Thursday, September 10, 2009

தொழிற்சங்க நடவடிக்கை - 100 கோடி ரூபா இழப்பு

தொழிலாளர்களின் சம்பள உயர்வு கோரி தோட்டத் தொழிலாளர்களின் ஒத்துழையாமை போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு 100 கோடி ரூபாவுக்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிப் பணிப்பாளர் கனிஷ்க வீரசிங்க தெரிவித்துள்ளார். மலையகப் பகுதிகளில் மாத்திரமல்லாது ஏனைய பிரதேசங்களிலும் தேயிலை உற்பத்தி குறைவடைந்துள்ளது.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் நோக்கில் தொழிற்சங்கங்களுடன் 10-10-2009 பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாகவும் வீரசிங்க தெரிவித்தார். அதேவேளை தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக அடுத்த ஏல விற்பனைக்கான தேயிலை குறைவடையும் என தெரிவித்த இலங்கை தேயிலைச் சபையின் தலைவர் லலித் ஹெட்டியாராச்சி வாராவாரம் நடைபெறும் ஏல விற்பனையில் ஒன்றரை மில்லின் கிலோ கிராம் தேயிலை விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

No comments: