Friday, April 10, 2009

பெருந்தோட்ட சமூக அங்கவீனர்களின் நலன் செயற்பாடுகள்

பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களுக்கு உள்ள பல்வேறு சமூக பொருளாதார பிரச்சினைகளில் இச் சமூகத்தில் வாழும் அங்கவீனர்களின் நலனுக்கான செயற்பாடுகள் முற்றாக மறக்கப்பட்டுள்ளன என அமைச்சர் பெ. சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் மலையக மக்களின் பிரச்சினைகள், தேவைகள் என்பது வெறுமனே சம்பள உயர்வோடும், அவர்களின் உட்கட்டமைப்பு பிரச்சினைகளோடும்; சம்பந்தப்பட்ட பிரச்சனைகளாக மாத்திரமே அடையாளம் காணப்பட்டு வந்திருக்கின்றன.

இவை அனைத்தையும் விடவும் வெளிக்கொணரப்படாத ஆனால் முக்கியத்துவப்படுத்தக் கூடிய பிரச்சினையாக அங்கவீனர்களின் பிரச்சினை திகழ்கின்றது. அங்கவீனர்களுக்காக சமூக சேவைகள் திணைக்களங்களினால் வழங்கப்படும் நிவாரணங்களைப் பெற்றுக்கொள்ளும் வழிகளும் இவர்களுக்கு கிடைப்பதில்லை. அதற்கான முயற்சிகளும் எடுக்கப்படுவதில்லை.
இவ்வாறானவர்கள் நாம் வாழும் வரை தமது குடும்பத்திற்கு சுமையானவர்களாக இருந்துவிடக் கூடாது. இதற்காக நாம் விசேட திட்டங்களை அமுல்படுத்த வேண்டும்.


இவர்களை அவர்களுக்குரிய துறைகளில் வளர்த்தெடுப்பதோடு அவ்வாறனவர்களுக்கு மனோ திடத்தினை வளர்க்கும் நிகழ்ச்சிகளை உருவாக்கி அவர்களை தன்னம்பிக்கை உள்ளவர்களாக மாற்ற வேண்டும். தனது அமைச்சினூடாக ஊனமுற்றோர் பராமரிப்பு நிலையம் ஒன்றை அமைப்பதற்கு ஆர்வம் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

No comments: