Monday, August 10, 2009

அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு மலையக மக்கள் பூரண ஆணை- வடிவேல் சுரேஷ்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செயற்பாடுகளுக்கு மலையகம் வாழ் பெருந்தோட்ட மக்கள், ஊவா மாகாண சபைத் தேர்தலில் அங்கீகாரம் வழங்கியுள்ளார்கள் என்று சுகாதார பிரதியமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
ஜனாதிபதி பதவிக்கு வந்த குறுகிய காலத்தில் மலையகத்தில் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அவற்றையெல்லாம் அங்கீகரித்து மலையகத் தோட்டப்புற மக்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வாக்களித்துள்ளார்கள் என்றார்.
தோட்டப்புற வைத்தியசாலைகள் புனரமைப்பு, தாதியர் நியமனம் உள்ளிட்ட பணிகளை மேம்படுத்த 225 மில்லியன் ரூபா நிதியினைப் பெற்றுக் கொடுத்து மலையகத்தில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க ஜனாதிபதி உதவி புரிந்தார். எனவே, இந்தத் தேர்தலில் ஊவா மாகாண தோட்டப் பகுதி மக்கள் ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்த ஒன்றிணைந்துள்ளார்கள் எனக் குறிப்பிட்டார்

No comments: