Friday, February 19, 2016

அபிவிருத்தி பணிகளுக்காக தோட்ட நிர்வாகங்களை நம்பியிருக்க வேண்டியதில்லை

பிரித்தானிய கம்பனிகள் நிர்வகித்த காலம் முதல் இன்றைய கம்பனிகள் நிர்வகிக்கும் காலம் வரை மலையக பெருந்தோட்டங்களின் உள்ளக பாதைகளை அமைக்கும் பொறுப்பினை தோட்ட நிர்வாகங்களே மேற்கொண்டு வந்தன. ஆனால் தற்போது வீதி அபிவிருத்தி அதிகாரசபை தோட்டப்பகுதிகளில் வீதிகளை அமைக்கும் பணியை செய்கின்றன என்று பாராளுமன்ற உறுப்பினர் திலகராஸ் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து மேலும் கூறுகையில் 

முன்பு அபிவிருத்திக்கு பொறுப்பான அரச நிறுவனங்கள் தோட்டப்பகுதிகளில் பணியாற்றுவதில்லை.  புதிய அரசாங்கம் பொறுப்பேற்றதன் பின்பு நுவரெலியா மாவட்டத்தின் பல்வேறு வீதிகள் கார்பட் வீதிகளாக மாற்றியமைக்கும் பணிகளை வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் மேற்கொள்ளப்படவிருக்கிறது என்றார். அபிவிருத்தி பணிகளுக்கு தோட்ட நிர்வாகங்களை தங்கியிருக்கும் நிலை தற்போது இல்லை. 

பிரதேச சபைகள் சட்டத்திருத்தத்தை நாம் வேண்டி நின்றதும் அதேபோல்அரச நிதியினை பயன்படுத்தி தோட்டப்பகுதிகளுக்கு அரச சேவையை பெற்றுக்கொடுப்பதற்காக பிரதேச செயலகங்களை அதிகரிக்கும் யோசனையையும் முன்வைத்துள்ளோம் என்றார். மஸ்கெலிய பிரதேசமக்கள் தங்களது அரச தேவைகளுக்காக கினிகத்தேன வரை செல்வதற்கு பதிலாக அதனை நோர்வூட் நகர பகுதியில் பெற்றுக்கொள்ளக்கூடியதான வேலைகளை முன்னெடுத்து  வருகிறோம். 

No comments: