Friday, April 10, 2009

நுவரெலியா மாவட்ட தோட்ட பகுதிகளின் அபிவிருத்திகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை.

மத்திய மாகாண சபையின் கீழுள்ள அமைச்சுக்கள் மூலமாக நுவரெலியா மாவட்டத்தின் தோட்டப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள் கடந்த காலங்களில் முறையாக மேற்கொள்ளப்படாததால் தோட்டப்பகுதி மக்கள் பெரும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக மத்திய மாகாணசபை உறுப்பினர் திகாம்பரம் சபையின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

குறிப்பாக மத்திய மகாண நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சுக்கு உட்பட்ட நுவரெலியா மாவட்டத்தின் சில பாதைகள் நீண்டகாலமாக செப்பணிடப்படவில்லை.

போடைஸ் - மன்றாசி, பூண்டுலோயா – டன்சினன், டிக்கோயா – சலங்கந்தை, மெரேயா-டெஸ்போர்ட், லிந்துலை-ராணிவத்தை என்பவற்றுக்கான பாதை மிக மோசமான நிலையில் உள்ளது.

மேலும் அட்டன்-எபோட்ஸிலி, அட்டன்-மறே, அட்டன் - எல்ஜின், தலவாக்கலை-கிறேட்வெஸ்டன், தலவாக்கலை-ராணிவத்தை, அட்டன்-டெம்பல்ஸ்டோ, அட்டன்-மேபீல்ட் ஆகிய தோட்டப்புறங்களுக்கான இ.போ.ச பஸ் சேவைகள் இடம்பெறுவதில்லை என்றார்.

No comments: