Sunday, August 17, 2014

ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் தடை

பொகவந்தலாவை நகரில் இன்று நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டமொன்றுக்கு ஹட்டன் நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

பொகவந்தலாவை தெரேசியா தோட்டத்தில் மீண்டும் மாணிக்கக்கல் அகழ்விற்கான அனுமதிப் பத்திரங்களை வழங்கும் ஏலத்திற்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படவிருந்தது தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபையினரால் நடத்தப்படவுள்ள ஏலத்திற்கு ஒருசில தொழிற்சங்கங்கள் தமது ஆதரவை வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில் பொகவந்தலாவை நகரில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் பட்சத்தில் பிரதேசத்தில் அநாவசிய குழப்ப நிலை ஏற்படலாம் என பொகவந்தலாவை பொலிஸார் ஹட்டன் நீதவானின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.

இது குறித்து கவனம் செலுத்திய ஹட்டன் நீதவான் பொகவந்தலாவையில் இன்று நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

No comments: