Saturday, May 10, 2014

ஹட்டனில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பெருந்தோட்ட தொழிலாளிகளின் சேமநல நிதி மற்றும் நம்பிக்கை நிதி ஆகியவற்றில் தரகர்களால் ஏற்படுத்தப்படும் மோசடியை கட்டுப்படுத்துமாறு வலியுறுத்தி ஹட்டன் நகரை அண்மித்த தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த தோட்டத் தலைவர்கள், தொழிலாளர்கள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடத்தியுள்ளனர்.
 
தொழிலாளர் நலன் திட்டத்தின் அமைப்பு குழுவினர் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைப்பின் தலைவர் பெரியசாமி பிரதீபன் தெரிவிக்கையில் 
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சேமநல நிதி மற்றும் நம்பிக்கை நிதி என்பன அவர்களின் உழைப்பிலிருந்து சேமிக்கப்பட்டவை. தொழிலாளர்களுக்கு மிஞ்சியதும் அது மாத்திரமே. எஞ்சிய அவர்களின் பரம்பரை சொத்தை போலி தரகர்கள் தோட்டங்களுக்குள் பிரவேசித்து, அந்த நிதிகளை  இலகுவாகப் பெற்றுத்தருவதாகக் கூறி ஏமாற்றிய சூரையாடிச் செல்கின்றார்கள்.
 
இவற்றை கட்டுப்படுத்தி சூரையாடுபவர்களை உடனடியாக கைது செய்ய உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சேமநல நிதி மற்றும் நம்பிக்கை நிதி இலகுவாக பெற்றுகொள்ள வேண்டிய ஒரு விடயமாகும். இதற்கான அரச திணைக்களத்தின் கீழ் நியமிக்கப்பட்ட ஒவ்வொரு பிராந்தியத்திலும் அரச திணைக்களங்கள் இயங்குகின்றன.

அரச முகவர்கள் இயங்குகின்றார்கள். எனினும் இவ்வாறு போலி தரகர்களிடம் சென்று சேமநல நிதி மற்றும் நம்பிக்கை நிதிக்காக உங்கள் பணத்தை வீண்விரயப்படுத்தி உங்கள் சொத்தை இழந்து விட வேண்டாம்.

சட்டவிரோத முகவர்கள் உங்கள் தோட்டப்பகுதியில் இருப்பார்கள். ஆனால் அவர்கள் தொடர்பிலான தகவல்களை அண்மையில் உள்ள பொலிஸ் நிலையத்திலோ அல்லது தொழிலாளர் நலன் திட்டத்திலோ தெர்pவிக்குமாறு 'ஹட்டன் தொழிலாளர் நலன் திட்டத்தின்” தலைவர் பெரியசாமி பிரதீபன் தெரிவித்தார்.

No comments: