Wednesday, July 22, 2009

மலையக இளைஞர்களை விடுவிக்க நடவடிக்கை - அமைச்சர் வடிவேல் சுரேஷ்

யுத்தம் முடிவடைந்துள்ள இவ்வேளையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்ட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான மலையக இளைஞர்,யுவதிகளை விடுவிக்கும் வகையிலான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக பெருந்தோட்ட வைத்தியசாலை திறப்பு விழாவில் கலந்துகொண்டு பேசும் போது பிரதி சுகாதார அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

தோட்ட மக்களையும் கிராமிய மக்களையும் இணைக்கும் வகையிலான வேலைத்திட்டம் அரசினால் பொறுப்பேற்கப்பட்டு நவீன மயப்படுத்தப்பட்ட தோட்ட வைத்தியசாலைகளின் திறப்பு விழா நிகழ்வுகளுடனே ஆரம்பமாகியுள்ளன. தோட்ட வைத்தியசாலைகளை அரசு பொறுப்பேற்றதன் நோக்கமே அரசின் இலவச சுகாதார சேவைகளை பெருந்தோட்டத்துறை மக்களும் பெறவேண்டுமென்பதற்கேயாகும்.
அரசின் அந்நோக்கம் தற்போது நிறைவேறி கொண்டிருக்கின்றது. தோட்ட வைத்தியசாலைகள் அரசினால் பொறுப்பேற்கப்பட்டு பெருந்தோட்ட மக்களுக்கு சிறந்த சேவைகள் கிடைக்கவேண்டுமென்ற எனது கோரிக்கையை ஜனாதிபதியிடம் முன்வைத்ததையடுத்தே திட்டத்தினை நடைமுறைப்படுத்தினார்.
இரண்டரை வருடங்களுக்குள் 50மலையக பெருந்தோட்ட வைத்தியசாலைகளை முதற்கட்டமாக அரசினால் பொறுப்பேற்று அவ்வைத்தியசாலைகள் புனரமைக்கப்பட்டு நவீன மயப்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றின் புனரமைப்பு பணிகளுக்கென பெருந்தொகை நிதியினையும் வழங்கப்பட்டுள்ளது..கோடிக்கணக்கான ரூபா செலவில் பதுளை மாவட்ட பெருந்தோட்ட வீதிகள் அமைத்தலும் ஏற்கனவே இருந்த வீதிகளை புனரமைத்தலுமான வேலைத்திட்டத்தினை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்ப் பாடசாலைகள் பலவற்றிற்கும் கணினித் தொகுதிகளையும் ஆலயங்களுக்கான உபகரணத் தொகுதிகளையும் வழங்கியுள்ளது என்றார்

No comments: