Thursday, October 15, 2015

தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும்

தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­பள உயர்வு தொடர்­பான கூட்டு ஒப்­பந்தம் காலா­வ­தி­யாகி ஆறு மாதங்கள் ஆகியும் புதிய ஒப்­பந்தம் செய்து கொள்­ளப்­ப­ட­வில்லை. அதனால், தொழி­லாளர்­க­ளுக்கு சம்­பள உயர்வும் கிடைக்­க­வில்லை.

மேலும் தீபா­வளிப் பண்­டிகை காலத்தில் அத்­தி­யா­வ­சியப் பொருட்­களின் விலையும் நாளுக்கு நாள் அதி­க­ரித்துச் செல்கின்­றது. எனவே, தொழி­லா­ளர்­களின் சம்­பள உயர்வைப் பெற்றுக் கொடுக்க அர­சாங்கம் உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என மலை­யக மக்கள் முன்­னணி உப தலைவர் செல்­லையா சிவ­சுந்­தரம் வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.
அவர் மேலும் தமது அறிக்­கையில், தீபா­வளிப் பண்­டிகை நெருங்கி வரும் வேளையில் பருப்பு, சீனி முத­லான அத்­தி­யா­வ­சியப் பொருட்­களின் விலை நாளுக்கு நாள் அதி­க­ரித்த வண்ணம் இருக்­கின்­றது. இதனால் குறைந்த வரு­மானம் பெறு­கின்ற தோட்டத் தொழி­லா­ளர்கள் பெரும் பொரு­ளா­தாரச் சுமைக்கு முகங் கொடுக்க வேண்­டிய நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ளனர்.
 
கடந்த வரவு செலவுத் திட்­டத்தில் அர­சாங்க ஊழி­யர்­க­ளுக்கும், தனியார் துறை ஊழி­யர்­க­ளுக்கும் அறி­விக்­கப்­பட்ட சம்­பள உயர்வு வழங்­கப்­பட்­டுள்­ளது. எனினும், இந்த சம்­பள அதி­க­ரிப்பு தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்குக் கிடைக்­க­வில்லை. மேலும், அவர்­க­ளுக்கு கடந்த ஏப்­ரல் மாதத்­தி­லி­ருந்து கிடைக்க வேண்­டிய சம்­பள உயர்வும் கிடைக்­க­வில்லை.
 
அதற்­காக தொழிற்­சங்­கங்­க­ளுக்கும் கம்­ப­னி­க­ளுக்கும் இடையில் இடம்­பெற்ற பேச்­சு­வார்த்­தைகள் அனைத்தும் தோல்­வியிலேயே முடிவடைந்­துள்­ளன. இந்­நி­லையில் அடுத்த மாதம் 10 ஆம் திகதி தீபா­வளிப் பண்­டி­கையைக் கொண்­டாடும் தோட்டத் தொழி­லா­ளர்கள் புத்­தாடை கொள்­வ­னவு செய்­யவும், பண்­டி­கைக்குத் தேவை­யான பல­கா­ரங்­களைத் தயா­ரிக்­கவும் பெரும் சிர­மத்தை எதிர்­நோக்கி வரு­கின்­றார்கள். பண்­டிகை காலத்­துக்குத் தேவை­யான அத்­தி­யா­வ­சியப் பொருட்கள் அனைத்­தி­னதும் விலை­வாசி திடீ­ரென அதி­க­ரித்­துள்­ளது. இதனால் ஏற்­க­னவே, பொரு­ளா­தாரச் சுமையில் சிக்கித் தவிக்கும் தொழி­லா­ளர்கள் மேலும் சுமைக்கு ஆளாகி இருக்­கின்­றார்கள். கம்­ப­னி­க­ளுக்கும், தொழிற்­சங்­கங்­க­ளுக்கும் இடையில் இடம்­பெறும் பேச்­சு­வார்த்­தைகள் தொடர்ந்து இழு­பறி நிலையில் காணப்­ப­டு­கின்­றது. எனவே, கடந்த ஜனா­தி­பதித் தேர்­த­லிலும், பாரா­ளு­மன்றத் தேர்­த­லிலும் இன்­றைய அர­சாங்கம் ஆட்­சி­ய­மைக்க பெரு­ம­ளவில் நம்­பிக்­கை­யுடன் வாக்­க­ளித்த
 
மக்­க­ளுக்கு நிவா­ரணம் கிடைக்கும் வகையில் அர­சாங்கம் தலை­யிட்டு நியா­ய­மான சம்­பள உயர்வைப் பெற்றுக் கொடுக்க நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் எனவும் செல்­லையா
சிவ­சுந்­தரம் வேண்­டுகோள் விடுத்துள்ளார்.

No comments: