Friday, July 24, 2009

தொழிலாளரின் சம்பள உயர்வை முடக்கும் சில தொழிற்சங்கங்கள்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை சாதகமாக்கிக் கொண்ட சில தொழிற்சங்கங்கள் கூட்டு ஒப்பந்தம் என்ற பெயரில் அவற்றை முடக்கி வைத்துள்ளதாக பிரதி சுகாதார அமைச்சர் வடிவேல் சுரேஷ் பண்டாரவளை குருக்குடி டிவிசனில் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் உரையாற்றுகையில் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் உலக நாடுகளில் வாழும் நமது இந்திய வம்சாவளியினர் குறிப்பாக மலேசியா, பிஜித்தீவு, மொரிசியஸ் மற்றும் தென்னாபிரிக்க நாடுகளில் வாழுபவர்கள் காலத்தின் தேவைக்கேற்ப தம்மை மாற்றி தமது தொழிற்துறை மற்றும் பொருளாதார பாதையிலும் புதிய வடிவங்களுடன் தன்னிறைவு அடைந்து வருகின்றனர்.அந்தவகையில் கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக பெருந்தோட்டத்துறையில் கடமை புரியும் தொழிலாளர்களுக்கு வேலைக்குச் சென்றால் தான் வேதனம் என்ற வேதனைக்குரிய சம்பிரதாயம் தொடருகின்றது. இதை மாற்றியமைக்க மலையகத்திற்கு மாற்றம் தேவையென்ற தொனிப் பொருளில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் காங்கிரஸ் எதிர்கால நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றது.

No comments: