Thursday, February 24, 2011

யுவதியின் மரணம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் மூவர் கைது


பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெய்த்திலி தோட்டத்தில் கடந்த திங்கட்கிழமை சடலமாக மீட்கப்பட்ட யுவுதியின் மரணம் தொடர்பாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையைத் தொடர்ந்து மூன்று சந்தேக நபர்கள் கைது செய்து விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் மரணமான யுவதியின் தந்தையும் அண்ணனும் மாமானாரும் என தெரிய வருகின்றது. சாந்த கருணாசேன ஷாமிலாகுமாரி (வயது 20) என்ற இந்த யுவதியின் தாயார் வெளிநாட்டில் பணிபுரிவதாகவும் மரணமான யுவதி குறித்து பத்தனை பொலிஸில் ஏற்கனவே பல முறைப்பாடுகள் பதியப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இந்த நிலையில் கொலை செய்யப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்ற இந்த யுவதியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது

No comments: