Thursday, August 6, 2009

தொழிலாளர்களை வெளியேற உத்தரவு

மாத்தளை வேவல்மட, காலேகொலுவ, மவுசாகல ஆகிய தோட்டப் பிரிவுகளில் வசித்து வரும் தொழிலாளர்களை இம் மாதம் 11ம் திகதிக்கு முன்னர் அவர்களின் குடியிருப்புக்களில் இருந்து வெளியேறுமாறு தோட்ட உரிமையாளர்களால் கேட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் வேவல்மட தோட்டத்துக்கு மட்டும் நோட்டீஸ் மூலமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேற்படி மூன்று தோட்டங்களும் 1985ம் ஆண்டு தனியாருக்கு விற்கப்பட்டது. இதில் வேவல்மட தோட்டத்தில் இருந்த தேயிலை தொழிற்சாலையும் கடந்த வருடம் உடைக்கப்பட்டு விட்டது. மவுசாகல தோட்டத்தில் இருந்த தொழிற்சலை கடந்த 20 வருடங்களுக்கு முன்பே உடைக்கப்பட்டு விட்டது. இம் மூன்று தோட்டங்களையும் சேர்ந்த தொழிலாளர் குடும்பங்கள் பலவந்தமாக தனியார் காணிகளில் குடியேறியுள்ளதாகவும் தற்போது அவர்கள் அங்கிருந்து வெளியேறுமாறும் தோட்ட நிர்வாகத்தால் கேட்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக இத் தோட்டக் காணியில் குடியிருப்புக்களை அமைத்து வாழ்ந்து வருகின்றனர். தனியாருக்கு விற்கப்பட்டதால் இத் தோட்டத் தொழிலாளர்கள் பற்றி எந்தவொரு அரசியல் கட்சியோ, தொழிற்சங்கமோ அக்கறை கொள்ளவில்லை. ஆரம்பத்தில் இத் தோட்டப்பிரிவு தொழிலாளர்கள் ஐ.தே.க, மற்றும் இ.தொ.கா ஆகிய கட்சிகளின் அங்கத்தினராக இருந்துள்ளனர். இத் தொழிலாளர்களின் நிலை குறித்து எவரும் அக்கறை கொள்ளாத நிலையில் இவர்களின் எதிர்காலம் குறித்து அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: