Friday, February 19, 2016

ஊவா மாகாண தமிழ்க் கல்விக்கு தனியான அலகு

ஊவா மாகா­ணத்தில் தமிழ் கல்­விக்­கென்று தனி­யா­ன­தொரு அலகு ஆரம்­பிக்­கப்­பட வேண்டும். அப்­போ­துதான் தமிழ்க் கல்­வித்­து­றையில் முன்­னேற்­ற­க­ர­மான மாற்­றங்­களை எதிர்­கொள்ள முடி­யு­மென்று, ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்­டமான் கூறினார்.

தொடர்ந்து அவர் பேசு­கையில், “ஊவா மாகாண தமிழ்க் கல்­வித்­து­றை­யினை அபி­வி­ருத்தி செய்யும் நோக்கில், கலந்­து­ரை­யா­ட­லொன்­றினை மேற்­கொண்டு, அத­ன­டிப்­ப­டையில் செயல்­பா­டு­களை முன்­னெ­டுக்க திட்­ட­மிட்டேன். கடந்த ஒரு மாத­கா­ல­மாக எடுத்த முயற்சி, தற்­போது பய­ன­ளித்­துள்­ளது. இக்­க­லந்­து­ரை­யா­டலில் கல்­வித்­து­றைசார் சக­லரும் பங்கு கொண்­டி­ருப்­பது கண்டு பெரு­ம­கிழ்ச்­சி­ய­டை­கின்றேன்.

மாகா­ணத்தின் தமிழ் மொழி மூல­மான பாட­சா­லை­க­ளுக்கு அனுப்­பப்­படும் கடி­தங்கள் மற்றும் சுற்­ற­றிக்­கைகள் அனைத்தும் தமிழ் மொழி­யி­லேயே அமைய வேண்­டு­மென்று, எம்மால் விடுக்­கப்­படும் கோரிக்­கை­க­ளுக்கு, தற்­கா­லிகத் தீர்­வு­களே கிடைக்­கின்­ற­தே­யன்றி, நிரந்­தரத் தீர்­வுகள் கிடைப்­ப­தில்லை. ஒரு சில கடி­தங்கள் தமிழ் மொழியில் அனுப்­பப்­பட்­டாலும், காலப் போக்கில் அது செயல்­ப­டு­வ­தில்லை.

மாகாண தமிழ்க் கல்­வியில் ஏற்­படும் பின்­ன­டைவே, ஊவா மாகாணம் நான்காம் இடத்­திற்கு தள்­ளப்­பட்­டி­ருக்­கின்­ற­தற்கு காரணம். தமிழ்க் கல்­வித்­து­றையும் வளர்ச்சி பெற்­றி­ருக்­கு­மே­யானால், நாட்டின் இரண்டாம் இடத்­திற்கு, ஊவா மாகாணம் வந்­தி­ருக்கும் என்றார்.

அடுத்து, ஊவா மாகாண சபை உறுப்­பி­னரும், ஊவா மாகாண தமிழ் கல்­வித்­து­றைக்கு பொறுப்­பா­ள­ரு­மான ஆ.கணே­ச­மூர்த்தி தம­து­ரையில், பல்­க­லைக்­க­ழகம் பிர­வே­சிக்கும் மாணவர் தொகையில் அதி­க­ரிப்பு இடம்­பெ­ற­வேண்­டி­யது அதி­முக்­கி­ய­மாகும். அந்­நி­லை­யினை ஏற்­ப­டுத்த அதிபர், ஆசி­ரி­யர்கள் மிகுந்த அர்ப்­ப­ணிப்­புக்­க­ளுடன் செயல்­படல் வேண்டும்.

தமிழ்­மொழி மூலம் கற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய தொழில்­நுட்பக் கல்­லூ­ரி­யொன்று அமைய வேண்­டி­யதும் அவசியமாகும். பாடசாலைகளில் இடைவிலகும் மாணவர்கள் விடயத்தில் கூடிய கவனம் எடுத்து, இடைவிலகலை தடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படல் வேண்டும். அத்துடன், முன்பள்ளிகளின் தரம் அதிகரிக்கப்படல் வேண்டும் என்றார்.

No comments: