Monday, November 2, 2015

வார்வீக் தோட்டத்தில் மண்சரிவு அபாயம் - மேலும் 30 குடும்பங்களை வெளியேற உத்தரவு

பதுளை மாவட்டம் வார்வீக் பெருந் தோட்டத்தில் தொடர்ந்தும் மண்சரிவு மற்றும் நிலம் தாழிறக்கம் ஏற்படும் அபாயம் எதிர்நோக்கப்பட்டுக் கொண்டிருப்பதால் 30 தொழிலாளர் குடும்பங்களை உடன் வெளியேறுமாறு பதுளை மாவட்ட இடர் முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் ஏ.எல்.எம். உதயகுமாரவும், வெளிமடை பிரதேச செயலாளரும் இணைந்து மேற்படி உத்தரவினைப் பிறப்பித்துள்ளனர்.
 
உடன் தோட்டத்தை விட்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி வெளியேறுமாறு உத்தரவிட்டால் எம்மால் எங்கு போக முடியும். பாதுகாப்பான இடங்களில் அரச அதிரகாரிகளே எங்களை குடியமர்த்த வேண்டும். அவர்கள் மறுப்பார்க்கள யானால் இத்தோட்டத்திலேயே செத்துமடிவோம். வேறு எங்கும் எங்களால் போக முடியாதென்று” அபாயத்தை எதிர்நோக்கியுள்ள மக்கள் இவ்வாறு தெரிவிக்கின்றனர்.
 
வார்வீக் தமிழ் வித்தியாலயத்திலும் 19 குடும்பங்களைக் கொண்ட 98 பேர் தஞ்சம் அடைந்துள்ளவர்களுக்கு போதிய இடவசதிகள் இல்லாத நிலையே காணப்படுகின்றது. தொடர்ந்தும் மண்சரிவு மற்றும் நிலம் தாழிறங்கல் ஏற்படும் அபாயம் எதிர்நோக்கப்படுவதால் மேலும் 80 குடும்பங்களைக் கொண்ட முன்னூற்று நாற்பது பேரை உடன் வெளியேற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
 
இம்மக்களை மாற்று இடங்களில் உடனடியாக குடியமர்த்தும் வகையிலான செயல்பாடுகளை முன்னெடுப்பதற்கான விசேட பேச்சுவார்த்தைகள் இன்று 02.11.2015 இல் பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: