Tuesday, October 14, 2014

ஹட்டன் விபத்தில் தந்தையும் மகனும் காயம்

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செனன், குயில்வத்தை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் தந்தையும் மகனும் காயமடைந்து வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து இன்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும் அதில் களுத்துறை ஹொரனை பகுதியை சேர்ந்தவர்களே காயமடைந்துள்ளனர் என்று ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டனிலிருந்து கினிகத்ஹேனை நோக்கி பயணித்த டிப்பர் ரக வாகனம் ஒன்றுடன் கினிகத்ஹேனையிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த தகப்பனும், மகனுமே படுகாயமடைந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாத காரணத்தினால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

No comments: