Tuesday, January 5, 2016

தோட்ட உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை குறைப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

கொத்­மலை எல்­பொடை தோட்டத் தொழி­லா­ளர்கள் நேற்று திங்­கட்­கி­ழமை ஒரு மணி நேர பணிப் பகிஷ்­க­ரிப்பில் ஈடு­பட்­டனர். தோட்ட உத்­தி­யோ­கத்­தர்­களின் எண்­ணிக்­கையை குறைக்கும் நட­வ­டிக்­கையை கண்­டித்தே இப் பணிப் பகிஷ்­க­ரிப்பு இடம்­பெற்­றது. எல்­பொடை தோட்டம் நான்கு பிரி­வு­களைக் கொண்ட ஒரு தோட்­ட­மாகும். இத்­தோட்­டத்தின் பரப்பும் அதி­க­மா­னது. இங்கு ஒரு தோட்டப் பிரிவில் 5 தொடக்கம் 6 உத்­தி­யோ­கத்­தர்கள் ஏற்­க­னவே கட­மை­யாற்­றி­யுள்­ளனர். எனினும் அண்மைக் கால­மாக உத்­தி­யோ­கத்தர் குறைப்பு கணி­ச­மாக இடம்­பெற்­றது. இதன் கார­ண­மாக தோட்­டங்களை பரா­ம­ரிப்­பது முதல் நிர்­வாக ரீதி­யான செயற்­பா­டுகள் வரை அனைத்து மட்­டங்­க­ளிலும் திருப்­தியற்ற நிலைமை மேலெ­ழுந்­துள்­ளது.
 
மேலும் தேயிலைச் செடிகள் முறை­யாக பரா­ம­ரிக்­கப்­ப­டாமை கார­ண­மாக உற்­பத்தி வீழ்ச்சி நிலை ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் சில தேயிலை மலைகள் காடாக இருப்­ப­தா­கவும் இலங்கை தொழி­லாளர் காங்­கி­ரஸின் உப தலைவர் எம்.எஸ்.எஸ். செல்­ல­முத்து சுட்­டிக்­காட்­டு­கின்றார். அத்­தோடு கம்­ப­னி­யி­னரின் சில முறை­யற்ற போக்­குகள் எல்­பொடை தோட்­டத்தின் எதிர்­கா­லத்தை கேள்விக் குறி­யாக்கி இருப்­ப­தா­கவும் அவர் மேலும் தெரிவிக்­கின்றார்.
 
தோட்ட உத்­தி­யோ­கத்­தர்­களின் எண்­ணிக்கை குறைக்­கப்­ப­டு­வதன் கார­ண­மாக தாம் பல்­வேறு அசௌ­க­ரி­யங்­க­ளுக்கும் முகம்­கொ­டுத்து வரு­வ­தாக தொழி­லா­ளர்கள் கருத்து தெரி­விக்­கின்­றனர். இதனால் பாரிய பின்விளை­வுகள் ஏற்­படும் என்­பதும் அவர்­களின் கருத்­தாக உள்­ளது. இந்­நி­லையில் தோட்ட உத்­தி­யோ­கத்­தர்­களின் எண்­ணிக்கை குறைக்­கப்­ப­டு­வதை கண்­டித்து தொழி­லா­ளர்கள் காலை ஒரு மணி நேர பணிப் பகிஷ்­க­ரிப்பில் ஈடு­பட்­டனர். இந்­நி­லையில் இ.தொ.கா. வின் உப தலைவர் எம்.எஸ்.எஸ். செல்­ல­முத்து தோட்ட நிர்­வா­கத்­துடன் பேச்­சு­வார்த்­தையில் ஈடு­பட்டார். இப் பேச்­சு­வார்த்­தையின் போது விரைவில் கம்­ப­னி­யி­ன­ருடன் பேச்­சு­வார்த்தை நடத்தி தோட்ட உத்­தி­யோ­கத்­தர்­களின் வெற்­றி­டத்தை நிரப்­பு­வ­தாக தோட்ட நிர்­வாகம் செல்­ல­முத்­து­விடம் உறு­தி­ய­ளித்­தது. இதனை தொடர்ந்து பணிப் பகிஷ்­க­ரிப்பு கைவி­டப்­பட்­டது. தோட்ட நிர்வாகம் தோட்ட உத்தியோகத்தர்களின் வெற்றிடத்தை விரைவில் உறுதியளித்தவாறு நிரப்பவில்லையாயின் எதிர்காலத்தில் தாம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தொழிலாளர் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

No comments: