Sunday, September 6, 2009

தோட்டத் தொழிலாளரின் ஒத்துழையாமைப் போராட்டம்

500 ரூபா சம்பள உயர்வுக் கோரிக்கையை முன்வைத்து மலையகப் பெருந்தோட்டங்களில் தொழிலாளர்கள் மேற்கொண்டு வரும் ஒத்துழையாமைப் போராட்டம் முடிவின்றித் தொடருகிறது.
தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்துக்குமிடையே இதுவரை நடத்தப்பட்ட பேச்சு வார்த்தைகளில் இணக்கப்பாடு எதுவும் ஏற்படாத நிலையில் இந்நிலையில் கடந்த 2ம் திகதியிலிருந்து ஒத்துழையாமைப் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஒத்துழையாமைப் போராட்டம் காரணமாக மலையகப் பெருந்தோட்டங்களில் உற்பத்தி பாதிக்கப்பட்டிருப்பதாக தொழிற்சங்கங்கள் கூறுகின்றன. அதேசமயம் சாதகமான முடிவொன்று எட்டப்படும் வரை தொழிலாளர்களின் ஒத்துழையாமைப் போராட்டம் தொடருமென தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டுமென்பது தொழிற்சங்கங்களின் நிலைப்பாடாகும். இக் கோரிக்கையை அரசாங்கமும் ஆதரித்து வரு வது தெரிகிறது.
தோட்டத் தொழிலாளர்கள் கடந்த காலத் தில் ஒவ்வொரு சம்பள உயர்வையும் போராட்டம் நடத்தியே பெற்று வந்துள்ளனர். அவ் வேளைகளிலெல்லாம் தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கைக்குச் சாதகமாக அரசாங்கம் செயற்பட்டு வந்தமை நினைவிருக்கலாம்.
தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்துக்குமிடையே கடந்த காலத்தில் நடைபெற்ற சம்பள உயர்வுப் பேச்சுவார்த்தைகளின் போதெல்லாம் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசாங்கம் பொருட்படுத்தியே வந்துள்ளது.
தற்போது இடம்பெற்று வருகின்ற ஒத்துழையாமைப் போராட்டமானது தோட்டத் தொழிலாளர்களின் ஜீவனோபாயப் பிரச்சினையுடன் சம்பந்தப்பட்டதென்பதை இவ் விடயத்துடன் தொடர்புடைய சகல தரப்பினரும் புரிந்துகொள்வது இங்கு அவசியமாகிறது. தோட்டத் தொழிலாளர்கள் கோருகின்ற ஐநூறு ரூபா சம்பள உயர்வானது இன்றைய காலகட்டத்தில் நியாயமானதென தொழிற் சங்கங்கள் அனைத்துமே கருத்துத் தெரிவிக்கி ன்றன.
சர்வதேச ரீதியில் தற்போது பொருளாதார வீழ்ச்சி காணப்படுகிறது. இந்நிலைமைக்கு இல ங்கை விதிவிலக்கானதல்ல. மக்களின் மாதாந்த வருமானம் அதிகரித்துச் செல்கின்ற போதிலும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உலக சந்தையில் அதிகரித்துச் செல்வதனால் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பும் தவிர்க்க முடியாததாகிறது.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பானது தோட்டத் தொழிலாளர்களைக் கூடுதலாகப் பாதித்துள்ளது. அவர்கள் குறித்ததொரு மட்டத்துக்குக் கீழேயே மாதாந்த வருமானம் பெற்று வருகின்றனர். அதேசமயம் அவர்களது மாதாந்த வருமானம் ஏனைய துறை தொழிலாளர்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவானது.
இதனாலேயே தோட்டத் தொழிலாளர்களில் பெருமளவானோர் வறிய நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இத்தகைய நிலையில் அவர்கள் ஐநூறு ரூபா சம்பள உயர்வு கோருவதை நியாயமில்லையெனக் கூறுவதற்கில்லை.
பண்டைய காலம் தொட்டு உலகில் சிறந்ததொரு விவசாய நாடாக இலங்கை திகழ்ந்து வருகிறது. திறந்த பொருளாதாரக் கொள்கையின் விளைவாக உலகில் கைத் தொழில்துறை வளர்ச்சியடையத் தொடங்கியதும் விவசாயத்துறை பாரிய பின்னடைவைச் சந்தித்தது. இதனாலேயே உலகம் உணவு நெருக்கடியைச் சந்திக்க வேண்டியேற்பட்டது.
இலங்கையும் கடந்த காலத்தில் விவசாயத்தில் பின்னடைவையே சந்தித்தது. இப்பாதிப்பை நீக்கி கமத்தொழில் துறையை மீண்டும் கட்டியெழுப்புவதில் இன்றைய அர சாங்கம் முனைப்புடன் செயற்பட்டு வருகிறது.
சிறிது காலமாக வீழ்ச்சியான நிலைமைக்குச் சென்றுள்ள தேயிலை உற்பத்தித்துறையையும் மீளக் கட்டியெழுப்புவதில் அரசாங்கம் விரிவான திட்டங்களை செயற்படுத்தி வருகிறது. பெருந்தோட்ட அபிவிருத்திக்கு நிகராக சிறு தேயிலைத் தோட்டங்களை அபிவிருத்தி செய்வதிலும் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.
தேயிலைத் தொழில் துறைக்காக கடினமுடன் உழைப்பவர்கள் தோட்டத் தொழிலாளர்கள் அவர்களது பொருளாதார நிலைமை இயன்றளவு சீர்செய்யப்பட வேண்டும். அப்போதே வினைத்திறன் கூடிய சேவையை தோட்டத் தொழிலாளர்களிடமிருந்து எதிர்பார்க்க முடியும் தோட்டத் தொழிலாளர் சம்பள உயர்வு தொடர்பில் இன்று மீண்டும் பேச்சு சுமுகமான முடிவு ஏற்படும் என இ.தொ.கா. தலைவர் நம்பிக்கை
நன்றி- தினகரன்

No comments: