­க­ரிப்பில் கடந்­த­மாத சம்­பள நிலுவை வழங்­கப்­ப­ட­வில்லை என்­ப­தற்­காக இந்த மாதம் கூட நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு நிய­திகள் உள்­ளன. அதற்­க­மை­யவே நாம் செயற்­பட முடியும். நிறு­வ­னங்­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்தி பகு­தி­ய­டிப்­ப­டையில் அதனை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க முடியும். நாம் 2500 ரூபா சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள சட்டரீதியாக முயற்சிகளை எடுக்க முனைந்தபோது எமக்கு பலநெருக்கடிகள் ஏற்பட்டன. ஆனால் நாம் அதற்கு பின் நிற்கவில்லை. அதேபோல் தான் 2500 ரூபா கொடுப்பனவை பெற்றுக்கொடுக்கவும் நிறுவனக் கொடுப்பனவையும் வழங்குவதற்கு நாம் பின்னிற்கவில்லை. அதற்கு தவறுவார்களாயின் நிச்சயமாக கூட நடவடிக்கை முறையாக எடுக்க தயாராகவே உள்ளோம் என்றார்.

No comments: